வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

ஈமானின் கிளைகள்

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)

ஈடிணையற்ற அருட்கொடை

மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அருட்கொடைதான் எத்தனை! எத்தனை! அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அதனை எண்ணிலடக்க முடியாது. (அல்குர்ஆன் 14:34)b

ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல் பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஈமான் முழுமையடைவது எப்போது?

ஈமான் என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் சூழ்ந்து நிற்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயராகும். ஏகத்துவக் கொள்கை என்பது ஈமானின் நுழைவாயில். அதனுள் நுழைந்த பிறகு அதில் கடக்க வேண்டிய எத்தனையோ கட்டங்கள்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)

எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.

ஆனால் நமது சமுதாயத்தில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தனக்கு ஓர் இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக்கொண்டதோடு ஈமான் முழுமை அடைந்துவிட்டது என திருப்தியடைபவர் ஒருபுறம். நான் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஆனால் வரதட்சணை வாங்கிக் கொள்வேன், என்னுடைய தொழிலில் வட்டித் தொடர்பிருக்கும் என சில கடமைகளைப் பேணி, பல கடமைகளை புறக் கணிப்பவர் மற்றொருபுறம், ரமலான்மாதத்தில் மட்டும் பள்ளிவாயிலுடன் தொடர்பு வைத்து, அதற்குப் பிறகு பள்ளி செல்ல அடுத்த ரமலானை எதிர் பார்த்திருக்கும் கூட்டத்தினரோ உலகெங்கிலும் ஏராளம். இவ்வகையினர் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிமாக வாழ்வது மிக வருத்தத்திற்குரியது.

ஈமானின் பயன்கள்

முழுமையடைந்த ஈமானின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் பல உள்ளன. அவை அம்மனிதனோடு மட்டும் நின்றுவிடாது பிறரையும் சென்றடைகின்றன. அல்லாஹ் கூறுகிறான்:

(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)

ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தில் ஆழப்பதித்து, அதை வாழ்வின் அனைத்துத் துறையிலும் வெளிப்படுத்தும் மனிதன் காய்த்துக் குலுங்கும் பயனுள்ள மரத்தைப் போன்றவன் என அல்லாஹ் கூறும் உவமையைக் கவனித்தீர்களா!

அது மட்டுமல்ல! அம்மனிதர் மரணிக்கும் போது மலக்குகள் அவரிடம் உரையாடுவதைக் கேளுங்கள்!

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்கள் மீது(அவர்களின் மரண வேளையில்)மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கச் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நாங்கள் உங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு. அதில் நீங்கள் தேடுபவை உங்களுக்குண்டு. மிகவும் மன்னிப்பவனான, கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக (அச்சுவனத்தைப்)பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,32)

இந்நிலையில் அவர் தன்வாழ்வின் இறுதி வார்த்தையாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடைதரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.

குவளையிலிருந்து ஊற்றப்படும் தண்ணீர் போல் மிக எளிதாக அவரின் உயிரை எடுத்து சொர்க்கக் கம்பளத்தில் வைத்து மலக்குகள் எடுத்துச் செல்ல, இவரின் பிரிவால் நல்லோர்கள் கண்ணீர் வடித்து துக்கத்தில் ஆழ்கின்றனர். ஏன்!

அவரின் மரணத்திற்காக வானம், பூமி கூட அழுகிறது. (கருத்து, அல்குர்ஆன் 44:29)

ஏகத்துவக் கொள்கை மற்றும் அது எதிர்பார்க்கும் அமலுஸ் ஸாலிஹ் எனும் நல்லறங்களுடன் வாழ்ந்த அம்மனிதர் நரகம் செல்லாமல் -இறையருளால்- நேரடியாக சொர்க்கம் செல்கிறார். இதுவல்லவா உண்மையான வெற்றி! அல்லாஹ் கூறுகிறான்:

யார் நரகை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ நிச்சயமாக அவரே வெற்றி அடைந்தவராவார். (அல்குர்ஆன் 3:185)

ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உண்மையான வெற்றி!

அன்புச் சகோதர, சகோதரிகளே! நாமும் நம்முடைய வாழ்க்கையை இவ்வாறு ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?! சற்று நிதானமாக, தனிமையில் உங்கள் உள்ளத்துடன் உரையாடுங்கள்! அல்லாஹ் விரும்புவதை உங்கள் விருப்பமாகவும் அவன் வெறுப்பை உங்கள் வெறுப்பாகவும் அவனிடம் கிடைக்கும் நற்பெயரையே உங்கள் இலட்சியமாகவும் ஆக்கிக் கொள்ள நாம் ஏன் முன்வரக் கூடாது?! சிந்தியுங்கள்! சுயபரிசோதனை செய்து, செயல்படத்துவங்குங்கள்! அல்லாஹ் அப்பாதையை உங்களுக்கு நிச்சயமாக எளிதாக்குவான்!

இதோ தங்களுக்கு முன் தங்கள் ஈமான் முழுமைபெற, அதன் மூலம் இறைநேசத்தைப் பெறுவதற்கான வழிகள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இதன்படி செயல்பட கிருபை செய்வானாக!

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.


2) இறைத்தூதர்களை நம்புவது.


3) மலக்குமார்களை நம்புவது.


4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.


5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.


6) உலக அழிவு நாளை நம்புவது.


7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.


8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.


9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.


10) அல்லாஹ்வை நேசிப்பது.


11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.


12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.


13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.


14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.


15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.


16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.


17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.


18) கல்வியைப் பரப்புவது.


19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.


20) தூய்மையாக இருப்பது.


21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.


22) ஜகாத் கொடுப்பது.


23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.


24) இஃதிகாஃப் இருப்பது.


25) ஹஜ் செய்வது.


26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.


27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.


28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.


29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.


30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.


31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)


32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.


33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.


34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.


35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.


36) கொலை செய்யாதிருப்பது.


37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.


38) திருடாதிருப்பது.


39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.


40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.


41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.


42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.


43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.


44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.


45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.


46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.


47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.


48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.


49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.


50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.


51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.


52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.


53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.


54) வெட்கப்படுவது.


55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.


56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.


57) நற்குணத்துடன் நடப்பது.


58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.


59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.


60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.


61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.


62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.


63) நோயாளியை விசாரிப்பது.


64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.


65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.


66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.


67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.


68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.


69) பிறரின் குறைகளை மறைப்பது.


70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.


71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.


72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.


73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.


74) அதிகமாக தர்மம் செய்வது.


75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.


76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.


77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.


78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

காலத்தின் அருமை

வல்அஸ்ர்" காலத்தின் மீது ஆணையாக.எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.
எனத் தொடங்கும் திருமறையின் 103 வது அத்தியாயத்தின் முதல் வசனம் காலத்தின் அருமையைக்காட்டும் அற்புதமான வசனமாகும்.. இவ்வாறு காலத்தை முன்னிறுத்தித் தொடங்கியிருப்புத மிகவும் சிந்தனைக்குரியதாகும்.. இச்சொல் அளவில் மிகச்சிறியதாக இருப்பினும் அது காட்டும் நுட்பமும் திட்பமும் மிக்க பொருள் வானைவிட விரிவானது.ஆணைப் பொருளாகிய காலத்திற்கும் அதைத் தொடர்ந்து நிறுவப்படும் கருத்துக்குமிடையே இழையோடுகின்ற தொடர்பினை காணும் போது நாம் வியந்து நிற்கிறோம். காலத்தின் அருமை பெருமைகளால் தான் காலத்தின் மீது ஆணையாக என இந்த அத்தியாயம் தொடங்குகிறது.
“காலத்தின் அருமையும் பெருமையும்”
காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இவ்வுலகில் எந்தப் பெருவீரனும், பேரரசனும் பெற்றிருக்கவில்லை. ஏழையும், ஏந்தலும், கோழையும், வீரனும், இளைஞரும் முதியவரும், ஆடவரும் பெண்டிரும் காலத்தின் ஆட்சிக்கு அடங்கியே ஆக வேண்டும்.
நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும் , ஆண்டுதோறும் மீண்டுவரும் பெரும் பொழுதும் காலத்தின் அருமையைல்லவா ? மழலைக்குழந்தை சிறுவனாகி, இளைஞனாகி, காளையாகி, முதுமையாகி கூனற்கிழவனாகி மாறுவதும் காலத்தின் விந்தையன்றோ ?
காலத்தின் பார்வையிலிருந்து எதனையும் நாம் மறைத்து விடமுடியாது.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர, காலம் ஒருபோதும் மனிதனுக்கு அடங்கி நடக்காது.
“காலமும் கடலலையும் எவருக்காகவும் காத்திராது” என்பது ஆங்கிலப்பழமொழி. “ஓரங்குலத் தங்கம் கொடுத்தாலும் ஓரங்குலக் காலத்தை விலைக்கு வாங்க முடியாது” என்பது சீனப்பழமொழி. “காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது” என்பது தமிழகப் பழமொழி.
“காலமென்பது ஓய்வற்றது !, உலகின் உயிர் போன்றது!நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு’.” இவ்வாறெல்லாம் அறிஞர் பெருமக்கள் பலர் இயம்பியுள்ளனர்.
காலத்தின் அருமையையும், நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும் தெளிவுபடுத்துகின்றன.
சிறு துள்ளி பெருவெள்ளமாதல் போன்று, பல மணித்துளிகள் ஒன்றிக்கலப்பதே காலமாகும். ஓரு நிமிட நேரம் அளவிற்குறுகியதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்ச்சிகள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.
1. ஒரு நிமிட நேரத்தில் நாம் வாழும் பூமி 950 மைல்கள் தன்னைத்தானே சுற்றிவிடுகின்றன.
2. 14000 கன அடி மழை மாநிலத்தில பொழிந்து விடுகின்றது.
3. 35000 டன் தண்ணீர் கடலில் கலந்து விடுகின்றது.
5. 68 கார்களும் 4600 செருப்புகளும் உற்பத்தியாகின்றன.
6. 114 குழந்தைகள் பிறக்கின்றன.
7. 100 பேர் இறக்கின்றனர்.
8. 34 திருமணங்களும் 3 மணவிடுதலைகளும் நிகழ்கின்றன.
9. 6000 விண்கற்கள் வீழ்கின்றன.
பல்லாண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு ஒரு புள்ளி விவரக்கணக்கெடுத்து காலத்தின் அருமையினை உணர்த்தினார் ஜெர்மானிய அறிஞர் ஒருவர். மிக வேகமாக வளர்ந்து வரும் இன்றைய நாளில் இவற்றை நூறாகப் பெருக்கினால் நேரத்தின் அருமை புரியும். இத்தகைய சீரும் சிறப்புமிக்க காலத்தின் மீது ஆணையிட்டு இறைவன் கூறும் மாண்புமிக்க அறிவுரை மனித குலத்துக்கு சீரிய அறிவுரையாகும்.
அதே வேளையில் வாழ்வின் குறிக்கோளை உணராமல் தான்தோன்றித்தனமாக நடக்கும் மக்களுக்கெல்லாம் இக்கருத்து ஒரு எச்சரிக்கையாக அமைகின்றது.
எடுத்ததும் துவக்கமே “மனிதன் நஷ் டத்திலிருக்கிறான்” என்ற தொடர் மனிதனுக்கு ஒரு வகை நடுக்கததைத் தருகிறது. தன்னைப் படைத்த நாயனை மறந்து பொருளைத் தேடுவதிலும் மனைவி மக்களோடு உல்லாசமாக பொழுதைக் கழிப்பதிலும் ஈடுபடுவோரும், வல்ல நாயனின் வழியிலே நடவாது சுகபோகங்களிலே மூழ்கி நிற்போரும் ஆடிப்பாடி குடித்துக் கும்மாளமடித்து சிற்றின்ப வேட்கையிலே தோய்ந்து கிடப்போரும் இறைவனை மறந்து ஆட்சி அதிகாரத்திலே செருக்கோடு வீற்றிருப்போரும் காலத்தின் வன்மையான பிடியிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
” காலம் வரும்போது இறைவனின் பிடி மிகவும்கடுமையானது” என்பதை
85: 12 என்ற மறை வசனம் எச்சரிக்கிறது. காலத்தின் அருமையும் அது உணர்த்தும் உண்மையும் உணராது புதைகுழியை சென்றடையும்வரை மனிதன் அதிகமதிகமாகச் செல்வத்தைத்தேடி குவித்து மகிழ எண்ணுகிறானே தவிர அவற்றை வழங்கிய வல்ல நாயனை எண்ணிப்பார்க்கவோ நன்றிப்பெருக்கோடு வணங்கி வழிபடவோ செய்யாது அவற்றிற்காக மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதையும் மறந்து வாழும் மனிதன் ‘பெரும் நஷ் டத்திலல்லவா’ உள்ளான் என்பதை மனிதன் சிந்தித்துப் பர்க்கவேண்டாமா ?

இயக்க வெறியும் இஸ்லாமும்

(சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றகட்டுரை)
அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.

(அல்-குர்ஆன் 3: 103)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது என்று கூறினார்கள்.

எந்த வகையிலும் இந்த சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். எந்தளவுக்கு என்றால் பள்ளியில் ஒரு இமாமை பின்பற்றி ஜமாத்தாக தொழவரும் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்திரிப்பதைக் கண்டு உங்களுக்கு என்ன வந்து விட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காண்கிறேன் என்று கண்டித்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமீரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்

ஜிஹாத் செய்வதற்காக புறப்பட்ட ஸஹாபாக்கள், ஓய்வு நேரத்தில் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

அபூசா அல்பா(ரலி) அறிவிக்கின்றார்கள் ஜிஹாதில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள் முகாமிட்டபோதெல்லாம் தங்கள் வசதிக்காகத் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) நீங்கள் இவ்வாறு பிரிந்திரிப்பது ஷைத்தானின் யுக்திகளில் ஒன்றாகும் என்று எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு முஸ்லிம்கள் எங்கே முகாமிட்டாலும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்து நெருங்கிப் படுத்தே ஓய்வெடுப்பார்கள், எந்த அளவிற்கு நெருங்கிப் படுத்திருப்பார்கள் என்றால் ஒரே போர்வையைக் கொண்டே அவர்களைப் போர்த்திவிடலாம். (ஆதாரம்: அபூ தாவூத்)

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் எந்த காரணத்திற்காகவும் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என நபி(ஸல்) பலமான தடுப்பு சுவரை கட்டி வைத்துவிட்டே சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்களாகிய நாம் மத்ஹபுகள் பெயரிலும், தரீக்காக்கள் பெயரிலும், இயக்கங்கள் பெயரிலும், நபி(ஸல்) அவர்கள் கட்டிக்காத்த சுவரை இடித்து தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறோம்.

உம்மத்தன் வாஹிதா:


அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக உங்கள் உம்மத் - சமுதாயம் - (பிரிவுகளில்லா) ஒரே சமுதாயம் தான்.. (அல்-குர்ஆன் 21: 92) என்று பறைசாற்றுகிறான்.

மேலும் கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; (அல்-குர்அன் 3: 10).



அல்லாஹ்வை திடமாக நம்பும் இந்த உம்மத்தவர்களைப் பார்த்து மேன்மைமிக்க சமுதாயம் என்கிறான்

இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; ... (அல்-குர்ஆன் 2: 143).

நம்மை நடுநிலை சமுதாயம் என்றும் புகழ்ந்தும் கூறுகிறானே!. அதற்கு தகுதியுடயவர்களாக நாம் இருக்கிறோமா? பலவாறாக பிரிந்து சிதறிய சமுதாயத்தை வல்ல அல்லாஹ் ஒன்றுபடுத்தி இனி பிரியக்கூடாது என எச்சரித்தபின்பும் அலட்சியம் செய்து உலகெங்கும் முஸ்லிம்களே முஸ்லிம்களை அடித்து சாகும் நிலை எதனால் ஏற்பட்டது.

கண்ணாடி போன்றவர்:


ஒருவர் முஃமினாக இருக்கக்கூடிய நிலையில் சமுதாயத்தை பிரிக்கவோ, சமுதாயத்தை விட்டு பிரிந்து நிற்கவோ ஒருபோதும் எண்ணமாட்டார். ஏனெனில். ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவர் என்றும் ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் உடம்பை போன்றவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு முஃமினுக்கும் மற்றொரு முஃமினுக்கும் உள்ள தொடர்பை எந்தளவிற்கு ஆணி அடித்தாற் போல் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதை இந்த சமுதாயத்திலுள்ள தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா?

இயக்கங்கள்:


கடந்த கால வரலாற்றில் மனித சமுதாயம் வழி தடுமாறிச் செல்லும் போதெல்லாம், முஸ்லிம்களில் பெரும்பாலோர் தமது பணிகளை செய்யத் தவறியபோதெல்லாம், முஸ்லிம்களை தட்டியெழுப்பி குர்ஆனை படித்து விளங்கி செயல்படவும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பற்றிப் பிடித்திடவும், நீண்ட நெடுங்காலமாக பல மார்க்க அறிஞர்கள் அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.

தூய இஸ்லாத்தைப் பேணி நடந்து, நீதி நெறி ஆட்சி செய்த கலீஃபாக்கள் முதல் மரியாதைக்குறிய இமாம்களிலிருந்து அடுத்தடுத்த காலகட்டங்களில் இந்த நூற்றாண்டு வரை உலகளவில் பற்பல நாடுகளில் பல்வேறு அறிஞர் பெருமக்களும், உலமாக்களும் செய்த பணிகளும் தியாகங்களும் அபார இமாலய சாதனைகள். இப்படி இஸ்லாத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மார்க்க அறிஞர்கள் பல வகையில் தனது அறிவை கொண்டு சிந்தித்து தான் விரும்பிய அமைப்பை முஸ்லிம் சமுதாயத்தின் முன் வைக்கிறார்கள்.

இன்று உலகத்தில் புதிய இயக்கம், புதிய ஜமாத், உருவாக்குவது கவர்ச்சிகரமானதாகிவிட்டது. சந்தோஷமாக இளைஞர்களை ஈர்க்க கூடியதாக உள்ளது. பொதுவாக இன்றைய உலகில் இளைஞர்களிடம் வேலை வாங்குவதென்றால் அவர்களுக்கு ஒரு பதவியை கொடுத்து விட்டால் போதும், பம்பரமாய் சுழல்வார்கள். அவர்களை அவ்வாறு சுழல வைப்பது பதவிதான். இவ்வுலகை பொருத்தவரை தவறில்லை. ஆனால் மறுமையைக் குறிக்கோளாகக் கொண்ட முஸ்லிம்கள், பதவி கிடைப்பது கொண்டு உழைக்க முன்வரும்போதும், புகழுக்காகவோ, பிறஅமைப்பை மிஞ்சி செயல்பட வேண்டும் என்று பம்பரமாய் சுழன்று தீனுக்காக பாடுபட்டாலும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தம் எடுபட்டு விடுகின்றது.

நபி(ஸல்) கூறினார்கள்: உலக புகழுக்காகப் போராடி வெட்டுப்பட்ட ஷஹீத், மார்க்கம் போதித்த ஆலிம், வாரிவழங்கிய கொடைவள்ளல் அனைவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகில் தூக்கி எறியப்படுவார்கள், (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்.



காரணம் அல்லாஹ்வின் பொருத்தமில்லாமல் இந்த உலகில் பெருமை பாராட்ட வேண்டும் என்று நினைத்ததால்.

இயக்க அமைப்புகளில் செயல்படும்போது, இன்றைய அரசியல் கட்சிகளிலும், உலகலாவிய இயக்கங்களில் காணப்படும் போட்டி, பொறாமை, வெறித்தனம், பதவியாளர்களுக்கிடையே கடும் மோதல், அதனால் மனகசப்புகள், குரோதம் உட்பூசல்கள் இவை அனைத்தும் இந்த இஸ்லாமிய இயக்கங்களிலும் குறைவில்லாமல் காணப்படுகின்றன. இஸ்லாத்தின் உண்மையான வளர்ச்சியில் அக்கரை கொண்டுள்ள சகோதர, சகோதரிகள் ஹதீஸை கவனத்தில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும்.

இயக்க வெறிக்கு அடிமையாகுதல்:


ஒரு இயக்கத்தைத் திறம்பட நடத்திவிடுவதால் முஸ்லிம் சமுதாயம் மேன்மையடைந்துவிடப் போவதில்லை என்பதை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.

உதாரணமாக காதியாணிகள் தங்கள் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். உலகின் பல பகுதிகளில் அவர்களின் கிளைகள் இயங்குவதாக அறிவிக்கிறார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்க்கு வரவு-செலவு இருப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் சாதித்து விட்டதாக சொல்லிக்கொள்ள முடியுமா? சரிந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை தூக்க நிறுத்த அவர்களால் முடிந்ததா? சிந்தியுங்கள். அதே போல் மாற்று மதங்களிலும் எண்ணற்ற இயக்கங்கள் மிகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

இயக்கங்களை மிகத்திறம்பட நாம் இயக்கிக்காட்ட முடியும். ஆனால் ஒன்றும் சாதிக்க முடியாதது எது தெரியுமா? சுமார் 1000 வருடங்களுக்கு முன் சரிந்துவிட்ட முஸ்லிம் சமுதாயத்தை மீண்டும் அதன் உன்னத நிலைக்கு கொண்டு வர வேண்டும். நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை அப்படியே அடிபிசகாமல் பின்பற்றுகிறவர்களால் மட்டுமே அது சாத்தியமாகும். இயக்கவெறிக்கு அடிமையாகாமல் தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக பாடுபடும் இளைஞர்களை உருவாக்க வேண்டும். இளைஞர்களின் உள்ளங்களில், அல்லாஹ்வுக்காக பாடுபட்ட நபித்தோழர்கள் அடைந்த அந்த ஆர்வத்தை ஒற்றுமையை இவர்களும் அடைய பயிற்றுவிக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு:


களைந்து எரியப்படவேண்டிய கருத்து வேறுபாடுகள் இன்று முஸ்லிம்களிடம் ஒரு கலையாகவே வளர்க்கப்பட்டு புதிது புதிதாய் புற்றீசலாய் தோன்றி, எதுவும் தீர்க்கப்படாமல் உள்ளது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்த நிலையில் கருத்து வேறுபாடுகளை களைந்து தீர்வு காண யாருமே முன்வரவில்லை என்பதை நாளும் வளர்ந்து வரும் கருத்துவேறுபாடுகள் மெய்பிக்கின்றன.

கருத்து வேறுபாடுகளின் ஆரம்பம் இந்த மத்ஹபுகள் தான். இந்த நான்கு மத்ஹபுகள் அல்லாமல், அறியாத மத்ஹபுகள் நிறைய உள்ளது. நபி(ஸல்) காலத்திலும், ஸஹாபாக்கள் காலத்திலும் கருத்துவேறுபாடுகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன. இதுவே இன்று சிந்தனைக்கும், கவனத்திற்கும் உரியது. தீர்வாகாமல் எந்த கருத்துவேறுபாடும் தற்காலிகமாகக்கூட நிறுத்தி வைக்கப்படவில்லை. கருத்து வேறுபாடுகளைக் காட்டி யாரும் பிரிந்து செல்லவுமில்லை. பிளவுகளை உண்டாக்கவுமில்லை. முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து திகழ்ந்தார்களே அவர்களிடம் படிப்பினை பெற வேண்டும்.

அல்லாஹ்வின் கட்டளையை மீறலாமா?


இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட போகிறோம் என்று மார்தட்டிக்கொண்டு, அன்னியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு ஓடோடி விரட்டிய இஸ்லாமிய இயக்கங்களுக்கு, அங்கு இஸ்லாமிய ஆட்சி அமைக்க முடிந்ததா? முடியவில்லையே! முஸ்லிம்களே முஸ்லிம்களை குண்டுக்கு இறையாக்கும் அவலம் தொடர்ந்து நடைபெறுகிறதே! உலக முஸ்லிம் சமுதாயமே! உங்களுக்கு தொடர்ந்து தோல்வி ஏற்படுவதற்கு அல்லாஹ் இட்டகட்டளையை ஏதோ ஒன்றை மீறிக் கொண்டிருக்கின்றீர்கள். சிந்தியுங்கள் அது வேறு ஒன்றுமல்ல நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்திருக்கின்றீர்களா? இல்லை! இற்றுப்போன கந்தல் கயிறுகளை பற்றி பிடித்துக்கொண்டு பிரிந்து நிற்கும் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை காப்பாற்றியே தீருவோம் என்று கோரஸ் பாடினார்களே! முடிந்ததா?

அல்லாஹ் கூறுகிறான்:

எந்த சமுதாயம் தம்மை தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்தமாட்டான்.

(அல்-குர்ஆன் 3: 11)

இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம்களுக்கு கடுமையான பின்னடைவும், இன்னல்களும், துன்பங்களும், அழிவும், நாசமும், பொருளாதார பாதிப்பும் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருப்பதற்கு அடிப்படை காரணம் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை துச்சமாக மதித்து நடப்பதேயாகும். இஸ்லாம் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் ஒன்றுப்பட்டிருந்த அரபு நாட்டினர் இன்று அவர்களின் மார்க்கம் இஸ்லாமாக இருந்தும் தாய்மொழி அரபியாக இருந்தும் சவூதி, குவைத், யமன், ஓமன், பாலஸ்தீன் என பல்வேறு பிரதேச அடிப்படையில் பெருமை பேசி பிரிந்து கிடப்பது பெறும் தவறாகும். இப்பேதங்களை மறந்து அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விட்டாலே போதும் இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

அல்லாஹ் நம்மை பார்த்து, ஒற்றுமையாக இருங்கள் பிரிந்து விடாதீர்கள் அப்படி பிரிந்தால் கோழையாகி விடுவீர்கள், பலவீனப்பட்டு போவீர்கள், இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் நஷ்டத்தை சந்திப்பீர்கள், அழிவின் அதால பாதாளத்திற்கு போய் விடுவீர்கள். வரம்பு மீறாதீர்கள் ஒருவரை ஒருவர் மதியுங்கள், ஒருவரின் உயிர், உடமை, மானம் போன்ற அமானிதத்திற்கு கேடு விளைவிக்காதீர்கள், பிறரை இழிவாக, கேவலமாக எண்ணியும், உங்களை உயர்வானவர்களாக நினைத்தும் பெருமை கொள்ளாதீர்கள், பீற்றிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன உபதேசத்தை காற்றில் வீசிவிட்டு தாங்களாக ஆளுக்கொரு மத்ஹபுகளை, தரீக்காக்களை, இயக்கங்களை உண்டாக்கிக் கொண்டு செயல்பட்டால் அல்லாஹ் நம் நிலையை மாற்றமாட்டான் என்பது அல்லாஹ்வின் தெளிவான எச்சரிக்கையாகும்.

கருத்து வேறுபாடு:


உண்மையான ஒற்றுமை என்ன என்பதை உணர்வதும், உணர்த்துவதும் அவசியமாகும். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டளைகளுக்கு மாற்றமாக, பெரியோர்கள், இமாம்கள், முன்னோர்கள் சொல்படி பிடிவாதமாக செயல்படும் முஸ்லிம்கள், அவர்களுக்குள் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், சண்டை சச்சரவுகள், கொடுக்கல், வாங்கல் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது. (ஹதீஸ்).

குரோதம் களைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மவர்கள் கொள்கை விஷயத்தில் ஏற்படும் சிறுசிறு விஷயத்தைக்கூட மலையளவு பெரிதுபடுத்தி ஆத்திரப்படும் அளவுக்கு பிரச்சனைகளை உருவாக்கி கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறியே நிரந்தரமாக பிரிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட இஸ்லாம் கருத்து வேறுபாட்டை களைந்து ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கின்றது. ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், காரசாரமான வாதங்களும், சச்சரவுகளும் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள், பிரிந்துவிடவில்லை.

இப்னு உமர்(ரலி) அவர்கள் 'ஹஜ்ஜாஜு பின் யூசுப்' என்னும் மிகக்கொடிய அநியாயம், அக்கிரமம் செய்து கொண்டிருந்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள். என்று இமாம் புஹாரி(ரஹ்) அவர்களும் அபூ ஸயீதில் குத்ரி(ரஹ்) அவர்கள் பெரும் குழப்பவதியாக இருந்த மர்வான் என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும் மற்றும் திர்மிதி, அபூதாவூத், நஸயி, முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள். ஆக ஸஹாபாக்கள் மத்தியில் சமுதாயத்தை பிரித்து உடைத்தெரியும் விஷயத்தில் கடுகின் முனையளவு கூட விரும்பக் கூடியவர்களாக இல்லை.

போர்க் கால அவசியம்:
ஒரு முஸ்லிம் ஏதேனுமொரு இயக்கத்தில் இனையவில்லையென்றால் அது வியப்பிற்குறிய செய்தியாக பேசப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவினர்களாக பிரிந்து விட்;டனரோ (அவ்வாறு ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்-குர்ஆன் 30: 32)

இன்றே முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். நம்மவர்களிளேயே சிலர் இக்கால கட்டத்தில் அது சாத்தியமில்லை என்று விமர்சிப்பது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றது. அனைத்து முட்டுக்கட்டைகளையும் தகர்க்க வேண்டும். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுபட தடையாக இருப்பவைகளை உடைத்தெரிய அனைத்து முஸ்லிம்களும் போர்க்கால அவசரத்துடன் முயல வேண்டும். இனி ஒற்றுமையை வெற்று முழக்கங்களாலும், வெறும் கோஷங்களாலும் உருவாக்க முடியாது. உழைப்பு மற்றும் முயற்சியால் மட்டுமே உருவாக்க முடியும்.

நம்மை பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் நிச்சயமாக சன்மார்க்கமான உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம்தான். மேலும் நானே உங்களுடைய இறைவனாக இருக்கிறேன்! எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் (அல்-குர்ஆன் 23: 52)

(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் காரியங்களில் பிளவுபட்டனர்... (அல்-குர்ஆன் 21: 93)

நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றொருவருக்கு) சகோதரர்களே! ஆகவே சண்டையிட்டுக் கொள்ளும் உங்களுடைய இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள் அருள் செய்யப்படுவதற்க்காக அல்லாஹ்வுக்கு பயந்துக் கொள்ளுங்கள்! (அல்-குர்ஆன் 49: 9-10)

(1) அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள் (2) இத்தூதருக்கும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் (3) பின்னர் உங்களுக்குள் ஏதேனும் ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு (பிணக்கு, தர்க்கம்) ஏற்பட்டால், அதை அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் (தீர்வுக்காக) கொண்டு செல்லுங்கள். (4) நீங்கள் அல்லாஹ்விடத்தும், மறுமைநாளிடத்தும் உறுதியான ஈமான் கொண்டோர்களாயின் இதுவே (உங்களுக்கு) மிகவும் சிறப்பான அழகான முடிவாயிருக்கும். (அல்-குர்ஆன் 4: 59)

யாஅல்லாஹ்! நாங்கள் அனைவர்களும் முழு இஸ்லாமிய வாழ்க்கையில் நுழைந்திடவும், குர்ஆன், ஹதீஸை வாழ்க்கையின் துணையாக அமைத்து வழி நடத்திய சத்திய ஸஹாபாக்கள் எப்படி செயல்பட்டார்களோ அதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற அருள் புரிவாயாக. ஆமீன்!

திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)


திருக்குர்ஆனும் அறிவியல் அற்புதங்களும் (மலை, மின்னல், எரிமலை)
மழையும் மாமறையும் நாம் சுவாசிக்கின்ற ஆக்ஸிஜன், நமக்குப் பலனளிக்கும் நைட்ரஜன், வெப்பத்தைத் தக்க வைக்கும் கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது வளி மண்டலம்! அந்த வளி மண்டலம் இண்டு இடுக்குகள் இல்லாமல் ஐந்து அடுக்குகளாக அமையப் பெற்று சூரியனின் புற ஊதாக் கதிர்களை உள்ளே ஊடுருவாமல், பிரமாண்டமான வால் நட்சத்திரங்களை உள்ளே நுழைய விடாமல் இந்தப் புவியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வளி மண்டலத்தைத் தன் கைவசம் வைத்திருப்பது புவி ஈர்ப்பு விசை என்பதை அறிந்தோம். இந்தப் புவி ஈர்ப்பு விசையின் இன்னொரு பயன் வானிலிருந்து மழையைப் பெற்றுத் தருவதாகும். அது எப்படி? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு முன்னால் தாகம் தீர்க்கும் மேகத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். பென்னம் பெரும் மலைகளைப் போல் வானத்தில் திரண்டு நிற்கும் கன்னங்கருத்த மேகத்தை நாம் பார்க்கின்றோம். இந்த மேகம் இவ்வாறு திரள்வதற்கு முன்பாக இரண்டு கட்டங்களைச் சந்திக்கின்றன. மூன்றாவது கட்டமாகத் தான், சூழ் கொண்ட இந்தத் திரட்சி நிலையை அடைகின்றன. பஞ்சுகளைப் போல் திட்டு திட்டாக தனித்தனியாக மிதந்து நிற்கும் குட்டி குட்டி மேகங்களைக் காற்று தள்ளிக் கொண்டு செல்கின்றது. இவை அனைத்தும் ஒன்றிணைகின்றன. இவ்வாறு ஒன்றிணைந்த மேகங்கள் செங்குத்தாக விண்ணை நோக்கி எழுகின்றன. குவியக் கூடிய இந்த மேகங்களின் மத்திய தொகுதி ஓர் இழுவை சக்தியாக செயல்பட ஆரம்பித்து தன் இரு பக்கவாட்டிலும் உள்ள மேக சகாக்களை அரவணைத்து விண்ணை நோக்கி செங்குத்தாக இழுத்துச் செல்கின்றது. விண்ணகத்தின் குளிர்ந்த பகுதியை நோக்கி இது இழுத்துச் செல்லப் படுகின்றது. அவ்வாறு இழுத்துச் செல்லும் போது அந்த மத்தியப் பகுதியான இழுவை சக்தி குளிரினால் பொழிந்து சிந்தி விடாமல் பக்கவாட்டிலுள்ள மேகங்கள் பார்த்துக் கொள்கின்றன. விண்வெளியின் குளிர் பகுதியின் உச்சி நிலைக்குச் செல்லச் செல்ல மேகத்தின் வயிற்றில் ஆலங்கட்டிகள், நீர் திவளைகள் சூல் கொண்டு மேகத் தொகுப்பின் எடை கூடுகின்றது. ஆக, அந்தரத்தில் கன்னங்கருத்த கனமான இமயத்தை விஞ்சும் அளவுக்கு 25,000 முதல் 30,000 அடி வரை ஒரு பெரும் மலை உருவாகின்றது. தனது எல்லைக்குள் இப்படி ஆலங்கட்டிகள் தொகுப்பாக கனமான ஒரு மலையாக ஏறுவதை அனுமதிக்காக புவி ஈர்ப்பு விசை அம்மலையை கீழ் நோக்கி இழுக்கின்றது. அது தான் நம் மீது அருளாகப் பொழிகின்ற மழை! இது மழையைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு! இப்போது விஷயத்திற்கு வருவோம். வானிலை ஆராய்ச்சியாளர்கள் இன்று இந்த மேகங்களை நாம் மேற்கண்டவாறு வகைப்படுத்துகின்றனர். இப்படி சூல் கொண்டு திரண்டெழுந்து நிற்கும் இந்த மேகக் கூட்டத்திற்கு ஈன்ம்ன்ப்ர்ய்ண்ம்க்ஷன்ள், ஈப்ர்ன்க் என்று குறிப்பிடுகின்றனர். இன்று வானியல் வல்லுநர்களால் வகைப்படுத்தப் பட்ட இந்த மேகத் திரட்சியை, மழைப் பொழிவை எந்தப் பல்கலைக் கழகத்திலும் போய் படித்து மேதையாகிடாத, ஏடெத்துப் படித்திராத முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் எப்படிச் சொல்ல முடிந்தது? மேற்கண்ட நவீன கண்டுபிடிப்புகளை அச்சுப் பிசகாமல் அப்படியே அல்குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்! அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43) இதிலிருந்து புனித ரமளான் மாதத்தில் இறங்கத் தொடங்கிய இந்த வேதத்தின் வசனங்கள் படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்று சான்று கூறி நிற்கின்றன! இந்த வசனத்தில் அல்லாஹ், மேகங்களுக்குப் (பனி) மலைகள் என்ற பதத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்று வானியல் ஆய்வாளர்கள் சொல்லும் இந்தக் கருத்தை அல்குர்ஆன் அன்றே சொல்லி முடித்திருக்கின்றது எனும் போது இது நூற்றுக்கு நூறு அல்லாஹ்வின் வேதம் தான் என்ற நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கின்றது. மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் முடிக்கும் போது, "அதன் மின்னொளி கண்ணைப் பறிக்கப் பார்க்கின்றது" என்று சொல்லி முடிக்கின்றான். அதன் மின்னொளி என்றால் எதன் மின்னொளி? இதற்கான விளக்கத்தை அடுத்து வரும் மின்னல்’ என்ற தலைப்பில் பார்ப்போம். மின்னல் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது. (அல்குர்ஆன் 24:43) இந்த வசனத்தில் மின்னலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதன் மின்னல் என்று மின்னலை ஏதோ ஒன்றுடன் இணைத்து அல்லாஹ் கூறுகின்றான். எதன் மின்னல்? என்ற கேள்விக்கு நாம் விடையைத் தேடினால் இந்த வசனத்திலேயே இதற்கு முன்பாக ஆலங்கட்டியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகின்றது. அதன் மின்னல்’ என்பது ஆலங்கட்டியின் மின்னல்’ என்று திருக்குர்ஆன் பதில் கூறுகின்றது. அது சரி! ஆலங்கட்டிக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது. எனவே இந்த மின்னலைப் பற்றி அறிவியல் உலகம் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். ஒன்றாகத் திரண்டு நிற்கும் மேக மலையின் மேற்பகுதியில் உள்ள ஆலங்கட்டிகள், அதிகம் குளிர்ந்து போன நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகளின் மேல் விழும் போது மேகங்கள் மின் காந்தப் புலன்களைப் பெற்று விடுகின்றன. இந்த நேரத்தில் குளிர்ந்த நீர்பபகுதிகள் மற்றும் பனித்துகள்களிலிருந்து எலக்ட்ரான்கள் கிளம்பி சூடான ஆலங்கட்டிகளை நோக்கித் தாவுகின்றன. அதனால் ஆலங்கட்டி எதிர் மின்னூட்டத்தையும் குளிர்ந்த நீர்ப்பகுதிகள் மற்றும் பனித்துகள்கள் நேர் மின்னூட்டத்தையும் பெறுகின்றன. இதன் விளைவாக நேர் மின்னூட்டம் பெற்ற சின்னஞ்சிறு பனித்துகள்கள் உடைந்து சிதறுகின்றன. சிதறிய சின்னஞ்சிறு சிதறல்கள் மேகத்தின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது அங்கு ஏற்கனவே எதிர் மின்னூட்டத்தைப் பெற்றிருக்கின்ற ஆலங்கட்டிகள் மேகத்தின் அடிப்பாகத்தில் விழுகின்றன. கீழே விழுந்த ஆலங்கட்டிகளின் எதிர் மின்னூட்டங்கள் தான் மின்னல் வெட்டுவதன் மூலம் வெளியேற்றப் படுகின்றன. இந்த மின் வெட்டு தன்னைச் சுற்றிலும் உள்ள காற்றை 30,0000 C அளவுக்கு வெப்பப் படுத்துகின்றது. இது சூரியனின் மேற்பரப்பிலுள்ள வெப்பத்தை விட 5 மடங்கு அதிகமாகும். (சூரியனின் மேற்பரப்பு வெப்பம் 60000 C) இந்த அளவுக்கு வெளியாகும் வெப்பம் காற்றை வெகு வேகமாக விரிவுபடுத்துகின்றது. இதில் உருவாவது தான் இடி முழக்கம்! இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம், அதன் மின்னல் என்று கூறியதன் மூலம் மின்னலுக்குக் காரணம் ஆலங்கட்டி தான் என்று அல்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன் சொன்ன உண்மையை இன்று வானிலை ஆய்வாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவும் அல்குர்ஆன் தூய நாயனான அல்லாஹ்வின் வேதம் என்பதற்கு ஓர் அற்புதமான அறிவியல் சான்றாகும். விண்ணகத்தில் வெப்பத்தைப் பிரசவித்து வெளிவரும் இந்த மின்னல் மண்ணகத்தில் என்ன சாதித்துக் கொண்டிருக்கின்றது? இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நாம் வியக்கும் வண்ணம் கூறுகின்றான். அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான். இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன். (அல்குர்ஆன் 13:12,13) இவ்விரண்டு வசனங்களும் மின்னல், இடியைப் பற்றி விளக்குகின்றன. இடி, மின்னல் எவ்வாறு உருகின்றன என்பதை மேலே நாம் கண்டோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விரண்டில் மின்னலைப் பற்றி குறிப்பிடும் போது, அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலைக் காட்டுகின்றான் என்று கூறுகின்றான். மின்னல் பளிச்சென்று வெட்டி மறையும் போது நம்முடைய நாடி நரம்புகளில் அச்ச அலைகள் ஓடிப் பரவுகின்றன. 30,0000 ஈ வெப்பத்தை ஏற்படுத்தும் மின்னலைப் பற்றி அச்சம் தரக் கூடியது என்று அல்குர்ஆன் கூறுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் மின்னலில் எதிர்பார்ப்பு, ஆதரவு உள்ளது என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து என்ன கருத்தை அவன் சொல்ல வருகின்றான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்த வேண்டும்? என்ற விளக்கத்தைக் காண நாம் களமிறங்குவோம். வளி மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதவிகிதமும், ஆக்ஸிஜன் 21 சதவிகிதமும், கார்பன் டை ஆக்ஸைடு 0.033 சதவிகிதமும், ஆர்கான், நியான், ஹீலியம், மீதேன், ஹைட்ரஜன் ஆகிய வாயுக்கள் மிகக் குறைந்த அளவிலும் கலந்துள்ளன என்பதை வளி மண்லத்தில் கலந்திருக்கும் வாயுக்கள் என்ற தலைப்பில் முன்னர் கண்டோம். ஒரு தடவை மின் வெட்டி மறையும் போது, ஏதோ மின் வெட்டி மறைகின்றது என்று நாம் கண் சிமிட்டி விட்டு அதைக் கண்டு கொள்ளாது விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு தடவை மின்னல் வெட்டுகின்ற போது அங்கு ஒரு கல்யாணமே நடந்து முடிகின்றது. ஆம்! காற்றிலுள்ள 78 சதவிகித நைட்ரஜனும் 21 சதவிகித ஆக்ஸிஜனும் ஒன்றாகக் கலந்து கை கோர்க்கின்றன. இதனால் பிறக்கின்ற குழந்தை தான் நைட்ரேட்டுகள்! நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் ஒன்று சேர்ந்ததும் நைட்ரேட் உருவாகின்றது. இந்த நைட்ரேட்டுகள் மழை நீருடன் கலந்து நீர்த்த நைட்ரிக் அமிலமாக மாறி மழையாகப் பொழிகின்றது. வளி மண்டலத்திலுள்ள இந்த நைட்ரஜனை ஏற்கனவே மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் கவர்ந்து நைட்ரேட்டுகளாக மாற்றுகின்றன! இந்தப் பணியை மின்னல் வந்து பாய்ந்து வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜன்களை உடைத்து அமிலமாக, சத்தாக, சாறாக மாற்றி மழை நீருடன் ஆறாக ஓடச் செய்கின்றது. மண்ணுக்குள் கால்சியம், இரும்பு, அலுமினியம் போன்ற கனிமங்கள் இருக்கின்றன. அந்தக் கனிமங்களுடன் இது கலக்கும் போது அவற்றின் நைட்ரேட்டுகள் உருவாகின்றன. கால்சியத்துடன் கலக்கும் போது கால்சியம் நைட்ரேட்டு உருவாகின்றது. இவை தான் மண்ணில் விளைகின்ற தாவரங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுகின்றன. இவற்றை நேரடியாக மனிதன் சாப்பிடுவதன் மூலமோ அல்லது இவற்றைச் சாப்பிடும் ஆடு, மாடுகளின் இறைச்சியைச் சாப்பிடுவதன் மூலமோ மனிதன் நைட்ரஜனைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றான். மனிதனுடைய உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த நைட்ரஜன் அவன் இறந்தவுடன் மீண்டும் அது மண்ணிலேயே போய் சேர்ந்து விடுகின்றது. மனித உடலில் மட்டுமல்லாது மொத்த உயிரினங்களின் உடலிலும் நைட்ரஜன் கலந்து அந்த உயிரினங்கள் மடிந்ததும் மண்ணில் கலந்து விடுகின்றது. பின்னர் மீண்டும் காற்றிலேயே கலந்து விடுகின்றது. இதற்குப் பெயர் தான் நைட்ரஜன் சுழற்சி என்று வழங்கப் படுகின்றது. சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் மின்னலுக்கு ஏன் எதிர்பார்ப்பு என பெயர் வைத்தான் என்ற உண்மை நமக்கு மின்னல் போல் பளிச்சிடுகின்றதல்லவா? மிகப் பெரிய ஆற்றலாளனான அவன் நைட்ரஜன், ஆக்ஸிஜன் என்ற பின்னல்களில் மின்னலைப் பாய்ச்சி நம்மை வாழ வைக்கின்றான். நாம் எப்படி அவனுக்கு நன்றி செலுத்த மறந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்! மின்னலில் பொதிந்திருக்கும் இந்த ஆற்றலை அறிவியல் உலகம் கண்டு பிடிப்பதற்கு முன்னால் அன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் குர்ஆனில் சொல்லி முடித்த அந்த நாயன் மிகப் பெரியவனே! அல்லாஹு அக்பர்! எரிமலையும் இறைமறையும் வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் மிகவும் பிரபலமானது பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) ஆகும். இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட அனைத்து கோள்களும் துணைக் கோள்களும் நட்சத்திரங்களும் ஒரே பொருளாகத் தான் இருந்தன. இந்தப் பொருள் பூமியை விட 318.5 மடங்கு எடையைக் கொண்டதாகவும் மிக மிக அடர்த்தியானதாகவும் இருந்தது. அந்தப் பொருள் ஏதோ ஒரு வானியல் மாற்றத்தால் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இது சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதற்குப் பிறகு புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுப் படலம் ஈர்ப்பு விசையின் காரணமாக சிறிது சிறிதாக இணைந்து பெரிதாகி இப்போதுள்ள கோள்கள், துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றின. இவ்வாறு தூசுப் படலத்திலிருந்து பிரிந்து கோள்கள் உருவான நிகழ்வு சுமார் 500 கோடி முதல் 750 கோடி வருடங்களுக்கிடையில் நடைபெற்றது. இது தான் பெரு வெடிப்புக் கொள்கை (இண்ஞ் க்ஷஹய்ஞ் ற்ட்ங்ர்ழ்ஹ்) ஆகும். மனிதன் தன்னுடைய விஞ்ஞான அறிவையும் நவீன கருவிகளையும் கொண்டு இந்தப் பேரண்டம் எவ்வாறு தோன்றியது என்ற வரலாற்றை தற்போது கண்டறிந்துள்ளான். ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி யாருக்காவது தெரிந்திருந்ததா? பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றைப் பற்றி வெறும் கதைகளையும் கற்பனைகளையும் நம்பிக் கொண்டிருந்த காலம். இன்று கூட மற்ற மதங்களின் வேதங்களில் இந்தக் கதைகள் தான் கூறப்படுகின்றன. பேரண்டத்தின் தோற்றம் குறித்து திருக்குர்ஆன் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம். வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30) பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. (அல்குர்ஆன் 41:11) என்ன அற்புதமான வார்த்தைகள்! பூமியும் இதர கோள்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன என்பதையும் அதன் பிறகு புகை போன்றிருந்த நிலையில் தான் அனைத்தும் உருவாயின என்பதையும் இவ்விரு வசனங்களும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலே நாம் கூறியுள்ள பெரு வெடிப்புக் கொள்கையையும்  இந்த இரு வசனங்களையும் படித்துப் பாருங்கள்! உண்மையிலேயே நமது உடலைப் புல்லரிக்கச் செய்கின்றதல்லவா? இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். எனவே திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது. அடுப்பிலிருந்து ஒரு தீக்கங்கை கிடுக்கியில் தனியாக எடுத்து ஓரிடத்தில் வைக்கின்றோம். நேரமாக நேரமாக அந்தத் தீக்கங்கின் மேற்பகுதி குளிர்ந்து விடுகின்றது. ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கனன்று கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து பிரிந்து வந்த பூமி மேற்பகுதியில் குளிர்ந்து, அதன் மீது தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அதன் உட்பகுதியோ நெருப்புக் குழம்பாகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் அது அவ்வப்போது எரிமலைகளைக் கொப்பளிக்கின்றது. இந்தப் பூமி ஒரு காலத்தில் சூரியனுடன் ஒன்றாக இருந்தது என்பதற்கு இந்த எரிமலைகள் அக்கினி சாட்சிகளாகத் திகழ்கின்றன! நெருப்பைப் பஞ்சு மெத்தையாக்கி எங்களை வாழ வைக்கும் இறைவா! நீ தூயவன்! என்று தினமும் அந்த வல்ல இறைவனைத் துதிப்போமாக!

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (01)


                                             அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
.


“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.


இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.


வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.


ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.


தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.


வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.


மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.


இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.


ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.


வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.


இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.


அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.


கருயியல்


கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.


இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.


இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.


அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.


அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.


இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.


இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.


நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14


சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.


நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.


இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.


அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.


“அலக்” என்ற அரபி வார்த்தைக்கு


1. அட்டை,


2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,


3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.


அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.


1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.


2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.


அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.


இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.


                              இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (2)

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (2)


 
டாக்டர் ஷேக் சையது M.D
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, ''கரு''வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது,அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள்கிருஸ்தவர்கள்) ''இயற்கையே கடவுள்'' என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
''பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோஅது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது'' என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் ''அமீபா'' என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றிஅது குரங்கு நிலைக்கு வந்துஅதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போனதத்துவத்தை(?)நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். ''அமீபா''விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்துமனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று,மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும்மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லைஅவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லைகுரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லைஅவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மைஎனவே டார்வினின் ''இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன'' என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் ''மூல''சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும்மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறதுஎனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள்அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்:பிராணவாய்வுகால்சியம்பொட்டாசியம்உப்புகார்பன்ஹைட்ரஜன்பாஸ்பரஸ்,கந்தகம்சோடியம்நைட்ரஜன்குளோரின்மெக்கினீசியம்இரும்புசெம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும்அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும்குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம்களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளதுஇந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர்உண்மை அது அல்லமனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும்மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.'' (அல் குர்ஆன் 6: 2)
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
''இன்னும் அவன் (அல்லாஹ்உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.'' (அல் குர்ஆன் 30: 20)
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது ''தீன்'' (களிமண்என்ற வார்த்தையை முறையும், ''துராப்'' (சாதாரண மண்என்ற வார்த்தையை முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான்இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும்சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்லசில மாறுபட்ட பயன்களை தரக்கூடியதுஇந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும்சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
''தீன்'' என்ற வார்த்தையும், ''துராப்'' என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும்காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லைஅவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும்அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும்மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் ''தீன்'' என்ற வார்த்தை மட்டும் போதுமானதுஅல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ''துராப்'' என்ற வார்த்தை மட்டும் போதுமானது.அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதுஇந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.அந்த வசனத்தில் ''மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்'' என்று இடம் பெற்றுள்ளதுஅதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாதுகளிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டுஉறுதிவாய்ந்ததாக இருப்பதில்லைபாத்திரங்கள்செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும்அதனால் தான் களிமண்ணில் பாத்திரம்,செங்கள் செய்பவர்கள்வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம்.அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாதுகாரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லைஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படைஇந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்துஅந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லைமாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்திஅந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான''மூல''த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான்இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லைமனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள்நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறதுமனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்)மிக்க அழகாக்கி வைத்தான்மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7
இந்த வசனத்தில் ''மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்'' என்று கூறப்பட்டுள்ளதுஇதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கதுமனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்துஎந்தந்த நிலையை அடைந்து,அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.
إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்அல்குர்ஆன்: 37:11
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறதுஇந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறியதட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்அல் குர்ஆன்: 15: 26
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
''ஹமஉ'' என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். ''மஸ்னூன்'' என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும்மண்களிமண்தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறிதுர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறிதுர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்)மனிதரைப் படைத்தான்அல் குர்ஆன்: 55:1
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
''ஸல்ஸால்'' என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும்அதனை தட்டினால் ''ஸல்ஸல்'' என ஓசை தரும் என்பதால் அதற்கு ''ஸல்ஸால்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ''ஸல்ஸால்'' என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறதுநான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும்முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறதுஅது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. ''குன்''என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்கநாடினால்அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்''ஆகுக!'' எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும்அல் குர்ஆன்: 36: 82
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லைமுதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும்எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண்களிமண்,தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கிஅந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும். 



மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16