வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

பர்தாவில் என் அனுபவங்கள் - இவோன் ரிட்லி


தாலிபான்கள் கையில் அகப்படும் வரையில் பர்தா அணிந்த பெண்களை வியப்புடன்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.


அவர்களைப்பார்க்கும் போதெல்லாம் 'ஐயோ பாவம்' என்றுபரிதாபப்படுவேன்.அடக்குமுறைக்கு
ஆளான வாயில்லாப் பிராணிகளாக இருக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வேன்.

ஆப்பானிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட உடனே அதாவது 2001 செப்டம்பர் 11 நிகழ்வு நடந்து 15

நாட்களுக்குப் பிறகு நான் ஆப்கன் சென்றேன். இராணுவ ஆட்சிக்குக் கீழ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நேரில் கண்டறிந்து ஒரு பத்திரிக்கைக்குக் கட்டுரை எழுதுவதுதான் என் பயணத்தின் நோக்கம்.

நீல நிறப் பர்தாவில் முகம் உட்பட முழு உடலையும் மூடிக் கொண்டிருந்தேன்.ஆயினும் நான் கைது செய்யப்பட்டு பத்து நாட்கள் சிறை வைக்கப்பட்டேன். நான் அவர்களை சபித்தேன். முகத்தில் துப்பினேன். அவர்கள் என்னைத் திட்டினார்கள்.ஆனாலும் என் வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். குர்ஆனைப்படிப்பதாகவும், இஸ்லாம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும் நான் அளித்த வாக்குறுதியை நம்பி என்னை விடுதலை செய்தனர்.(இந்த விடுதலையில் அதிகம்

மகிழ்ந்தது நானா அவர்களா என்று தெரியவில்லை.)

நான் லண்டன் திரும்பினேன். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப இஸ்லாத்தைக்

குறித்து படிக்கத் துவங்கினேன். வியப்பின் உச்சிக்கே சென்று விட்டேன்.ஏனென்றால் குர்ஆனில் நான் எதிர்பார்த்த வசனங்கள் வேறு. அங்கு இருந்த வசனங்கள் வேறு. பெண்களை அடிமைப் படுத்தச் சொல்லும் வசனங்களும் ஆடுமாடுகளைப்போல அடிக்கச் சொல்லும் வசனங்களும்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் பெண்களின் உரிமைக்கும் விடுதலைக்கும் ஓங்கிக் குரல் கொடுக்கும் உன்னத வசனங்களை அதில் நான் கண்டேன். தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டேன். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். என் உறவினர்கள், நண்பர்கள், சொந்தங்கள் எல்லோர்க்கும் அதிர்ச்சி. வியப்பு. ஏமாற்றம்.

பர்தா முறை சமூகமுன்னேற்றத்துக்குத் தடை என்று பிரிட்டிஷ் முன்னால் வெளியுறவுச் செயலர்

ஜாக்ஸ்ட்ரோ, பிரதமர் டோனி பிளேர், சல்மான் ருஷ்தி, இத்தாலிய பிரதமர் ரோமோனோபுரோடி ஆகியோரின் அறிக்கையை பரிதாபத்துடனும் வெறுப்புடனும் தான் நான் இப்போது பார்க்கிறேன்- லண்டனில் இருந்தபடி.

பர்தா அணியாமலும் இருந்துள்ளேன். பர்தா அணிந்தும அனுபவம் பெற்றுள்ளேன் என்ற

நிலையில் நான் சொல்ல விரும்புவது இது தான். இஸ்லாமிய உலகில் பெண்கள் அடிமை

படுத்தப் படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் ஊடகவியலார்களும்,அரசியல்வாதிகளான பெரும்பாலான ஆண்களும் எதை குறித்துப் பேசுகிறார்களோ அதைப் பற்றிய அறிவு எதுவும் அவர்களுக்கு இல்லை. பர்தா, இளம் வயது திருமணம்,பெண்களுக்கு எதிரான கொடுமைகள், மரண தண்டனை போன்ற எந்த ஒரு விஷயம் குறித்தும் அவர்கள் ஏதும் அறியாத அறிவிலிகளாகத்தான் இருக்கிறார்கள்.

1970-களில் பெண்களின் எந்தெந்த உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் போராடினார்களோ அந்த

உரிமைகள் எல்லாம் 1400 அண்டுகளுக்கு முன்பே முஸ்லிம் பெண்களுக்கு கிடைத்து விட்டதை குர்ஆனை சற்று ஆழ்ந்து படித்தால் புரிந்து கொள்ளலாம். ஆன்மீகம்,கல்வி என எல்லாத்துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை உண்டு. குழந்தைகளைப்பெற்றெடுத்தல், வளர்த்தல் போன்ற காரணங்களுக்காக பெண்களுக்கு தனி அந்தஸ்தையே அளித்துள்ளது. பெண்களுக்கு இவ்வளவு உரிமைகளை இஸ்லாம் அளித்திருக்க, மேலை நாட்டினர் முஸ்லிம் பெண்களின் உடை, ஒழுங்கு பற்றி ஏன் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறார்கள்?

நான் இஸ்லாத்தைத் தழுவிய போதும் தலைத்துணி (ஹெட்ஸ்கார்ப்) அணியத் தொடங்கிய போதும் ஏராளமான எதிர்ப்புகள்....

இத்தனைக்கும் என் தலையை மட்டும் தான் மறைத்தேன். அந்த நிலையிலேயே இரண்டாம்தர குடிமகளாக நான் நடத்தப்பட்டேன். இஸ்லாத்துக்கு எதிரான விதவிதமான விமர்சனங்களைக்

கேட்க வேண்டி வரும் என எனக்குத் தெரியும். ஆனால் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட என்னிடம் பகைமை கொள்வார்கள் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.

'வாடகைக்கு' (For Hire ) என மின்னும் எழுத்துகளுடன் 'சர்..சர்' என ஓடிக் கொண்டிருந்த வாடகை வண்டிகள். ஒரு வாகனம் எனக்கு சற்று முன்பாக வந்து நின்றது. நான் அதில் ஏறுவதற்காக

வாகனத்தை நெருங்கியதும் ஓட்டுனர் என்னை ஒரு தடவை பார்த்து விட்டு சட்டென்று வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டார். 'பின் இருக்கையில் ஒரு வெடிகுண்டை ஏற்றிக் கொள்ளாதே' என்றார் இன்னொரு ஆள். 'பின்லாடன் எங்கே ஒளிந்திருக்கிறான்' என்று என்னிடமிருந்து அறிந்து கொள்ள விரும்பினான் ஒருவன்.

கண்ணியமாக உடை அணிய வேண்டும் என்பது முஸ்லிம் பெண்கள் மீது மார்க்க ரீதியான கடமையாகும். ஆனாலும் எனக்குத் தெரிந்த நிறைய முஸ்லிம் பெண்கள் முகம் தவிர எல்லா பாகங்களையும் மறைக்கும் ஹிஜாப் உடையைத்தான் அணிகிறார்கள். நிகாப் உடையை விரும்புபவர்களும் உண்டு. பர்தா தனி நபர் பிரகடனம் என்றே கருதுகிறேன். 'நான் ஒரு முஸ்லிம் பெண். என்னிடம் நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்'

என்று என் உடை அறிவிக்கிறது. ஒரு பிஸினஸ் உடை அணிந்த எக்ஸ்க்யுடிவ் தான்

மரியாதையாக நடத்தப்படுவதை எதிர் பார்ப்பான் என வால்ஸ்ட்ரீட் பாங்கரின் அறிவிப்பு போல்தான் இஸ்லாமிய பர்தாவும். என்னைப் போல் இஸ்லாத்தை தழுவிய ஒருவர், பெண்களைத் தவறாக பார்க்கும் ஆண்களின் நடத்தையையும், தவறான இச்சையுடன் கூடிய அணுகுமுறையையும் சகித்துக் கொள்ள முடியாது.

பல ஆண்டுகளாக ஒரு மேற்கத்திய பெண்ணியவாதியாக இருந்தவள் நான். மதச்சார்பற்ற

பெண்ணியவாதிகளைவிட அடிப்படை மாண்புகளில் சிறந்தவர்கள் முஸ்லிம பெண்ணியவாதிகள்தான் என்பதை அன்றே நான் உணர்ந்திருந்தேன். அழகிப் போட்டி எனும் பெயரில் நடைபெறும் ஒழுக்கம் கெட்ட கூத்தாட்டங்களை நாங்கள் வெறுத்தோம். 2003-ல் உலக அழகிப் போட்டியில் ஆப்கன் அழகி விதா சமத்சாயி நீச்சல் உடையில் வந்த போது 'பெண் விடுதலையை நோக்கிய ஒரு பாய்ச்சல்' என்று பாராட்டப்பட்டதை கேட்டு எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 'பெண்ணுரிமை வீராங்கனையாக' அவரைப் போற்றிப் புகழ்ந்த நடுவர்கள் அவருக்கு சிறப்புப் பரிசும் அளித்தார்கள்.

உண்மையில் பெண் விடுதலை என்பது என்ன?

அழகு,செல்வம், அதிகாரம், பதவி, ஆண், பெண் ஆகிய அடிப்படையில் இவர் உயர்ந்தவர்,இவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடுகள் இஸ்லாத்தில் இல்லை. உயர்வுக்கு அடிப்படை விதிகளாய் இஸ்லாம் வகுத்திருப்பது இறையச்சமும் ஒழுக்கமும்தான். நிகாப் அணிவது மூடத் தனமானது என்று அண்மையில் இத்தாலியப் பிரதமர் கடுமையாக விமர்சித்து இருந்தார். அது மடடுமல்ல சமூகத் தொடர்புகளுக்கு அது மிகப்பெரும் இடையுறு என்றும் கூறியுள்ளார். இதை விட ஓர் அபத்தமான கூற'று வேறு எதுவும் இருக்க முடியாது.

அப்படியானால் செல்போன்கள், லாண்ட்லைன்கள், இமெயில், எஸ்எம்எஸ், பேக்ஸ் போன்றவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டியதுதானா? பேசுபவரின் முகம் தெரியவில்லை என்பதற்காக யாராவது வானொலியை அணைத்து விடுவார்களா? இஸ்லாமிய நிழலில்தான் எனக்கு மரியாதை கிடைத்தது. திருமணம் முடிந்திருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி அறிவைத் தேடுவது ஒரு முஸ்லிம் பெண்ணின் கடமை என்று இஸ்லாம் என்னிடம் கூறியது. கணவனுக்காக மனைவி சமைக்க வேண்டும், துணி துவைக்க வேண்டும்

என்றெல்லாம இஸ்லாம் எந்த இடத்திலும் கூறவில்லை.

முஸ்லிம் கணவர்கள் தங்களின் மனைவியரை கண்மூடித் தனமாக அடிக்கலாம் என்கின்ற தவறான பிரச்சாரம் போன்றதுதான் இதுவும். குர்ஆனிலிருந்தும் நபிமொழிகளில் இருந்தும் முன் பின் வாக்கியத் தொடர்புகளை ஆராயாமல் ஆங்காங்கே சில சொற்களை பிரித்தெடுத்து

விமர்சகர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரம் காட்டுகிறார்கள். எற்த வகையிலும் பெண்கள் மீது அநீதியான முறையில் கை வைக்கக் கூடாது என்றுதான் இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது.

பெண்களின் தகுதி நிலை என்ன, அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து முஸ்லிம் ஆண்கள் தங்களின் கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது சரியே. ஆனால் மேற்கத்தியர்களின் கதை மட்டும் என்னவாம்?

குடும்ப வன்முறைகள் குறித்து அண்மையில் வெளியான தேசிய ஆய்வின்படி கடந்த 12 மாதங்களில் கணவனமார்களால் தாக்கபபட்டு படுகாயம் அடைந்த மனைவியரின் எண்ணிக்கை 40

லட்சம். நாள்தோறும் மூன்று பெண்கள் கணவனால் அல்லது ஆண் நண்பர்களால்(பாய்பிரண்ட்) கொலை செய்யப் படுகிறார்கள்.

பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ, கலாச்சாரத்தையோ சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டயமல்ல என்றும அந்த ஆய்வு சொல்கிறது. இது மதம்,இனம், வர்க்கம், கலாச்சாரம், ஏழை, பணக்காரர் போன்ற வேறுபாடுகளை எல்லாம் கடந்து நிற்க்கும் பன்னாட்டுப் பிரச்னை. பெண்களை விட தங்களை உயர்வாகக்கருதும் ஆண்கள்தான் உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஒரே விதமான பணியைச்

செய்தாலும் கூட ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது.

மேற்குலகில் பெண்ணுரிமை, பெண் விடுதலை என்றெல்லாம வாய் கிழிய பேசப்பட்டாலும் அங்கு பெண்கள் ஒரு போகப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று இனியும் யாரேனும் கூப்பாடு போட்டால் அவர்கள் 1992 -ல் ரெவரண்ட் பாட் ராபர்ட்ஸன் கூறியதை தங்களின் மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அவர் கூறினார:

'கட்டிய கணவனை கைவிடுவதற்கும்,கள்ளக் காதலில் ஈடுபடுவதற்கும், பெற்ற பிள்ளைகளை கொலை செய்வதற்கும்,ஒழுக்கக் கேடுகளில் மூழ்குவதற்கும், ஓரினச் சேர்க்கைக்கு உற்சாகம்

ஊட்டவும், குடும்ப அமைப்பைக் குலைப்பதற்க்கும், முதலாளித்துவத்தின் நன்மைகளை சீரழிக்கவும் சில சோஷலிஷ அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சதித்திட்டம்தான் 'பெண்ணியம்' என்பது.

இப்போது சொல்லுங்கள் - யார் நாகரிகமானவர்கள்? யார் நாகரிகமற்றவர்கள்?

இவோன் ரிட்லி
லண்டன்

சகோதரர் அஹமது தீதாத்


  • முழு பெயர்: அஹமது ஹுசைன் தீதாத்
  • பிறப்பு  :  ஜுலை 1, 1918
  • பிறந்த ஊர்: குஜராத், (இந்தியா)
1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்
1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!
1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை
சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற  ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே! இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.
இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர்  1956-1986
இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்).  இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!
1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.
இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்!  இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்!  இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!
சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995
1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.
1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!
இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!
இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகள்:
சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)
ஐக்கிய ராஜாங்கம் எனப்படும்  இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)
பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்),
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்
சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)
US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு இடம் அரிஜோனா மாகாணம், US)
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)
மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு  இடம் கனடா)
ஆஸ்திரேலியா  (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)
1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை
மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்!  இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது!  (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.zaகிளிக் it)
சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம்!
சகோதரர்களுக்க என் அன்பான வேண்டுகோள்
நமது இந்த அன்புச் சகோதரருக்காக இரு சொட்டு கண்ணீர்விட்டு மண்ணரையில் சுவன நித்திரை கிடைக்க நமது ரப்புல் ஆலமீனிடம் பிரார்த்தியுங்கள்! இதுதான் நாம் இவருக்கு இவர் செய்த அறும்பணிக்கு நம்மால் இயன்ற ஒரு சிறு உதவியாகும்! (நபி வழியின் முறையை அறிந்து துவா செய்யலாம்!)
ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:
  1. சதக்கத்துல் ஜாரியா
  2. பலன் தரும் கல்வி
  3. பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான பிள்ளைகள்.              அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்
ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.
இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.
நன்றி: நெல்லைஏர்வாடி.காம்

நிச்சயிக்கப்பட்ட மரணம்!


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;
எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)
“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)
இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)
ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)
எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:
‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44) “
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)
“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை” (அல் குர்ஆன் 21:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)
இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரணவேளை வந்துவிட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்: “நிச்சயமாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, ‘நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் – உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்” (அல் குர்ஆன் 41:30)
ஆனால், “அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன்; அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)
எனவே மேற்கண்ட வசனங்களிலிருந்து ஒருவருடைய மரண வேளையில் அவருக்கு உண்மை நிலை வெளிப்பட்டுவிடும் என்பது தெளிவாகிறது. உண்மையை உணர்ந்தபின் தாம் வாழும் போது செய்யாமல் விட்டுவந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்னபயன்? அல்லாஹ் கூறுகிறான்:
‘இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப்பின் அவனுக்குப் பாதுகாவலர் எவருமில்லை, அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?’ என்று கூறும் நிலையை நீர் காண்பீர்” (அல் குர்ஆன் 42:44)
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
எனவே நாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாகவும்.
தொகுப்பு
Cuddalore MuslimFriends

இஸ்லாம் ஒரு குடும்பவியல் நெறி!

இது விஞ்ஞான யுகம். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நவநாகரிகம் வளர்ந்தோங்கிக் கொண்டே செல்கின்றது. இந்த நாகரிக மாற்றம் காரணமாக மனித வாழ்க்கை பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. தொழில் வளர்ச்சியும், நுகர்பொருள் கலாச்சாரமும் மேல்நாடுகளில் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. இதன் விளைவாகத் தனிமனித நலனும் லாப நோக்குமே முதன்மையாகிவிட்டன.

சமூக நீதி என்பது இன்றைக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சமூகம் என்று வருகிறபோது குடும்பம் அதில் சிறப்பிடம் வகிக்கிறது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு குடும்பமேயாகும். சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பம் எனலாம்.

இன்று மேலை நாடுகளில் தலைவிரித்தாடும் தனிமனித நலனும் லாப நோக்கும் குடும்ப இயல் என்னும் அடிப்படை அமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு நிலைத்திருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகங்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

குடும்பக் கட்டுமானத்தின் இன்றியமையாத அங்கமாகிய திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் என அறிவு ஜீவி'கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகக் கூடிவாழ்வதுதான் இல்லறமாகிய குடும்பமாகும் என்னும் சித்தாந்தத்திற்கு இப்போது ஆபத்து வந்து விட்டது. ஓர் ஆண் இன்னொரு ஆணுடன் கூடிக்கலந்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதும் இல்லற அமைப்பேயாகும் என்றெல்லாம் நவீனக்கோட்பாடுகள் பிதற்றப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணோடு கூடி வாழ்தலையும் ஏன் குடும்பம் எனச் சொல்லக்கூடாது? என்ற விபரீத வினாக்களுக்கெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று குடும்பம் என்னும் சமுதாய அமைப்பு சிதைவுப்பட்டு நிற்றலைக் காண்கிறோம்.

இக்காரணங்களினால் இன்று மோலை நாடுகளில் குடும்பம் என்னும் உன்னத அமைப்பு ஆட்டம் கண்டு கிடக்கிறது. குடும்ப அமைப்புப் பற்றி யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என்னும் மனோபாவம் மேனாடுகளில் நவநாகரிக ஆண்-பெண்களிடம் மேலோங்கிக் காணப் படுகின்றது. போகிற போக்கில் தோன்றுகிறபோது தோன்றுகிறவர்களுடன் இன்ப நுகர்ச்சியை நடத்தி முடித்துவிட்டு அதன் பின்விளைவு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்க்கை என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது.

இதனால் பள்ளிப் பருவத்திலேயே சின்னஞ் சிறுமிகள் பல முறை கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர், இதையும் மீறிப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இத்தகைய விபரீத உறவு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 29மில்லியன் டாலர் தொகையை அமெரிக்க அரசு செலவிட்டு வருகின்றது.
பொருள் வளத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் மேம்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்ப அமைப்புச் சிதைந்து வரும் அதே வேளையில், விபச்சாரமும் வன்முறைக் கலாச்சாரமும் அதன் தீய விளைவுகளும் பெருகி வரக் காண்கிறோம்.

திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத் தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறில்லை'' என்று மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற கம்யூனிசத் தலைவர்கள் ஒங்கி முழங்கினர். இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் ஈ.வெ.ரா. பெரியாரும் கொண்டிருந்தார்.
உலகம் போற்றும் இந்த மகான்கள்' எடுத்துரைத்த கருத்துக்கேற்ப மனிதர்கள் வாழத் தலைப்பட்டமையினால் மேனாடுகளில் குடும்ப அமைப்பு நசிந்துகொண்டே வருகிறது. இது மட்டுமின்றி, பெண்ணுரிமை பேசுவோராலும் இன்று புதிய ஆபத்துக்கள் புறப்பட்டு வருகின்றன.

பெண்ணுரிமை வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என முழங்குவோர் ஆங்காங்கே உலக அரங்குகளில் கூடிப் பேசுவதையும் கேட்க முடிகின்றது. கெய்ரோ, பெய்ஜிங் போன்ற இடங்களில் சமீப காலங்களில் பெண் விடுதலை மாநாடுகள் கூட்டப்பட்டன.

கருக்கலைப்புச் சுதந்திரம், செக்ஸ் சதந்திரம், ஆண் பெண் பாலியல் நட்புரிமை, மதுபானம் போன்ற போதைப் பொருள்களை நுகரும் சுதந்திரம் முதலியவை எங்களுக்கு வேண்டும். இத்தகைய எங்களது உரிமைகளில் தலையிடுகின்ற அதிகாரம் எவருக்கும் இருக்கக் கூடாது என்றெல்லாம் இந்த விடுதலை விரும்பிகள் கோஷங்களை முன் வைத்துள்ளனர்.

'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற மிருக வாழ்க்கைத் தரத்திற்கு மனிதன் தாழ்ந்து கொண்டிருப்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்து நிற்கின்றன. குடும்ப அமைப்பின் சிதைவுக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கும் சில அரசுகள் கூடத் துணைபோயுள்ளன. ஒரினச் சேர்க்கை யாளர்கள் இணைந்து வாழ்வதும் குடும்பமே' என்று கூறுமளவுக்குச் சில மேனாடுகளில் அரசு அங்கீகாரங்கள் கூட வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எல்லாவகையான வழிகேடுகளுக்கும் வாசல் திறந்து விட்டு, குடும்பம் - சமூகம் என்னும் அமைப்புக்களைச் சீர்குலைய வைத்துவிட்டது மேனாட்டு நவ நாகரிகம். இப்போது இதனால் ஏற்பட்டுள்ள தீமைகளை மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர் இவர்கள்.

அரசாங்கமே மதுபானக் கடைகளையும் நடத்திக் கொண்டு குடியின் தீமையையும் பிரச்சாரம் செய்கிறதன்றோ? இதுபோல் எல்லாச் சமூகக் கேடுகளையும் அங்கீகரித்துவிட்டு, அவற்றினால் உருவாகும் தீமைகளுக்கு எதிராகவும் மேனாட்டினர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மிதமிஞ்சிய பொருள் வேட்கை, மிதமிஞ்சிய இன்ப நுகர்ச்சி இவைகளை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொண்ட மக்களால் குடும்பம் என்னும் அடிப்படை அமைப்பு சிதைந்து வருதல் கண்கூடு. இந்நிலை இப்படியே நீடிக்குமானால் வருங்காலத்தில் குடும்பம் என்னும் சமுதாயக் கட்டுமானம் இல்லாமலே போய்விடக்கூடும். குடும்ப அமைப்பு நின்று நிலைபெற்றிருந்தால் தான் வருங்காலச் சமுதாயம் உருப்படும் என்ற உண்மை இப்போதுதான் சிலருடைய புத்திக்கு உறைக்கத் தொடங்யிருக்கின்றது.

இதன் காரணமாக 1994-ஆம் ஆண்டினை சர்வதேசக் குடும்பநல ஆண்டு என உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்புச் செய்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் பதினைந்தாம் நாள் சர்வதேசக் குடும்ப நாள் என அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில்தான் உலகின் வருங்காலம் தங்கியுள்ளது என்பது தான் இந்நாளில் எடுத்துரைக்கப் படுகின்ற கொள்கை முழக்க வாசகமாகும்.

குடும்பம் என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைப்பேயாகும். அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத் தன்மை முதலிய நல்லியல்புகளெல்லாம் குடும்ப அமைப்பிலிருந்தே பூத்துக் குலுங்கி, சமுதாய வாழ்விற்கு மணமூட்டுகின்றன. இத்தகைய நல்லியல்புகளின் உறைவிடமான குடும்ப இயல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதன் இயல்பிலேயே நூறுபேரோடு கூடிவாழும் இயல்பினையுடையவன். பொதுவாக எந்த மனிதனும் தனித்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இதுமட்டுமின்றி மனிதனுக்குப் பலவகையான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைத் தனி ஒருவராகவே யாராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் வாயிலாக மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த வகையில் மனிதனை, குடும்ப அமைப்பிலும் சமுதாயச் சசூழ் நிலையிலும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே இறைவன் படைத்துள்ளான்.

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், உற்றார் உறவினர் ஆகிய பலதரப்பினரும் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையாகும். குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறையை வகுத்துக் கூறியுள்ளது.
குடும்ப அமைப்பு, மூவகை உறவுநிலைகளைக் கொண்டு இயங்குவதாக இஸ்லாம் இயம்புகின்றது. ஒன்று இரத்தக் கலப்பில் ஏற்படும் வம்சாவளி உறவு முறையாகும். மற்றொரு உறவுநிலை, திருமணத் தொடர்பினால் ஏற்படுவது, மூன்றாவது பால் குடியினால் ஏற்படுவது. இந்த மூன்று வகையிலுமல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாவதை இஸ்லாம் விரும்பவில்லை.

தத்தெடுத்துக் கொள்ளுதல், பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் அன்னியரைக் குடும்ப உறவுபோல ஆக்கிக் கொள்ளுதல், பாலுறவுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் நிக்காஹ்'' அல்லாத முறையில் சின்ன வீடு'' வைத்துக் கொள்ளுதல் முதலிய எதுவாயிருப்பினும் அவை இஸ்லாமியக் குடும்பக் கட்டுமானத்திற்குள் அடங்குவது கிடையாது.

மேலும் அவன் (அல்லாஹ்) தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு (இரத்தக் கலப்பின் அடிப்படையிலான) வம்சாவளியையும், (திருமண உறவின் அடிப்படையில்) சம்பந்தங்களையும் ஏற்படுத்துகின்றான்.
அல்குர்ஆன் 25:54

இருவகை இயல்பிலான குடும்ப உறவு பற்றித் திருமறை குர்ஆன் இங்ஙனம் எடுத்துரைத்துள்ளது.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்,,, உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய் மார்களும். உங்கள் பால்குடிச்சகோதரர்களும்,,, ஆவர், அல்குர்ஆன் 4:23

பால்குடி உறவு பற்றி இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது, இரத்தபந்தம், திருமண உறவு. பால்குடி உறவு ஆகிய உறவுகளே உறுதியானவை, கட்டுக்குலையாதவை, குடும்பத் தொடர்பு அற்றுப்போகாமல் வழிவழித் தொடர்ந்து வருபவை.

இயற்கையோடு இயைந்ததும், தக்க முகாந்தி ரங்களோடு கூடியதும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக நின்று நிலவக் கூடியதும் இத்தகைய உறவு நிலைகளேயாகும். இவை அல்லாத ஏனைய தொடர்புகள் ஒரு மனிதனுடைய சோதனையான காலகட்டத்தில் காணாமல் போய்விடக்கூடியவை.

உடன் பிறவாச் சகோதரி ஏற்பாடுகளும், வளர்ப்பு மகன் போன்ற செயற்கைப்பந்தங்களும் அஸ்திவாரமில்லாத கட்டிடத்தைப் போன்று ஆட்டம் காணக்கூடியன. துன்பங்கள் சசூழும்போது இத்தகைய செயற்கை உறவுகள் சிலந்தி வலை போன்று இருக்குமிடம் தெரியாமல் சிதறி மறைந்து விடுகின்றன. ஆனால் வம்சாவளி, பால்குடி, திருமணத் தொடர்பானது இரும்புச்சங்கிலிபோல் சந்ததி தோறும் தொடர்ந்து உறுதி பெறுகிறது.
துன்பங்களும் துயரங்களும் நெருக்குகிறபோது ஒரு மனிதனை அரண் போலிருந்து காப்பாற்றுவது அவனுடைய குடும்பஅமைப்பேயாகும். நபிமார்கள் வாழ்க்கையிலும் இத்தகைய குடும்ப அரவணைப்பினைக் காணமுடிகின்றது. நபிமார்கள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தபோது குடும்பத்திலிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பின. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு கண்டு நபிமார்கள் கவலை அடைந்ததும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் முதல் முதலாக இறைத்தூதினை எடுத்துரைத்து ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது அவர்களின் குடும்பத்தினர் சிலருடைய எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பினால் நபி(ஸல்) அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் எங்ஙனம் வலுவடைந்தது என்பதை அன்னாரின் வரலாறு தெரிவிக்கின்றது.

இறைவன் நபி(ஸல்) அவர்களைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் வாயிலாக ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கச் செய்தான். முதன் முதலாகத் தூதுச் செய்தியைப் பெற்றுக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அப்போது நபிகளாருக்குப் பக்கத்துணையாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி, அவர்களை உறுதிப்படுத்தியவர் அன்னை கதீஜா அவர்களேயாவார்.

வீட்டுக்கு உள்ளே நபி(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார் கதீஜா நாயகியின் அரவணைப்பு இருந்தது போல, சமுதாய அரங்கில் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு அரண்போன்ற பாதுகாப்பினை நல்கியவர் அபூதாலிபு ஆவார். இங்ஙனம் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரும் பெரிய தந்தையும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு உற்ற துணையாயிருந்து ஆற்றிய பங்கு அளவிடற் கரியதாகும்.

அபூபக்கர்(ரலி) போன்ற ஆருயிர்த் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக உடல், பொருள், உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். என்றாலும் நபி(ஸல்) அவர்களின் 50ஆம் வயதில் அபூதாலிபும் கதீஜா நாயகியும் அடுத்தடுத்துக் காலமாகிவிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் ஆறாத்துயரில் ஆழ்ந்து போனார்கள். இந்த வம்சாவளி உறவையும் திருமண உறவையும் இழந்தபோது நபி(ஸல்) அவர்கள் இரு சிறகிழந்த பறவை போன்று கையற்று நின்று கவலைப்பட்டார்கள். துக்கம் மிகுந்த துயர் மிகு ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) என வரலாற்று ஆசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

ஓர் இலட்சியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இங்கே ஒரு படிப்பினை இருக்கிறது. . வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்குமானால், ஒருவருக்கு அது போன்ற பேறு வேறு எதுவுமில்லை எனலாம். வெளியாரின் ஆதரவும் ஒத்தாசையும் எத்துணை அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் உண்டு உறையும் குடும்பத்துக்குள்ளே அவனுக்கு உடன்படாதவர்கள் இருப்பார்களானால், அதுவும் அவனுக்கு இன்னொரு பிரச்சனையாகி விடுகின்றது.. அதே வேளையில் முக்கியக் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு வாய்க்கப் பெறுமாயின் எவ்வளவு பெரிய புறஎதிர்ப்பையும் அவனால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்களுடைய ஆரம்பகால ஏகத்துவப் பணிக்கு எத்தனையோ மாபெரும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. எனினும் நபிகளாரின் திருப்பணி மக்கத்து மண்ணில் மங்கிப் போகாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. நபி(ஸல்)அவர்களுக்கு வாய்த்த குடும்ப அரவணைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அதிலும் வேறு எவருடைய ஆதரவைக் காட்டிலும், வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியின் ஆதரவுக்குப் பிரத்தியேகமான மகிமை இருக்கவே செய்கிறது.. நபிகளாரின் வாழ்வே இதற்குச் சான்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலாக ஓதுவீராக'' என்ற இறைச் செய்தி கிடைத்த போது அவர்கள் அஞ்சிப் பயந்து ஒடோடி வீட்டிற்கு வந்தார்கள். அருமைத் துணைவியார் கதீஜா நாயகியிடம், தமக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாக எடுத்துரைத்தார்கள். அப்போது கதீஜா நாயகி அவர்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத்தரசியாக எப்படி நடந்து கொணடார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓர் ஆண்மகன் எதிர்கொள்ளும்போது, அவனுடைய துணைவி அந்த வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் அழகிய முன் மாதிரியாகும்.

நபி(ஸல்) அவர்கள் பேதலித்து நின்றபோது கதீஜா நாயகி அவர்கள், சாதாரணக் குடும்பங்களில் நடப்பது போன்று தம் கணவரைக் கேலி பேசவில்லை. அவநம்பிக்கை ஊட்டி அதைரியப் படுத்தவில்லை. மாறாக நபிகளாரைத் தேற்றினார்கள், தைரியப்படுத்தி உற்சாக மூட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள்; சிரமப்படுவோரின் சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; உண்மையான சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்;'' என்று கதீஜா நாயகி அவர்கள் நபிகளாரை ஆறுதல் படுத்தினார்கள். இப்படிப்பட்ட நற்குணத்தின் நாயகரான தங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர்ந்துவிடாது என எடுத்துரைத்துத் திடப்படுத்தினார்கள்.
சோதனையான காலகட்டங்களில் ஒரு குடும்பத்தலைவி கணவருக்குப் பக்கத்துணையாக இப்படித்தான் நடந்து கொள்ளுதல் வேண்டும். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் முதல் திருவசன வெளிப்பாட்டோடு தொடர்புடையதாகும். இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றவுடன் நபிகளாரின் குடும்ப வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இச்சம்பவம் நல்லதொரு குடும்ப அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

ஆன்மீகத் துறைக்கு மட்டுமே மதங்கள் ஏற்றவை, லௌகீக வாழ்விற்கு மதங்கள் ஒத்துவருவதில்லை'' எனப் பலரும் பேசித்திரிகின்றனர். வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் இந்த அளவுகோல் பொருந்தக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகம் என்றும் லௌகீகம் என்றும் பாகுபாடு எதுவும் கிடையாது.

மனித வாழ்வின் ஆன்மீகம், லௌகீகம் உள்ளிட்ட தேவைகள் , என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல் நெறியே இஸ்லாமாகும். குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் போன்ற லௌகீக வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வழிகாட்டுதல்களை வழங்கி யிருக்கின்றது.

இந்த லௌகீகத் தடங்களில் மனிதன் கால்பதித்து நடக்கும் போதுதான் அவனது ஆன்மீகத் தடாகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என இயம்புகிறது இஸ்லாம். இந்த வகையில் ஒரு குடும்ப அமைப்பு எப்படி இருத்தல் வேண்டும் என்பதையும், திருக்குர்ஆனும் நபிவழியும் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டியுள்ளன.

மதம் என்பது தனி மனிதனோடு சம்பந்தப்பட்டது; குடும்ப வாழ்க்கையோடும், கூட்டு வாழ்க்கையோடும் மதத்தைச் சம்பந்தப்படுத்தக் கூடாது' என்ற மதச் சார்பின்மைப் பேச்சுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது. தனிமனித வாழ்க்கையில் எந்த அளவுக்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்குக் குடும்பவாழ்விலும், கூட்டுவாழ்விலும் இறைச் சட்டத்தையும் நபிவழியையும் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.

இஸ்லாத்தின் பல்வேறு கடமைகளைப் பார்ப்போமானால், அவை கூட்டாகச் செயல்படுத்துவதற்கென்றே விதிக்கப்பட்டதனைத் தெரியலாம். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் மட்டுமின்றி இன்னபிற கட்டளைகள் கூட, குடும்ப அமைப்பிலும் சமுதாய அரங்கிலும் செயல்படத் தகுந்தனவாகவே காணக்கிடக்கின்றன.

இந்தப் பின்னணியில் நோக்கும் போது இஸ்லாம் குடும்பவியல் அடிப்படையிலான ஒரு மார்க்கமாகவே திகழ்கின்றது. குடும்பவியலின் ஆதாரசுருதியாக அமைந்திருப்பது திருமணமேயாகும்.

ஆண்டவனது அருளை அபரிமிதமாகப் பெற வேண்டுமானால், திருமண பந்தங்களையெல்லாம் மறந்துவிட்டு, துறவு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறு பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் துறவறத்தைச் சிபாரிசு செய்யவில்லை. மாறாக இல்லற வாழ்க்கையை வலியுறுத்திப் பேசுகின்றது.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி மனிதர்கள் துறவுத்தனத்தைத் தாங்களாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்டனர். அதனை நாம் ஒருபோதும் அவர்களுக்குக் கடமையாக ஆக்கவில்லை. அப்படியிருந்தும், துறவு மேற்கொண்ட அவர்கள், அதனை எந்த அளவுக்குப் பேணி ஒழுக வேண்டுமோ அந்த அளவுக்கு அதனைப் பேணுவதும் இல்லை
(அல்குர்ஆன் 57:27) என்று இறைமறை இயம்புகின்றது.

அந்தக் காலத்து விசுவாமித்திர முனிவரிலிருந்து இந்தக் காலத்து பிரேமானந்தா முனிவர் வரை எத்தனையோ துறவிகள் இத் துறவறத்தை எந்த அளவுக்குக் கேலிக் குரியதாக ஆக்கியிருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

துறவு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ள கிறித்துவப் பாதிரிமார்கள், அவர்களுடைய நீண்ட, நெடிய வெள்ளை அங்கிகளுக்குள்ளே நடத்தும் களியாட்டலீலைகள் உலகறிந்த ரகசியங்களாகும்.

மனிதனுக்குப் பசி, தாகம் எழுவது எப்படியோ அதுபோலவே உடல்சுகமும், புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். இதனை வலிந்து அடக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

உஸ்மான் பின் மழ்ன்(ரலி) என்று ஒரு நபித்தோழர் இருந்தார். இவர் நபி(ஸல்) அவர்களை அணுகி, குடும்ப வாழ்க்கையில் தாம் ஈடுபடாமல் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி, அதற்கு அனுமதி கோரினார். நபி(ஸல்) அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி வழங்கயிருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், அஹ்மத் நூல்களில் இடம் பெற்றள்ளது.
அனஸ்(ரலி) வாயிலாகத் தெரியவரும் பின்வரும் நபிமொழியும் புகாரி, முஸ்லிம், அஹ்மத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும் மேலும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக்கொண்டனர். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது; நான் நோன்பும் வைக்கிறேன், அதைவிட்டு விடவும் செய்கிறேன்; நான் தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

முக்கிய வழிபாட்டுக் கடமைகளான நோன்பிற்கும் தொழுகைக்கும் இஸ்லாம் எந்த இடத்தை வழங்கியுள்ளதோ, அதே இடத்தை மணவாழ்க்கைக்கும் தந்து நிற்கின்றது இந்த நபிமொழி.

நான் உண்ணமால் நோன்பிருக்கிறேன், உண்ணவும் செய்கிறேன்: உறங்காமல் விழித்திருக்கிறேன்: உறங்கவும் செய்கிறேன்' என்ற கூற்றிலிருந்து உணவும் உறக்கமும் ஒரு மனிதனுக்கு எப்படி இன்றியமையாது தேவைப் படுகின்றனவோ அது போலவே மணவாழ்வும் மனிதனுக்கு ஒரு அவசியத் தேவையாகும் என்பதையும் இந்த நபிமொழி நன்கு உணர்த்துகின்றது.
அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் இரவு முழுவதும் தொழுவதாகக் கேள்விப் பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். நீ உனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்று உணர்த்திக் காட்டினார்கள்.

இந்தக் கருத்துப்பட அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களில் இடம் பெற்றள்ளது.

அடியான் என்ற வகையில் ஆண்டவனுக்கு வழிபாடுகளைச் செலுத்துவதோடு, கணவன் என்ற வகையில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புக்களையும் ஒரு மனிதன் செவ்வனே நிறைவேற்றியாக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதனை வற்புறுத்திக் கூறியுள்ளமை, இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேற்கூறிய நபிமொழிகள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்திக் காட்டியுள்ளன. மனிதனுக்குப் பசி, தாகம், உறக்கம் எப்படியோ அதுபோலவே உடல் சுகமும் புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். ஒரு பாலினர் மற்றொரு பாலினரிடம் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு உயிரியல் இயற்கைக்கு உட்பட்டது. பிற உணர்வுகள் அனைத்தையும் விடவும் மனிதனிடம் மேலோங்கித் திகழக்கூடியது இதுவாகும். இந்த உணர்வு மனிதனுடைய ஐம்புலன்களுக்கும் ஒருங்கே இன்பமளித்து, அவனது எண்ணம், சொல், செயல்களையெல்லாம் இனிமைப் படுத்துகின்றது.

மனிதனுடைய மகிழ்ச்சி, துக்கம், போன்ற பிற உணர்வுகளையெல்லாம் ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு ஒரு வலுவான ஆற்றலாக இப்பாலுணர்வுச் சங்கதி புதைந்து கிடக்கின்றது. இந்த உணர்வு நிறைவேறும்போது மனிதன் மகிழ்கிறான், சாந்தமடைகிறான். அவனுடைய பிற செயல்பாடுகள் சீரடைகின்றன. இந்த உணர்வு நிறைவேறாத நிராசையாகும்போது மனிதன் கோபம் கொள்கிறான். ஆவேசப்படுகிறான். அவனுடைய பிற இயக்கங்களை இது மிகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே வரலாற்றில் பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன. போர்க்களப் பேரழிவுகள் தொடங்கி, இக்காலத்துக் குத்து வெட்டுக் கொலைகள் வரை பலவற்றிலும் இந்த உணர்வு முக்கிய இடம் வகிப்பதைக் காண்கின்றோம்.

சொல்லப்போனால், படைப்பினங்களின் மணி முடியாகத் திகழும் மனிதனுக்கு இறைவன் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுள் இந்தப் பாலுணர்வும் ஒன்றாகும். மனிதன் பருவமெய்தியதிலிருந்து அவன் முதுமையடைந்து மரணிப்பது வரை இப்பாலுணர்வு ஏதோ ஒரு ரூபத்தில் அவனிடம் பொருந்தியே இருக்கின்றது. ஏனைய உயிரினங்களுக்குப் பாலுணர்வு உண்டு என்றாலும் அவை இவ்வுணர்வினை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே பயன்படுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதனுடைய பாலுணர்வு இயக்கமோ ஆண்டு முழுவதும் எல்லாப் பருவகாலங்களிலும் செயல்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

ஆக, இப்பாலுணர்வு என்பது மனிதனுடைய பிறப்போடு ஒட்டியது. மக்கள் பிறப்பை அருளுவதும் எங்கும் பரந்து நிற்பதும் இதுவாகும், ஆண்டவனது படைப்புகக்களில் ஆண்,பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும், அவற்றின் வாழ்வுக்கும் வளத்துக்கும் சத்தாகவும் இது அமைந்திருக்கின்றது.

ஆண்மையும் பெண்மையும் ஒன்றில் ஒன்று ஈர்க்கப்படும் இப்பாலுணர்வு இல்லையேல் மனித இனமும் இனப்பெருக்கமும் நில்லாது நிலையாது போயிருக்கும். இனப்பெருக்கத்தின் முன்னோடியாகத் திகழும் இப்பாலுணர்வுக்குத் திருமணம்' என ஒரு நெறியமைத்து அதற்குச் சில ஒழுங்கு முறைகளை விதித்துள்ளது இஸ்லாம், குடும்ப இயலின் நுழைவாயிலான இத்திருமணம் மனிதனுடைய செயல்பாடுகளில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கின்றது, எனவே இஸ்லாம் இதுபற்றிச் சிறப்பாகப் பேசியுள்ளது.

இஸ்லாம் என்றால் என்ன?


நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஒரு குடும்பம் நல்ல முறையில் செயல்படுவதற்கு ஒரு நல்ல தலைமை, அதேபோல ஒரு நகரத்தின் நல்ல வளர்ச்சிக்கு அதன் சிறந்த தலைமை அவசியமான தொன்றகும். நாம் நன்றாக அறிய முடியும் இந்த அண்டத்தில் எதுவும் தானாக நடப்பதில்லை. மேலும் நம் அண்டத்தில் இருக்கின்ற பூமியாகட்டும் மற்ற கோள்கலாகட்டும் இவையனைத்தும் பல ஆயிரம் கோடி வருடங்களாக ஒரு குறிப்பிட்ட கட்டளைகளுடன், ஒரு சீரான செயல்பாட்டுடன் இயங்குவதை நம்மால் உணரமுடியும். நம்மால் அழைக்க முடியுமா இவையாவும் தானாக நேர்ந்த ஒரு விபத்து என்று? அல்லது மனிதனால் அவற்றின் செயல்பாடுகளைத்தான் நிர்ணயிக்க முடியுமா?.
இந்த அண்டத்தை ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் ஒரு சிறிய பகுதியைத்தான் பெற்றிருக்கிறான். எனவே அண்டங்களும், மனிதனும் மற்ற உயிரினங்களும் ஒரு மிகப்பெரிய சக்தியின் கீழ் செயல்படுகின்றன. அந்த ஒரு மிகப்பெரிய சக்திதான் இந்த பூமியையும் மற்றும் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்திய படைப்பாளன் ஆகும். அந்த சக்திவாய்ந்த படைப்பாளனை தான் மனிதர்கள் கடவுள் “அல்லாஹ்” என்று அழைக்கிறார்கள்.
அவன் எத்தகையவன் என்றால் அவன் மனிதன் இல்லை ஏனென்றால் மனிதனால் மற்ற மனிதனையோ விலங்கையோ படைக்க முடியாது. அவன் விளங்கும் அல்ல தாவர இனமும் அல்ல. அவனுக்கு உருவம் உண்டு; ஆனால் அவனுக்கு உருவச்சிலைகள் கிடையாது. எனவே யாவற்றையும் படைத்த இறைவன். அவன் படைத்த யாவற்றையும் விட தனித்தவன்.
இறைவனை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வழிகள் உண்டு. நமக்கு இறைவன் வழங்கிய அருட்கொடையிலிருந்து அவனை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். இறைவன் மனிதனை நெறிப் படுத்துவதக்காகவும் வாழ்வியல் நெறிமுறையை விளக்குவதற்காகவும் தூதுவர்களையும் இறைவேதத்தையும் இறக்கி வைத்துள்ளான். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்களின் வாழ்க்கை முறையின் மூலமும் இறை வேதத்தின் மூலமும் நாம் இறைவனைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் என்பது இறைவன் தன் கடைசி இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எவற்றை வழங்கி கற்றுக் கொடுத்தானோ அவற்றை முழுமையாக ஏற்று இறைவனுக்கு கீழ்படிந்து நடப்பதாகும். இஸ்லாம் என்பதன் தமிழ் பொருள் ‘கீழ்படிதல்’ ‘சரணடைதல்’ என்பதாகும். இஸ்லாம் என்பது ஓரிறை கொள்கை ஆதலால் நாம் வாழும் வாழ்க்கை முறையை அர்த்தமுள்ளதாகவும் மற்றும் மூடபழக்க வழக்கங்களில் இருந்து விலகி இறைவனைச் சார்ந்த மார்க்கமாகவும் இஸ்லாம் திகழ்கிறது. இஸ்லாம் ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதால் உலகில் உள்ள அனைவரையும் ஓர் இறைவனின் கீழ் கொண்டுவருகிறது. இது ஒரு மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேவுள்ள உறவினை நெருக்கமாக்குகிறது எனவே மனிதன் தான் செய்த நட்பலனுக்கு ஏற்றவாறு கூலி கொடுக்க படுகிறான்.
இஸ்லாம் என்பது புதிய மார்க்கம் அல்ல மாறாக இதே போன்ற இறைவனின் கட்டளைகள் முன் சென்ற நபிமார்களுக்கும் சொல்லபட்டிருக்கிறது. ஆதம்(அலை) , நுஹ்(அலை), இப்ராகிம்(அலை),இஸ்மாயில்(அலை), தாவூத்(அலை), மூசா(அலை) மற்றும் ஈசா(அலை). ஆனால் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை திருக்குரான் இஸ்லாத்திக்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைய்ந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். (அல் குர்ஆன்)
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள்.
திருகுர்ஆன் இறைவனால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப் பற்ற வேதமாகும். மற்றும் இது இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு மூலதனமாகவும் திகழ்கிறது. அருள்மறையாம் திருமறை திருக்குர்ஆன் இறை நம்பிக்கையின் ஆதாரமாகவும், நன்மை தீமைகளை பிரித்து அறிவதக்கும், மனிதனின் தோற்றத்தையும், இறை வழிபாடுகளையும், அறிவை வழங்கும் பெட்டகமாகவும், கருணையின் வடிவாகவும், மனிதன் இறைவன் தொடர்பை விளக்கு வதாகவும், மனிதனின் கடமையை விளக்கி கூறுவதாகவும் திருக்குரான் விளங்குகிறது. அது மற்றுமின்றி சமூகம், அரசியல், பொருளாதாரம், நீதி துறை ஆகியவற்றை தெளிவாக விளக்குவதாகவும் திருக்குர்ஆன் விளங்குகிறது. இஸ்லாத்தின் இதுவே முதலாவது சட்ட மூலாதாரமாக அமையும்.
ஹதீத் என்பது முஹம்மது (ஸல்) அவர்களினால் கற்றுதரபட்டதும், அவர்களின் செயல் முறைகளையும் மற்றும் திருக்குரான் வசனங்களின் விளக்கங்களையும் உள்ளடக்கியதாகும். இதன் தொகுப்புகள் அன்றைய சகாபாகளின் (நபிதோழர்கள்) மூலம் பெறப்பட்டதாகும். நபிகளாரின் சொல் செயல் அங்கீகாரம் ஆகியவையே சுன்னா என்ற இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரமாக அமையும்.
இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையும் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

என்று நபிகள் நாயகம் கூறினார்கள்

உண்மை முஸ்லிம்களாவது எப்போது?


Post image for உண்மை முஸ்லிம்களாவது எப்போது?

           இறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே! நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா? உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது.  உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்?
ஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது?
ஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள்! உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள்! உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள்! அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஒன்றுமில்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா?)
இஸ்லாத்திற்கு இழுக்கைத் தேடித்தந்துக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர்தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! ஆழ்ந்து சிந்தியுங்கள்! சிற்றூர்களில் நிறுவப்பட்டுள்ள சின்ன சங்கங்கள் முதல், பெரும் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஈறாக எல்லாவற்றையும் உற்று நோக்குங்கள். ஒவ்வொன்றும் ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் அல்லது ஏதோ ஒரு இலட்சியத்தை அடையும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காண முடியும். ஏதோ ஒன்றால் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஒரு இயக்கத்தில் இணைகிறார். இயக்கத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் இவ்வியக்கவாதிகள் முதல் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, இயக்கத்தில் இணைகிறார். சில காலம் சென்ற பின் இயக்க விதிகள் மீறப்பட்டிருப்பதை இதமாய் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும் அவர் இதை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. அலட்சியம் செய்கிறார். மற்றொரு முறையும் இயக்க கொள்கைக்கு முரண்படும் விதத்தில் செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் கண்டிக்கவும் படுகிறார். கடுமையாக எச்சரிக்கப் படுகிறார். அது மட்டுமா? அடுத்தமுறை இதுப் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் இயக்கத்தை விட்டே நீக்கப் படுவீர்” என்ற முன்னெச்சரிக்கை அறிவிப்பும் விடப்படுகிறது. இதனுடைய பாதிப்பு சில காலம் தான். ‘பழைய குருடி கதவை திறடி’ என்பது போல் மீண்டும் இயக்கத்திற்கு முற்றிலும் முரண்பட்ட கொள்கைகளிலும் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாய் பிடிப்படுகிறார். இயக்கத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்.
இப்போது சிந்தியுங்கள்!
மனித சிந்தனையில் உருவாகிய இயக்கம்! அதற்கு கொள்கை, செயல்பாடுகள், விதிகள் அவைகளை மீறினால் முதல் முறையாக இருந்தால் வாய்மொழி எச்சரிக்கை! இரண்டாம் முறை எழுத்து மூலமான எச்சரிக்கைக்கு உறுதியாக இயக்கத்தை விட்டே வெளியேற்றப்படல்.
இவைகளை நல்ல முறையில் அறிந்து வைத்துள்ள பெயர் தாங்கி முஸ்லிம்களே இப்போது சிந்தியுங்கள்!! இறையருளிய முஸ்லிம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் மார்க்கம்; இஸ்லாத்தின் மூலக் கொள்கை என்ன? என்று என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா? (இல்லை என்று சொல்ல இன்னும் வெட்கமா?) என்ன! இஸ்லாத்திற்கு கொள்கை உண்டா? இது இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாடி வரும் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட வைக்கிறது. காரணம்: இஸ்லாம் இறையருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதை இன்னும் இன்றைய பெரும்பான்மையான முஸ்லிம்கள் உணரவில்லை.
இஸ்லாம் அசைக்க முடியாத உறுதியான தெளிவான கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை நெறி. மனித சமுதாயம் முழுமைக்கும் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறை மார்க்கம் என்ற விஷயம் பரம்பரை முஸ்லிம்களை திடுக்கிட செய்வதில் வியப்பில்லை!
ஆம்! இறை மார்க்கம் இஸ்லாம் உறுதியான கொள்கை அடிப்படையில் அமைந்த மார்க்கம் என்பதே மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத பேருண்மை! இது சுயநலமிகளால் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டு விட்டது. இன்று, இஸ்லாத்திற்கு பாரம்பரிய சொந்தம் கொண்டாட வரும் பரம்பரை முஸ்லிம்களுக்கு அதை எடுத்துக் காட்டினால் அவர்கள் மிரளுகிறார்கள். அல்லது மிரள வைக்கப்படுகிறார்கள் அது மட்டுமா? பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தின் பெயரால் மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்கள் இல்லாததின் உண்மைக் கொள்கைகளை இன்றளவும் உணரவிடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள் இன்னும் எத்தி வைக்கப்படாமலும் இருக்கிறது.
பரம்பரை முஸ்லிம்கள் மார்க்கத்தை குறிப்பிட்ட ஒரு சாரரும்  (மெளலவி என்ற வர்க்கத்திற்கு) தாரை வார்த்து விட்டார்கள். மார்க்க விஷயங்களுக்காக  பரம்பரை முஸ்லிம்கள் அந்த ஒருக் குறிப்பிட்ட சாரரையே முற்றிலும் நம்பியிருக்கிறார்கள். இன்றளவும் இதே இழிந்த நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தோ பரிதாபம் மார்க்கத்தின் கொள்கைகள் மறைக்கப்பட்டு பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சடங்கு சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் மார்க்க முலாமில் மின்ன வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏமாந்து கொண்டும் இருக்கிறார்கள்.
உலகில் மனித சிந்தனையில் உருவாகிய இயக்கங்களில் ஒருவர் இணையும் போது, விண்ணப்பப் படிவங்களில் கொள்கைகள், விதிகள் செயல்பாடுகளை ஏற்பதாய் ஒப்புக் கொண்டு, உறுதியளித்து ஒப்பமிட்டுக் கொடுப்பது மனித நியதி. இப்போது அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திடம் அவன் அருளிய கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பதை உறுதி செய்து ஒப்புதல் பெற்றுள்ளது நமக்கு வியப்பளிக்கும் பேருண்மை ஆகும். திருக்குர்ஆன் வசனம் (7:172) அதற்கு நபி(ஸல்) கூறிய விளக்கத்தையும் பாரீர். மனித சமுதாயத்தன் மூலவர் நபி ஆதம்(அலை) அவர்களைப் படைத்த பின். ஆதம்(அலை) அவர்களது முதுகிலிருந்து அவர்களின் எல்லா சந்ததியினரையும் (அணுரூபத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்தி, நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று அவற்றை நோக்கி கேட்டான். ஆம் நீ எங்கள் இரட்சகன் தாம் என்று அவர்கள் மறு மொழியளித்தனர். அப்பொழுது இறைவன் அவர்களை நோக்கி கூறியதாவது.
எங்களுக்கு இச்செய்தி பற்றி எதுவும் தெரியாது என மறுமை நாளில் நீங்கள் கூறாமலிருப்பதற்காக, உங்களின் ஆதமையும், வானங்களையும் பூமியையும் நான் சாட்சிகளாக ஆக்குகின்றேன். நீங்கள் அறியவேண்டிதென்னவெனில், என்னைத் தவிர்த்து வணக்கத்திற்க்குரியவன் யாருமில்லை; எனக்கு இணை வைக்காதீர்கள்; நான் வேதங்களை வழங்கி, எனது தூதர்களை உங்கள் பால் உலகிற்கு அனுப்புவேன். அவர்கள் இப்பொழுது நடைபெற்ற இவ்வுடன்படிக்கையை உங்களுக்க ஞாபக மூட்டுவார்கள். என அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்னத் இமாம் அஹ்மத்)
நபி ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி நாள் வரை தோன்றப்போகும் மக்கள் அனைவரிடமும் அல்லாஹ்(ஜல்) பெற்றுக் கொண்ட உறுதியான உடன்படிக்கையை மேலே சுட்டிக் காட்டியுள்ளோம். இப்போது சிந்தியுங்கள்”
அல்லாஹ்(ஜல்)வை மட்டுமே ஒரே இறைவனாய் ஏற்று, அவனை மட்டுமே வணங்குவோம். அதாவது ஏகத்துவ இறை நெறியே எங்கள் கொள்கை  என்று அல்லாஹ்(ஜல்)விடம் உறுதியளித்து ஒப்புதலும் அளித்திருக்கிறோம். இதை மனித சமுதாயத்திற்கு நினைவு, படுத்தவே இறைத் தூதர்களையும், இறை வேதங்களையும் அல்லாஹ்(ஜல்) அருளிக் கொண்டே இருந்தான். இஸ்லாமிய வாழ்க்கை நெறியை கடைப் பிடிப்பதன் மூலம் மட்டுமே மனித சமுதாயம் அல்லாஹ்(ஜல்)விற்கு செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர்களாக ஆக முடியும். இதையும் அல்லாஹ்(ஜல்) தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறான்.
இஸ்லாம், இறுதி வேதம்-அல்குர்ஆன், இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் மூலம் நிறைவடைந்து விட்டது. இறுதி இறை வேதம் அல்குர்ஆன் இறுதி இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்வியல் வழிகாட்டல் அடிப்படையில் வாழ்வோர் மட்டுமே இறைவனிடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியவர் ஆவர். இதுவே அல்லாஹ்(ஜல்)வின் நியதி. அதற்கு மாற்றமாய் வாழ்வோர் அல்லாஹ்விடம் செய்துக் கொடுத்த ஒப்பந்தத்தை மீறியவர் ஆவர்.
அ(த்தீய)வர்கள் அல்லாஹ்விற்கு அளித்த உடன்படிக்கையை அது கெட்டியானப் பின்னர் ஒப்படைக்கின்றனர். அல்லாஹ் எதனை இணைக்காறு ஏவினானோ அதனை துண்டிக்கவும் செய்கிறான். பூமியில் விஷமத்தனமும் புரிகின்றானர். (இத்தன்மைகளைக் கொண்ட) அவர்களே தாம் நஷ்டவாளிகள். (2:27)
மனித சமுதாயம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் என்று மார்தட்டிக் கொண்டு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நியதிகள் எதையும் அறியாமல், அறிவதற்கு எவ்வித முயற்சியும் மேற்க்கொள்ளாமல், இஸ்லாத்திற்கு முற்ற முரணான மூட நம்பிக்கைகளையும் சடங்கு சம்பிரதாயங்கள் வெறுக்கத்தக்க அனாச்சாரங்களையும் நன்மை, புண்ணியம் என்று நடைமுறைப்படுத்திக் கொண்டு தங்களை முஸ்லிம்கள் என்றும் தங்களுக்கு தான் இஸ்லாம் சொந்தம் என்றும் உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரை (பெயர் தாங்கி) முஸ்லிம்களே! ஆத்திரப்படாதீர்கள்! சிந்தியுங்கள்!
மனிதர்கள்-மனிதர்களுக்காக உருவாக்கிய விதிமுறைகள் மீறப்படும் போது சொற்ப அவகாசம் கொடுக்கப்படுகிறது! பின் மீறியவர் தண்டிக்கப்படுகிறார்! இது மனித நியதி! ஆனால், அல்லாஹ் அருளிய கொள்கை வாழ்க்கை நெறி! ஏற்றுக் கொண்டவர்களால் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனினும் அதற்காக இம்மையில் எவ்வித தண்டனையும் இல்லை. இது அல்லாஹ்வின் பேரருள். இப்போது எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்(ஜல்) மனித சமுதாயத்திற்கும் எந்த அளவுக்கு பேரருள் புரிந்து கொண்டிருக்கின்றான் என்பதை உணர முடியும்.
இறைநெறியை மீறியோர்க்கு தண்டனை! மறுமையில் இது அல்லாஹ்(ஜல்) வின் நியதி. இறை நெறியைக் கடைப்பிடித்து மனித சமுதாயம் முழுமைக்கும் அதை எத்திவைக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட பரம்பரை-பெயர்தாங்கி முஸ்லிம்களே! அதை நீங்களே மீறிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லையா? என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையை உணர முடியும்.
இஸ்லாமிய நெறியை மீறிக்கொண்டே இஸ்லாமிய நெறிக்கு உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரம்பரைப் பெயர்தாங்கி முஸ்லிம்களே! இம்மையில் நீங்கள் ஏதேனும் காரணம் கூறி அதை மறைத்து விடலாம். அல்லது விதண்ட வாதம் செய்து மழுப்பி விடலாம். நாளை-மறுமை நாள்! அல்லாஹ்(ஜல்)வின் முன்னிலை! எந்த சாக்கு போக்குகள் சொல்லியும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இதை நம்மில் ஒவ்வொருவரும் நினைவுகூர்ந்து இஸ்லாம் காட்டிய கொள்கை, கோட்பாடுகள், நெறிகள், நடைமுறைகளை அறிந்து ஒழுகி உண்மை முஸ்லிம்களாய் மாற ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அல்லாஹ்(ஜல்) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் உணரவும் உணர்த்தவும் அதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவைகளை முறியடிக்கவும், முஸ்லிம்கள் அனைவரும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்கவும் அருள்பாலிப்பானாக. ஆமின்.

     முஹிப்புல் இஸ்லாம்
 www.readislam.net/portal/archives/2906#comment-997

இஸ்லாம் ஓர் பரவும் அதிசயம்


ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
    எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.
    எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?
    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?
    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.
    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
    உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
    Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
    இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.



www.readislam.net/portal/archives/379#comment-1000
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16