வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

இஸ்லாம் என்றால் என்ன?


நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஒரு குடும்பம் நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒரு நல்ல தலைமை, அதேபோல ஒரு நகரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அதன் சிறந்த தலைமை அவசியமான தொன்றகும். நாம் நன்றாக அறிய முடியும் இந்த அண்டத்தில் எதுவும் தானாக நடப்பதில்லை. மேலும் நம் அண்டத்தில் இருக்கின்ற பூமியாகட்டும் மற்ற கோள்கலாகட்டும் இவையனைத்தும் பல ஆயிரம் கோடி வருடங்களாக ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுடன், ஒரு சீரான செயல்பாட்டுடன் இயங்குவதை நம்மால் உணரமுடியும். நம்மால் அழைக்க முடியுமா இவையாவும் தானாக நேர்ந்த ஒரு விபத்து என்று? அல்லது மனிதனால் அவற்றின் செயல்பாடுகளைத்தான் நிர்ணயிக்க முடியுமா?.
இந்த அண்டத்தை ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் ஒரு சிறிய பகுதியைத்தான் பெற்றிருக்கிறான். எனவே அண்டங்களும், மனிதனும் மற்ற உயிரினங்களும் ஒரு மிகப்பெரிய சக்தியின் கீழ் செயல்படுகின்றன. அந்த ஒரு மிகப்பெரிய சக்திதான் இந்த பூமியையும் மற்றும் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்திய படைப்பாளன் ஆகும். அந்த சக்திவாய்ந்த படைப்பாளனை தான் மனிதர்கள் கடவுள் “அல்லாஹ்” என்று அழைக்கிறார்கள்.
அவன் எத்தகையவன் என்றால் அவன் மனிதன் இல்லை ஏனென்றால் மனிதனால் மற்ற மனிதனையோ விலங்கையோ படைக்க முடியாது. அவன் விளங்கும் அல்ல தாவர இனமும் அல்ல. அவனுக்கு உருவம் உண்டு; ஆனால் அவனுக்கு உருவச்சிலைகள் கிடையாது. எனவே யாவற்றையும் படைத்த இறைவன். அவன் படைத்த யாவற்றையும் விட தனித்தவன்.
இறைவனை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வழிகள் உண்டு. நமக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையிலிருந்து அவனை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் மனிதனை நெறிப் படுத்துவதக்காகவும் வாழ்வியல் நெறிமுறையை விளக்குவதற்காகவும் தூதுவர்களையும் இறைவேதத்தையும் இறக்கி வைத்துள்ளான். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்களின் வாழ்க்கை முறையின் மூலமும் இறை வேதத்தின் மூலமும் நாம் இறைவனைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் என்பது இறைவன் தன் கடைசி இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எவற்றை வழங்கி கற்றுக் கொடுத்தானோ அவற்றை முழுமையாக ஏற்று இறைவனுக்கு கீழ்படிந்து நடப்பதாகும். இஸ்லாம் என்பதன் தமிழ் பொருள் ‘கீழ்படிதல்’ ‘சரணடைதல்’ என்பதாகும். இஸ்லாம் என்பது ஓரிறை கொள்கை ஆதலால் நாம் வாழும் வாழ்க்கை முறையை அர்த்தமுள்ளதாகவும் மற்றும் மூடபழக்க வழக்கங்களில் இருந்து விலகி இறைவனைச் சார்ந்த மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாம் ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதால் உலகில் உள்ள அனைவரையும் ஓர் இறைவனின் கீழ் கொண்டுவருகிறது. இது ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேவுள்ள உறவினை நெருக்கமாக்குகிறது எனவே மனிதன் தான் செய்த நட்பலனுக்கு ஏற்றவாறு கூலி கொடுக்க படுகிறான்.
இஸ்லாம் என்பது புதிய மார்க்கம் அல்ல மாறாக இதே போன்ற இறைவனின் கட்டளைகள் முன் சென்ற நபிமார்களுக்கும் சொல்லபட்டிருக்கிறது. ஆதம்(அலை) , நுஹ்(அலை), இப்ராகிம்(அலை),இஸ்மாயில்(அலை), தாவூத்(அலை), மூசா(அலை) மற்றும் ஈசா(அலை). ஆனால் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை திருக்குரான் இஸ்லாத்திக்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைய்ந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். (அல் குர்ஆன்)
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள்.
திருகுர்ஆன் இறைவனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப் பற்ற வேதமாகும். மற்றும் இது இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு மூலதனமாகவும் திகழ்கிறது. அருள்மறையாம் திருமறை திருக்குர்ஆன் இறை நம்பிக்கையின் ஆதாரமாகவும், நன்மை தீமைகளை பிரித்து அறிவதக்கும், மனிதனின் தோற்றத்தையும், இறை வழிபாடுகளையும், அறிவை வழங்கும் பெட்டகமாகவும், கருணையின் வடிவாகவும், மனிதன் இறைவன் தொடர்பை விளக்கு வதாகவும், மனிதனின் கடமையை விளக்கி கூறுவதாகவும் திருக்குரான் விளங்குகிறது. அது மற்றுமின்றி சமூகம், அரசியல், பொருளாதாரம், நீதி துறை ஆகியவற்றை தெளிவாக விளக்குவதாகவும் திருக்குர்ஆன் விளங்குகிறது. இஸ்லாத்தின் இதுவே முதலாவது சட்ட மூலாதாரமாக அமையும்.
ஹதீத் என்பது முஹம்மது (ஸல்) அவர்களினால் கற்றுதரபட்டதும், அவர்களின் செயல் முறைகளையும் மற்றும் திருக்குரான் வசனங்களின் விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் தொகுப்புகள் அன்றைய சகாபாகளின் (நபிதோழர்கள்) மூலம் பெறப்பட்டதாகும். நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவையே சுன்னா என்ற இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாக அமையும்.
இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

என்று நபிகள் நாயகம் கூறினார்கள்

உண்மை முஸ்லிம்களாவது எப்போது?


Post image for உண்மை முஸ்லிம்களாவது எப்போது?

           இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது.  உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்?
ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது?
ஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள்! உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள்! உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள்! அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஒன்றுமில்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா?)
இஸ்லாத்திற்கு இழுக்கைத் தேடித்தந்துக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர்தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்! சிற்றூர்களில் நிறுவப்பட்டுள்ள சின்ன சங்கங்கள் முதல், பெரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஈறாக எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஏதோ ஒரு இலட்சியத்தை அடையும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஒரு இயக்கத்தில் இணைகிறார். இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் இவ்வியக்கவாதிகள் முதல் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, இயக்கத்தில் இணைகிறார். சில காலம் சென்ற பின் இயக்க விதிகள் மீறப்பட்டிருப்பதை இதமாய் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் அவர் இதை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. அலட்சியம் செய்கிறார். மற்றொரு முறையும் இயக்க கொள்கைக்கு முரண்படும் விதத்தில் செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் கண்டிக்கவும் படுகிறார். கடுமையாக எச்சரிக்கப் படுகிறார். அது மட்டுமா? அடுத்தமுறை இதுப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் இயக்கத்தை விட்டே நீக்கப் படுவீர்” என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடப்படுகிறது. இதனுடைய பாதிப்பு சில காலம் தான். ‘பழைய குருடி கதவை திறடி’ என்பது போல் மீண்டும் இயக்கத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளிலும் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாய் பிடிப்படுகிறார். இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
இப்போது சிந்தியுங்கள்!
மனித சிந்தனையில் உருவாகிய இயக்கம்! அதற்கு கொள்கை, செயல்பாடுகள், விதிகள் அவைகளை மீறினால் முதல் முறையாக இருந்தால் வாய்மொழி எச்சரிக்கை! இரண்டாம் முறை எழுத்து மூலமான எச்சரிக்கைக்கு உறுதியாக இயக்கத்தை விட்டே வெளியேற்றப்படல்.
இவைகளை நல்ல முறையில் அறிந்து வைத்துள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களே இப்போது சிந்தியுங்கள்!! இறையருளிய முஸ்லிம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்கம்; இஸ்லாத்தின் மூலக் கொள்கை என்ன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? (இல்லை என்று சொல்ல இன்னும் வெட்கமா?) என்ன! இஸ்லாத்திற்கு கொள்கை உண்டா? இது இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாடி வரும் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட வைக்கிறது. காரணம்: இஸ்லாம் இறையருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதை இன்னும் இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம்கள் உணரவில்லை.
இஸ்லாம் அசைக்க முடியாத உறுதியான தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறி. மனித சமுதாயம் முழுமைக்கும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறை மார்க்கம் என்ற விஷயம் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட செய்வதில் வியப்பில்லை!
ஆம்! இறை மார்க்கம் இஸ்லாம் உறுதியான கொள்கை அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதே மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத பேருண்மை! இது சுயநலமிகளால் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. இன்று, இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாட வரும் பரம்பரை முஸ்லிம்களுக்கு அதை எடுத்துக் காட்டினால் அவர்கள் மிரளுகிறார்கள். அல்லது மிரள வைக்கப்படுகிறார்கள் அது மட்டுமா? பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தின் பெயரால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்கள் இல்லாததின் உண்மைக் கொள்கைகளை இன்றளவும் உணரவிடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள் இன்னும் எத்தி வைக்கப்படாமலும் இருக்கிறது.
பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தை குறிப்பிட்ட ஒரு சாரரும்  (மெளலவி என்ற வர்க்கத்திற்கு) தாரை வார்த்து விட்டார்கள். மார்க்க விஷயங்களுக்காக  பரம்பரை முஸ்லிம்கள் அந்த ஒருக் குறிப்பிட்ட சாரரையே முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். இன்றளவும் இதே இழிந்த நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம் மார்க்கத்தின் கொள்கைகள் மறைக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் மார்க்க முலாமில் மின்ன வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாந்து கொண்டும் இருக்கிறார்கள்.
உலகில் மனித சிந்தனையில் உருவாகிய இயக்கங்களில் ஒருவர் இணையும் போது, விண்ணப்பப் படிவங்களில் கொள்கைகள், விதிகள் செயல்பாடுகளை ஏற்பதாய் ஒப்புக் கொண்டு, உறுதியளித்து ஒப்பமிட்டுக் கொடுப்பது மனித நியதி. இப்போது அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திடம் அவன் அருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்து ஒப்புதல் பெற்றுள்ளது நமக்கு வியப்பளிக்கும் பேருண்மை ஆகும். திருக்குர்ஆன் வசனம் (7:172) அதற்கு நபி(ஸல்) கூறிய விளக்கத்தையும் பாரீர். மனித சமுதாயத்தன் மூலவர் நபி ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின். ஆதம்(அலை) அவர்களது முதுகிலிருந்து அவர்களின் எல்லா சந்ததியினரையும் (அணுரூபத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்தி, நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று அவற்றை நோக்கி கேட்டான். ஆம் நீ எங்கள் இரட்சகன் தாம் என்று அவர்கள் மறு மொழியளித்தனர். அப்பொழுது இறைவன் அவர்களை நோக்கி கூறியதாவது.
எங்களுக்கு இச்செய்தி பற்றி எதுவும் தெரியாது என மறுமை நாளில் நீங்கள் கூறாமலிருப்பதற்காக, உங்களின் ஆதமையும், வானங்களையும் பூமியையும் நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன். நீங்கள் அறியவேண்டிதென்னவெனில், என்னைத் தவிர்த்து வணக்கத்திற்க்குரியவன் யாருமில்லை; எனக்கு இணை வைக்காதீர்கள்; நான் வேதங்களை வழங்கி, எனது தூதர்களை உங்கள் பால் உலகிற்கு அனுப்புவேன். அவர்கள் இப்பொழுது நடைபெற்ற இவ்வுடன்படிக்கையை உங்களுக்க ஞாபக மூட்டுவார்கள். என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் இமாம் அஹ்மத்)
நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி நாள் வரை தோன்றப்போகும் மக்கள் அனைவரிடமும் அல்லாஹ்(ஜல்) பெற்றுக் கொண்ட உறுதியான உடன்படிக்கையை மேலே சுட்டிக் காட்டியுள்ளோம். இப்போது சிந்தியுங்கள்”
அல்லாஹ்(ஜல்)வை மட்டுமே ஒரே இறைவனாய் ஏற்று, அவனை மட்டுமே வணங்குவோம். அதாவது ஏகத்துவ இறை நெறியே எங்கள் கொள்கை  என்று அல்லாஹ்(ஜல்)விடம் உறுதியளித்து ஒப்புதலும் அளித்திருக்கிறோம். இதை மனித சமுதாயத்திற்கு நினைவு, படுத்தவே இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் அல்லாஹ்(ஜல்) அருளிக் கொண்டே இருந்தான். இஸ்லாமிய வாழ்க்கை நெறியை கடைப் பிடிப்பதன் மூலம் மட்டுமே மனித சமுதாயம் அல்லாஹ்(ஜல்)விற்கு செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர்களாக ஆக முடியும். இதையும் அல்லாஹ்(ஜல்) தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறான்.
இஸ்லாம், இறுதி வேதம்-அல்குர்ஆன், இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் மூலம் நிறைவடைந்து விட்டது. இறுதி இறை வேதம் அல்குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் அடிப்படையில் வாழ்வோர் மட்டுமே இறைவனிடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர் ஆவர். இதுவே அல்லாஹ்(ஜல்)வின் நியதி. அதற்கு மாற்றமாய் வாழ்வோர் அல்லாஹ்விடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை மீறியவர் ஆவர்.
அ(த்தீய)வர்கள் அல்லாஹ்விற்கு அளித்த உடன்படிக்கையை அது கெட்டியானப் பின்னர் ஒப்படைக்கின்றனர். அல்லாஹ் எதனை இணைக்காறு ஏவினானோ அதனை துண்டிக்கவும் செய்கிறான். பூமியில் விஷமத்தனமும் புரிகின்றானர். (இத்தன்மைகளைக் கொண்ட) அவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27)
மனித சமுதாயம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நியதிகள் எதையும் அறியாமல், அறிவதற்கு எவ்வித முயற்சியும் மேற்க்கொள்ளாமல், இஸ்லாத்திற்கு முற்ற முரணான மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்கள் வெறுக்கத்தக்க அனாச்சாரங்களையும் நன்மை, புண்ணியம் என்று நடைமுறைப்படுத்திக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் தங்களுக்கு தான் இஸ்லாம் சொந்தம் என்றும் உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர் தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! சிந்தியுங்கள்!
மனிதர்கள்-மனிதர்களுக்காக உருவாக்கிய விதிமுறைகள் மீறப்படும் போது சொற்ப அவகாசம் கொடுக்கப்படுகிறது! பின் மீறியவர் தண்டிக்கப்படுகிறார்! இது மனித நியதி! ஆனால், அல்லாஹ் அருளிய கொள்கை வாழ்க்கை நெறி! ஏற்றுக் கொண்டவர்களால் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக இம்மையில் எவ்வித தண்டனையும் இல்லை. இது அல்லாஹ்வின் பேரருள். இப்போது எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பேரருள் புரிந்து கொண்டிருக்கின்றான் என்பதை உணர முடியும்.
இறைநெறியை மீறியோர்க்கு தண்டனை! மறுமையில் இது அல்லாஹ்(ஜல்) வின் நியதி. இறை நெறியைக் கடைப்பிடித்து மனித சமுதாயம் முழுமைக்கும் அதை எத்திவைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட பரம்பரை-பெயர்தாங்கி முஸ்லிம்களே! அதை நீங்களே மீறிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.
இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்(ஜல்)வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அல்லாஹ்(ஜல்) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணரவும் உணர்த்தவும் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை முறியடிக்கவும், முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் அருள்பாலிப்பானாக. ஆமின்.

     முஹிப்புல் இஸ்லாம்
 www.readislam.net/portal/archives/2906#comment-997

இஸ்லாம் ஓர் பரவும் அதிசயம்


ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
    எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.
    எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?
    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?
    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.
    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
    உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
    Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
    இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.



www.readislam.net/portal/archives/379#comment-1000

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு


இந்து மதம்
சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா(Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?
ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாதகிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக,உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோவரம்போதீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லைவரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர்''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்
''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்
இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோவரம்போ,தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளைவணக்கவழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார்அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை
ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர்சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களைபுராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்
இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண்மரம்செடிகொடிசந்திரன்,சூரியன்பாம்புபசுமாடுஎலிபுலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியதுமரம்செடிகொடிசந்திரன்சூரியன்பாம்புபசுமாடுஎலி,புலிமனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)



ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்


பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது:''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில்பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று(Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2.  ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதிஅவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும்அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர்அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)


வேதங்களில் இறைக்கோட்பாடு


ரிக்யஜூர்சாமஅதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்றகாயமற்ற, பாவங்களற்றதூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன்அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்றுநீர்,நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன்,சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20அத்தியாயம் 58சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:

...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம்ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன்இந்திரன்மித்திரன்சூரியன்அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது. 

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டுஎன்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம்,பறவையை வாகனமாய் கொண்டவன் ன்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம்பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம்பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்குபாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H.  கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனேஇருவர் இல்லைஇல்லவே இல்லைஇல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
  
ஆக இந்துப் புனித வேதங்கள்புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)    

இஸ்லாத்தில் மலக்குகள்
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.


மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16