வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

எந்திரன் மக்களை சூறையாடும் சூத்திரன்

 

 பயித்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம் அரசியல் பலத்தையும் மீடியாவையும் கையில் வைத்துக்கொண்டு ஆள்வோரின் குடும்பம் செய்யும் அராஜகத்திற்கு அளவே இல்லை. இளைஞகர்கள் சினிமா என்ற மாயையில் விழுந்து சின்னாபின்னமாகி போயிருப்பதை கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் கண்கூடாக பார்க்கிறது.

சென்னையில் ஐம்பது விநாயகர் ஊர்வலமும் ஐம்பது மீலாது ஊர்வலமும் ஒரே நாளில் ஒன்றாக தாரை தப்பட்டையோடு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கொடுமை. கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வது,படப்பெட்டியை ஊர்வலமாய் பக்தியோடு இழுத்து செல்வது,பட்டாசு வான வேடிக்கை, திரை அரங்கின் வீதி முழுவதும் தூவப்பட்ட மலர்கள் இவை அனைத்தும் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளியின் உழைப்பு இவர்கள் திருந்துவது எப்போது?

இது ஒரு புறமிருந்தால் இதன் மறுபுறம் எல்லோரையும் பயித்தியக்காரர்களாக்கி நிதி குடும்பத்தின் நிதி திரட்டும் திறமை, மொத்தத்தில் எந்திரன் சண் குடும்ப வியாபாரத்தின் தந்திரன்.எந்திரன் அப்பாவி மக்களை சூறையாடும் சூத்திரன், இந்த அயோக்கிய தனத்தில் அறியாத நம் சமுதாய மக்களின் பங்கும் இருப்பது தான் கொடுமை.இலட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் இந்த சினிமா கூத்தாடிகளின் வியாபாரத்தில் நம் சமுதாயத்தவனின் உழைப்பு கடுகளவு கூட வீண் விரயம் ஆகி விடக்கூடாது என்பதே நம் அவா. இறைவன் நம் மக்களை சினிமா என்ற பொய்யான மாயையிலிருந்து காப்பாற்ற துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.


“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16