வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

முஹம்மது நபி (ஸல்) பற்றி அறிஞர்கள் கருத்து! பெரியாரியல் தோழர்களுக்கு ஒரு விளக்கம்!


விவேகானந்தர்

குர்ஆனும் அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத வினமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்8)

மகாத்மா காந்தி

இஸ்லாம் பொய்யான மதமல்ல. எவ்வாறு நான் அதை அறிந்திருக்கிறேனே அவ்வாறே எல்லா முஸ்லிமல்லாதவரும் படித்துணர வேண்டும். அப்போதுதான் என்னைப்போல் எல்லாரும் இஸ்லாமின்பால் அன்புகொள்வார்கள்.

முஹம்மது நபி பெரிய தீர்க்கதரிசி மஹா வீர புரு`ர் கடவுளைத் தவிர மனிதர் ஒருவருக்கும் அசாதவர். அவர் சொல்லொன்றும் செயலொன்றுமாக நான் கண்டதில்லை. அவர் எப்படி உணர்ந்தாரோ அப்படியே செய்தார்.

அப்புண்ணிய புரு`ர் ஓர் பக்கிரி. அவர் செல்வத்தை விரும்பி இருப்பின் ஏராளமாகச் சேர்த்திருக்கலாம். அவரும் அவருடைய குடும்பத்தாரும் பந்துக்களும் மனமுவந்து அனுபவித்த க`டங்கள் துயரங்களைப் படிக்கும்போது என் கண்களிலிருந்து நீர் ததும்புகிறது

கடவுளிடம் அவர் மனது சதாகட்டுப்பட்டிருந்தது. கடவுள் கட்டளைக்கு எப்போதும் பயந்தே நடந்தார். மனித சமூகத்திடம் அளவற்ற கருணையும் கொண்டார்.அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)

அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?

குருநானக் (சீக்கிய மத நிறுவுனர்)
வேதாகம இதிகாச பபுராணங்களின் காலங்கள் மலையேறிவிட்டன. ஆனால் திருக்குர்ஆன் இப்பொழுது உலகிற்கு வழிகாட்டியாயிருக்கிறது. உலக சீரமைப்புக்குப் பாடுபட்ட அண்ணல் நபி கள் பால் நான் கொண்டிருக்கும் மட்டற்ற மரியாதையின் காரணமாக இரு முறை அரேபியா சென்றுவரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

ஜவஹர்லால் நேரு

அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி பூண்டிருந்தார் என்பது தெளிவு.

இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி நாட்டினார்.

இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)

பண்டித கோபால கிரு`ண கோகலே

மகான் முஹம்மத் (ஸல்) அவர்களின் புனித வாழ்வைப் பற்றிய விசாரணையில் நான் இறங்கியபோது எனக்குத் தெளிவாக்கிய சில உண்மைகளைப் பற்றி நான் எழுதுவதில் மகிழ்கிறேன்.

அவர்களைப் அகில உலக சீர்திருத்தத்துக்காகவே <சுவரன் அனுப்பியுள்ளான். ஒரு பெரும் சீர்த்திருத்தக்காரருக்கு இருக்க வேண்டிய அனைத்துச் சக்திகளும் ஒரு மாமனிதருக்கு அமைந்திருக்க வேண்டிய எல்லா குணநலன்களும் அவர்களிடம் காணப்பட்டன. அக்கிரமச் செயல்களில் மூழ்கிக் கிடந்த அரேபிய நாட்டினரை முழுமையான மனிதர்களாக மாற்றிவிட்டார் அவர். அவர்களுள்<வு இரக்கத்தை கனிவை சகிப்புத்தன்மையை உண்டுபண்ணி காட்டுமிராண்டிகளாக அறிவீனர்களாகத் திரிந்துகொண்டிருந்த அம்மக்களைச் சில நாட்களுக்குள் உயர்ந்த ஆட்சியாளர்களாக மாற்றி அமைத்துவிட்டார். தம் சகோதரர்களின் உதிரத்தைச் சிந்தச்செய்வது சர்வ சாதாரணமான செயலென்று கருதிவந்தவர்களின் உள்ளங்களில் அண்ணல் அவர்களின் சீரிய போதனைகள்<வு இரக்கத்தை பரிவை உண்டுபண்ணிவிட்டன. இழந்துவிட்ட சமாதானத்தை அமைதியை அவர்கள் மீண்டும் நிலைபெறச் செய்துவிட்டனர். அவர்கள் சாந்தி சமாதானத்தின் பாதுகாவலர்களாக அமைந்துவிட்டனர். அக்கிரமக்காரர்களிடம் மகான் அவர்களுக்கு பரிவு ஏற்படாது.<சுவரன் அவர்களுக்குத் தூய உள்ளத்தையும் தயாள குணத்தையும் அளித்திருந்தான். அவர்கள் என்றும் நீதி வழுவியதே கிடையாது. அரேபியாவை வெற்றி கொண்ட பின்னர் தோல்வி கண்ட மக்களுக்கு அவர்கள் அருளாகவும் ஆதரவாகவும் அமைந்திருந்தார்கள். மகான் முஹம்மத் மீதும் அவர்களைப் பின்பற்றியவர்கள் மீதும் இன்னல்களும் தொல்லைகளும் இழைத்துவந்த கயவர்களை வெற்றி கொண்ட பின் தூக்கிலிட்டிருக்கலாம். அதுதான் நியாயமும்கூட. எனினும் அவர்களைப் பழிக்குப் பழி வாங்காமல் யாவரையும் மன்னித்துவிட்டனர் மகான் முஹம்மத் அவர்கள். இந்த அரிதான நிகழ்ச்சிக்கு நிகரானவொன்றை நான் உலகச் சரித்திலேயே கண்டதில்லை. மகான் அவர்கள் பிறப்பதற்கு முன்னர் அரேபியாவிலும் இந்தியாவில் நடப்பது போன்றே விக்கிரக ஆராதனை நடந்துவந்தது. மகானின் போதனைகளால் விக்கிரக வழிபாடு முற்றாக ஒழிந்தது. இதன் பின்னரே ஒரே இறைபக்தியும் ஏகத்துவ எண்ணமும் மக்களின் உள்ளங்களில் தோன்றியது. மகான் பிறப்பதற்கு முன்னர் பெண்களுக்குரிய உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டுவந்தன. பெண்கள் இம்சிக்கப்பட்டுவந்தனர். அவர் பெண்களுக்கு உயர்நிலையை வழங்கினார். மேலும் அவர்களுக்கான உரிமைகளையும் அவர் வகுத்துத் தந்தார். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையை முற்றும் களைந்து எல்லோரிடையிலும் சமத்துவத்தை நிலவச் செய்த மகான் அவர்களின் அந்த இயக்கம் இன்றும் உயிருடன் இயங்கிவருகிறது. ஏதேனும் ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று பாருங்கள். அங்கு ஏழையும் செல்வனும் உயர்ந்தவனும் தாழ்ந்தவனும் யாசிப்பவனும் கொடுப்பவனும் ஒரே வரிசையில் நின்று தோளோடு தோள் உராய்ந்து கம்பீரமாக நிற்கும் காட்சியைக் காண்பீர்கள். இத்தகைய தனிப்பெரும் வி`சத் தன்மைகளால்தான் மகான் அவர்களை அறிர் பெருமக்கள் அனைவரும் விரும்புகின்றனர் அவர்களை மதிக்கின்றனர். வாருங்கள்! எல்லோருமாகச் சேர்ந்து ஒரே குரலில் முழங்குவோம் ஸ்ரீ முஹம்மதுக்கு ஜே! டாக்டர் அம்பேத்கார் (இந்திய அரசியல் சாசனத்தைத் வகுத்தவர்) பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதனை மனிதனாக வாழச்செய்து சமுதாயக் கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறிமுறையை வகுத்துத் தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை. ரவீந்திரநாத் தாகூர் முசல்மான்களை ஒன்றாக இணைப்பது அவர்களுக்குத் தர்மத்திலுள்ள பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பபு அல்ல. அனாவசியமான கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஒரு கொள்கையைப் பல அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் தர்ம உணர்வு. (கோரா நாவல்) கவிக்குயில் சரோஜினி தேவி சகோதரத்துவப் பாடத்தை சுதந்திர உணர்வை சமத்துவப் பண்பாட்டைப் போதித்து இவ்வவுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன். உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான். இந்த உயர்நிலை இலட்சியத்தை தேவையைப் பாலைவனத்தின் தீர்க்கதரிசி ஒட்டகமோட்டி (அண்ணல் நபி) பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார். (கட்டுரைத் தொகுப்புகள்) ஹர்தே பிரகா` அராபியப் பாலைப் பிரதேசத்தில் முஹம்மது நபி (ஸல்) அவதரித்தது அரேபிய நாட்டிற்கும் இதர எல்லா நாடுகளுக்கும் அனுகூலமாகவே நிலவியது. இப்பெரியாரது வாழ்க்கையில் உலகுக்குப் பொதுவாகக் கிடைத்த நன்மைக்காக அரேபியா மட்டுமல்ல அகில உலகமே நன்றிசெலுத்தக் கடமைப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா இஸ்லாம் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்துள்ளது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துகளிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காண முடியும். (கர்சிபுரம் மீலாது விழாவில்) இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான இறைமறை குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு என் இளமைக் காலத்திலேயே என் இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. திருக்குறளை நான் தெரிந்துகொண்ட காலத்திலேயே திருக் குர்ஆனையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமைகொள்கிறேன். ஏறத்தாழ முன்னூற்றுக்கும் அதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கின்றேன். நானும் எனது கொள்கையும் சொல்லிவந்த சமுதாயச் சீர்திருத்த பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏக தெய்வக் கொள்கை எங்கட்கும் பெரிதும் பிரசாரத் துணை நின்றது. கல்லையும் மண்ணையும் பூஜிக்காதீர் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு. மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப் பணி மீலாது மேடையணி மூலம் சுடர்விட நல்ல வாய்ப்பு இருந்தது. மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும் அதற்குச் சுற்றுச் சார்பும் சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான். ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கின்றதோ அப்படியே அதன் வழியே செல்பவர்கள் கெர்சம் சுற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாற்றமாக நாம் நடந்தால் தனக்குத் தீமையே விளையும் என்பதைத் தெளிவாக அறிந்தும் கெட்டுக் கிடக்கும் சுற்றுச் சார்புகளை அழித்தும் எவர் நல்ல சுற்றுச் சார்புகளை ஏற்படுத்துகிறாரோ அவரைத்தான் மகான் என்று நாம் அழைக்கிறோம். ஆனால் அத்தகைய மகான்கள் நமக்கு எப்பொழுதும் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும்பொழுது நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை. (7.10.1957 சென்னை கடற்கரை மீலாது விழாவில்)நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீஸூம் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சியப் பொக்கி`மான இறைமறை திருக் குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றைக் கடமையாக்க முனையவில்லை. கடைபிடிக்கும் நடைமுறை வழியில் கணிசமாகக் கடைபிடிக்க வலியுறுத்தியது. இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரும் தூண்டுகோலாகும். (21.03.1966 அபிவிருத்தீஸ்வரம் பள்ளிவாசலில்) மதுரை ஆதினகர்த்தர் இஸ்லாம் மார்க்கத்தின் ஏகத்துவக்டிகாள்கையையஜம் அதனைப் பின்பற்றி ஒபுகுவதால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் அளப்பரிய தன்மைகளைப் பற்றியஜம் முஞம்மது நபி (!ல்) அவர்கள் டிதளிவாகக் வுறிச் டிசன்றுள்ளார்கள். டிபருமானாரைப் பின்பற்றுவதிலெ டிபருமையஜண்டு உண்மையஜண்டு எண்ணிறந்த நன்மைகள் உண்டு. கடவஜள்டிகாள்கையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தினார் சமுதாயக்டிகாள்கையில் சமத்துவத்தை நிலைநிறுத்தினார் சமயக்டிகாள்கையில் டிதளிவையஜம் எளிமையையஜம் நிலைநிறுத்தினார். இது எப்பழ அவரால் முழந்தது என்றால்ஃ அல்லாஞ்வின் பெரருளால் அவருக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. ப.க. வாஸ்வாணி (சிந்து ஞானி) மாவீரர்களில் ஒருவராக நான் முஹம்மதுவைக் காண்கிறேன். உலக மக்களின் பல பகுதியினரை உயர்நிலைக்குக் கொண்டு வரும் ஓர் உன்னத சக்தி அவருக்கு இருந்தது. இந்திய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் அவருடைய போதனைகள் பெரிதும் உதவியுள்ளன. ஜார்ஜ் பெர்னாட்` நான் அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன். அவர் மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றப் பிறந்தவர் என்பது என் கருத்து. வரலாற்றில் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஓர் அதிர்`டத்தின் காரணமாக நபிகள் நாயகம் மூன்று விதமான நிறுவனராய் விளங்குகின்றார்கள். அன்னார் ஒரு சமுதாயத்தின் நிறுவனர் ஒரு பேரரசின் நிறுவனர் ஒரு மதத்தின் நிறுவனர். சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா முஹம்மத் நபி (ஸல்) தமது சொந்த வாழ்க்கையில் சமூகத்தன்மையும் விசுவாசமும் குடும்பத்தின் மீது பரிவும் மன்னிக்கும் தன்மையும் உடையவராய் இருந்தார். அவர் தமது அதிகாரத்தின் உச்ச நிலையிலே இருந்தபோது மிகவும் எளிதான வாழ்க்கையே நடத்தினார். ஜெனரல் பர்லாங் அரேபிய நபியின் சரிதையை அவர்களது குணாதிசியங்களை அவர்களது வாழ்க்கையை நாற்பது வருடமாக ஆராய்ந்துவருகிறேன். உலகம் இன்றுவரை கண்டிருக்கும் தலைவர்களில் இவர்கள் நிகரற்றவர் என்றே கூறவேண்டும். டான்லி லேன்புல் (வரலாற்றாசிரியர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மினும் தாழ்ந்தவர்களிடம் மிக்க அன்பாகவும் அனுதாபமாகவும் நடந்துகொண்டார். குழந்தைகளிடம் அதிகம் அனுதாபமுள்ளவராய் இருப்பார். இவர் தமது வாழ்நாளில் ஒருவரையும் அடித்தது கிடையாது. ஒரு சமயம் ஒருவருக்கு சாபமிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டபோது நான் சாபமிடுவதற்காக அனுப்பப்படவில்லை. மானிடர்களுக்கு அருளாகவே அனுப்பப்பட்டேன் என்று கூறினார். தாமஸ்கார்லைல் பெருமானார் (ஸல்) பூவுலகில் மக்களுக்குப் போதனைகள் புரிந்தவை அனைத்தும் உண்மைகள் பொதிந்தவை கருத்தாழமிக்கவை. ஜூல்ஸ் மாஸர்மான் (அமெரிக்கா யூத மனோதத்துவ விஞ்ஞானி) சரித்திரத்தில் பெருந்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் கீழ்க்காணும் மூன்று அம்சங்களுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அவை 1) தலைவராக இருப்பவர் வழிநடத்தப்படும் மக்களின் நல்வாழ்வவுக்கு வகை செய்ய வேண்டும். 2) ஒரு சமுதாயத்தை உருவாக்கி அந்த மக்கள் போதிய பாதுகாப்பும் பெறுகிறோம் என்ற உணர்வினைப்பெற வழிவகுக்க வேண்டும். 3) அவர்கள் அனைவருக்கும் ஒரே நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.  பாஸ்டர் மற்றும் சால்க் போன்ற தலைவர்கள் முதல் நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். காந்தி கன்பூ`யஸ் அலெக்ஸாண்டர் சீஸர் மற்றும் ஹிட்லர் போன்ற தலைவர்கள் இரண்டாவது மூன்றாவது நிபந்தனையின் கீழ் வருகின்றவர்கள். ஆனால் புத்தர் மற்றும் ஏசு மூன்றாவது நிபந்தனைக்கு மட்டும் உட்பட்டவர்கள். எல்லாக் காலத்திலும் நின்று நிலவக் கூடிய பெரும் தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. காரணம் அவர்களிடத்தில் இம்மூன்று அம்சங்களும் குறைவின்றி அமைந்திருந்தன. மேலும் மோசேயிடத்திலும் இவ்வம்சங்கள் யாவும் சற்றுக் குறைவான அளவில் இருந்தன. (15.07.1974 ஆமாண்டு டைம் வார இதழ் சரித்திரத்தில் முக்கியமான பெருந்தலைவர் யார்? என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில்) பாஸ்வொர்த் ஸ்மித் (வரலாற்றாசிரியர்) அரசாங்கத்தின் தலைவராகவும் மத வி`யத்தில் தலைவராகவும் இருந்துகொண்டு அன்னார் ஏககாலத்தில் சீஸராகவும் போப்பாகவுமே விளங்கிவந்திருக்கின்றார். ஆனால் அவர் போப்புக்குரிய படோடோபங்கள் இல்லாத ஒரு போப்பாகவும் சீஸருக்குரிய படைகளும் இல்லாத ஒரு சீஸருமாகவே விளங்கிவந்தார். ஒரு நிரந்தர படை இல்லாமலும் மெய்காப்பாளர் ஒருவருமில்லாமலும் அரண்மனை ஒன்றுமில்லாமலும் ஒரு நிரந்தரமான வருவாய்க்கு வழி ஒன்றுமில்லாமலும் எப்போதேனும் ஒருவர் ஆண்டவனது அதிகாரத்தைக் கொண்டே தாம் இவ்வுலகில் ஆட்சிபுரிந்துவந்ததாக கூறிக்கொள்ள உரிமை பெற்றிருப்பாராயின் அன்னவர் முஹம்மதாகவே இருந்துவந்தார். ஏனெனில் அவர் எல்லாவிதமான அதிகாரத்தையும் அதற்குரிய உபகரணங்கள் இல்லாமலும் அதற்கு வேண்டிய உதவிகள் இல்லாமலுமே செலுத்திவந்தார். ரெமண்ட் டெரோகு வரலாற்றில் குறிப்பிடக் கூடிய முதல் சர்வதேச சமுதாயப் புரட்சிக்கு வழிகோலியவர் முஹம்மதுவே ஆவார். நீதி தர்மம் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தச் சட்டத்தையும் ஏற்றுக்கொள்ளாத உலகமுழுவதும் விரவக்கூடிய ஒரு நாட்டிற்கு அவர் அடிப்படைகள் இட்டிருக்கிறார். மனித சமுதாயத்தையும் பரஸ்பரம் உதவும் கடமையையும் சர்வதேச சகோதரத்துவத்தையும் அவர் போதிக்கிறார். ஜான்டேவன் போர்ட் (விஞ்ஞானி) நீதி நெறி வகுத்தோரும் வெற்றி பல கண்டோரும் ஆகியவருற்றுள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வரலாற்றினைப் போன்று சரியான ஆதாரபூர்வமானதாகவவும் விரிவானதாகவும் வி`யங்கள் அடங்கியதாகவும் உறுதியான உண்மையுள்ளதாகவும் உள்ள வரலாற்றினை உடையவர் என நன்கு அறிந்த எந்த ஓர் அறிர் பெருமான் பெயரையும் குறிப்பிட இயலாது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.


ஒபாமா இஸ்லாத்தை தழுவ பிரார்த்திக்கும் கென்ய பாட்டி

ரியாத்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்லாத்தை தழுவவேண்டுமெனப் பிரார்த்திப்பதாக அவரின் கென்ய பாட்டியார் கூறியுள்ளார்.அண்மையில் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்ற ஒபாமாவின் பாட்டியார் ஷாரா ஓமர்( வயது 88) சவுதி அரேபிய நாளேடான அல்வாரனுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஹஜ் யாத்திரைக்காக ஓமர்,தனது மகனும் ஒபாமாவின் தந்தையின் சகோதரருமான சயீட் ஹுசைன் ஒபாமா மற்றும் அவருடைய பேரப்பிள்ளைகள் நால்வருடன் சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.இதேவேளை, ஹஜ் தொடர்பான விடயங்களை மட்டுமே தான் பேசவிரும்புவதாகவும் ஒபாமாவின் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவிரும்பவில்லை எனவும் ஓமர் குறித்த நாளிதழுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சவுதி அரேபிய அரசின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஓமர் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் ஹஜ் யாத்திரைக்கு வந்திருக்கலாம் எனும் தோற்றப்பாடு எழுந்துள்ளதாயினும் அது உறுதி செய்யப்படவில்லை.இந்நிலையில் சிறப்பான விருந்தோம்பலுக்காக சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு சயீட் நன்றி தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் போது 20 வீத அமெரிக்க மக்கள் ஒபாமாவை ஒரு முஸ்லிம் எனக் கருதுவதாகத் தெரிவித்திருந்தனர். எனினும் இதனை முற்றாக நிராகரித்திருந்த வெள்ளைமாளிகை ஒபாமா தொடர்ந்தும் கிறிஸ்தவராகவே இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

சாமி யார்?


மனித சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் இணைவது என்பது ஒரு நியதி. அதை விடுத்து, ஆணோ, பெண்ணோ, தனித்துத் துறவறம் என்ற நிலையில் வாழ்வது என்பது மனித நீதிக்கும் மனித நேயத்துக்கும் மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்துக்கும் எதிரான செயலாகும். அப்படிப்பட்ட ஒரு மனிதனின் தாய், தந்தையர் துறவறம் பூண்டிருந்தால் இந்த மனிதன் உருவாயிருக்கவே முடியாது. தான் வந்த பாதையை மறந்த – உணராதவர்களின் தத்துவமே துறவறம்.
இன்றைய இந்தியாவை எடுத்துக் கொண்டால் துறவறம் கொண்டுள்ள சாமியார்கள் அதாவது காவி அணிந்த போலிகள், பொது ஒழுக்கச் சிதைவுகளின் புகலிடங்காளக மடங்களை அமைத்து, தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று சுய விளம்பரம் செய்கிறார்கள். தங்களால் உருவாக்கப்பட்ட போலி மதச் சடங்குகளை கவர்ச்சிப் பேச்சாலும், மாய ஜால மாஜிக் வித்தைகளாலும் பரப்பி பக்தர்களை – பக்தைகளைக் கவிர்கிறார்கள்.(பக்த கூட்டங்கள் கவிழ்கிறார்கள்) ஆன்மீகம் என்ற போர்வையில் பாலியல் வன்முறைகளையும், சுய கற்பனையில் அமைந்த கடவுள் கொள்கைகளையும் செயல்படுத்துகிறார்கள்.
“அந்த ஆன்மீகவாதிகளை,’ “நடமாடும் தெய்வங்களை(?) – சாமியார்களை’ நாடிச் செல்கின்ற எந்த சீடரும் தனது சொந்த நலனுக்காக -சுயநலனுக்காக, ஓடுகிறார்களே தவிர, சமுதாய நலனுக்காக அல்ல. உண்மையான கடவுள் பக்தி என்பது, சக மனிதர்களுக்குத் தொண்டாற்றுவதிலும், சமுதாயத்துக்குப் பயன்படக் கூடிய வகையில் செயல்களை அமைத்துக் கொள்வதும், சுரண்டலுக்கும், அடிமைத்தனத்துக்கும் ஆட்பட்ட மக்களை விடுவிப்பதும், தனி மனித வாழ்க்கையின் பூரண ஒழுக்கம் போன்ற பல உயர்தர லட்சியங்களைப் பின்பற்றும் அடிப்படையில் அமைய வேண்டும். இதுவே கடவுகளுக்குப் பயப்படுதல் என்ற இலக்கணத்தில் அடங்கும்.
சாமி என்றால் என்ன? சாமி, யார் என்று அறியாத சிந்திக்க சோம்பேறிப்படும் மக்களை, புட்டப்பர்த்திகளும், பிரேமானந்தாக்களும், சந்திரசாமிகளும் ஏமாற்றுகிறார்கள்.இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனநாயகமா? சாமியார்கள் ராஜ்யமா? என சந்தேகப்படும் அளவிற்கு சாமியார்களுக்கு தலை வணங்கும் ஒரே நாடு இந்தியா!
தியோரகா பாபா என்கிற சாமியார் உயரமாக பந்தல் போட்டு அதில் முழு நிர்வாணமாக அமர்ந்திருப்பார். ஆசி பெற விரும்புவர்களை மேலே இருந்துக் கொண்டு உதைப்பது போல மிதிப்பார். இப்படி இவரிடம் ஆசி வாங்கியது குப்பனோ, சுப்பனோ அல்ல; நாட்டை ஆளும் வர்க்கத்தினர்; பெரிய(?) மனிதர்கள்.

நாகரிகம் தெரியாதவர்களா இவர்கள்? நாட்டுக்கே நாகரிகத்தைப் போதிக்கிறோம் என்றல்லவா கூறுபவர்கள்! சிந்திக்க தெரியாதவர்களா அவர்கள்? சீட்டோ, நாட்டோ என்றும் ஐ.நா மன்றம் வரை ஏறி மணிக்கணக்கில் ஆங்கிலத்தில் உரையாற்றும் விற்பன்னர்கள் தான்! என்ன செய்வது?
மேஜிக் நிபுணர், சூப்பர் ஸ்டார் புட்டப்பர்த்தி சாய்பாபா, தன்னை கடவுளின் அவதாரம என்கிறார். ஆனால் புட்டப்பர்த்தி வளாகத்தில் நடைபெற்ற கொலைகள், விழுந்த பிணங்கள்,சாயிபாபாவின் சங்கதியை நாற்றமெடுக்க வைத்துவிட்டன. ஆனால் இந்தச் சாமியாரின் காலைக் கழுவிக் குடிப்பதிலே, ஆளும் வர்க்கம் கூச்சப்படுவதில்லை. மக்கள் தம் காலிலே விழுவார்கள் என்று வித்தைக்காரர்கள் காவி உடை தரிக்கிறார்கள்! அவர்களது காலித்தனங்களை அரசாங்கங்கள் கண்டுக் கொள்வதேயில்லை. அதனால் தான் மூலைக்கு மூலை சாமியார்கள் முண்டாதட்டி எழுகிறார்கள்.
சந்திரசாமியின் சாகசங்கள் தினசரிகளில் தொடர்வது அண்மைக்கால் ரிலீஸ்.

குளியலறையில் வீடியோ காமிரா வைத்து பெண்களை நிர்வாணமாகப் படம் பிடித்து புளூ ஃபிலிம் வேட்டை நடத்தி வந்த திருச்சி பிரேமனந்த சாமியின் சங்கதிகள் நாற்றமெடுத்த செய்திகள் இதற்கு முன்னைய ரிலீஸ்! பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை கொடுக்காததால் விளைந்த விபரீதங்கள் அவை! இப்படிப்பட்ட சாமியார்களின் மாஜிக் வித்தை மந்திர ஜாலங்களை மக்கள் மத்தியில் காட்டும் போது, அறிவுடையோர்,அதாவது தெளிவான இறைக் கொள்கைகளை விளங்கியவர்கள், அவற்றை புரட்டல் என ஏசி ஒதுக்குவர்.
ஆராயும் தன்மையில்லாத, அதாவது சிந்திக்க சோம்பேறித்தனம் உள்ளவர்கள், கடவுள் கொள்கையின் வரையறை தெரியாமல், மதங்களில் வாழும் மாந்தர்கள் அப்படியா? என ஆச்சரியத்தால் வாய் பிளக்க நின்று கேட்பர்; கை கூப்புவர்; ஆசிரமங்களை நோக்கி பயணிப்பர்.
வீரவேசங்க கொண்ட வேங்கையானாலும் சதுப்பு நிலத்திலன் படுகுழியிலே வீழ்ந்து விட்டால் சாகத்தானே வேண்டும்!
சுய சிந்தனையில்லா மக்கள், பல கடவுளை நம்பும் மக்கள், மனித உருவங்களை தெய்வமாக வழிபடும் மக்கள் எல்லாம் மதம் எனும் குழியிலே விழுந்து அறிவையும் ஆற்றலையும் இழந்து வருகிறார்கள். இன்றைய உலகில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து மதங்களிலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர்களைத் தரகர்களாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அனைத்து மதங்களிலலும் புரோகிதர்கள் சாதாரண மக்களைப் பயமுறுத்தி, பக்திகாட்டிப் பிழைக்கிறார்கள்!

கற்பனைக் காவியங்களை வேதங்களாக்கி, மக்களின் மனங்களிலே மதம் எனும் மாயையை ஏற்படுத்தியிருப்பதால் மூலைக்கு மூலை சாமியார்கள் உருவெடுக்கிறார்கள். மக்கள் இவர்களைக் கண்டதும் இவர்களை வணங்காவிட்டால் , இவர்களுக்குப் பயப்படாவிட்டால் இவர்களுக்கு மரியாதை செய்யா விட்டால் நம்மை ஏதும் செய்து விடுவார்களோ என்று அச்சப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல! நிறைய பணம் வேண்டும்; கார், பங்களா, பட்டம், பதவி வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்; ஆக, இப்படிப்பட்ட அச்சத்திற்கும், பேராசைக்கும் பிறக்கும் மூட பக்தி மக்களை ஆட்டிப்படைக்கிறது.
சாமிகளோ,வசதி படைத்தவர்களிடம், பொன்னும், பொருளும் கறந்து பண இச்சையைத் தணிக்கிறார்கள்! அப்பாவிப் பெண்களிடம் காம இச்சையைத் தணிக்கிறார்கள். இப்படிப்பட்ட சாமியார்கள் கேவலம் ஒரு மயிரைக் கூடப் படைக்கச் சக்தி இல்லாதவர்கள் என்பதை . மக்கள் ஏனோ, உணராமல் உள்ளார்கள். மக்கள் விழித்துக் கொள்வது எப்போது?
உண்மையான அச்சம் எது தெரியுமா?

ஒவ்வொரு தனி மனிதனும் நம்மை இறைவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வைப் பெறுவது தான், உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.
உண்மையான அக, புற ஒழுக்கமுள்ள மனிதனாக வாழ வைக்கும்! அறிவுள்ளவனாக, பிறருக்குத் துன்பம் விளைவிக்காதவனாக, தன்னுடைய குடும்பம், வியாபாரம், உத்தியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையானதாகவும், உண்மையானதாகவும் ஆக்கும்! அப்படிப்பட்ட இறையச்சத்தைத்தான் இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.
உண்மையான ஆசை எது தெரியுமா?
ஒரு மனிதன் “” ஆசைபிடித்தவன்” என்றவுடன் பணம், தங்கம்,கார், பங்களா என்று நினைத்தால் அது தவறு. இவையெல்லாம் “”பேராசையை” குறிக்கும். உண்மையிலேயே ஆசை என்பது “”முயற்சி” என்ற செயலின் முதல் படியாகும். வாழ்க்கையில் முயற்சி எனும் செயலைச் செய்யாதவன் கேடு கெட்டச் சோம்பேறி என்பதைத் தவிர வேறில்லை.கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை முயற்சிதானே! பொன்னும், பொருளும், சம்பாதிப்பது குற்றமல்ல; அதை எப்படிச் சம்பாதிப்பது என்பதுதான் கேள்வி! அது மட்டுமா? சம்பாதித்ததை எந்தெந்த வழிவகையில் செலவு செய்வது என்பது அதைவிட முக்கியம். இந்த நேர்மையான முயற்சியுடைய ஆசையை இறைவணக்கமாகவே போதிப்பது இஸ்லாம்.

ஆக இப்படிப்பட்ட உன்னதமான லட்சியங்களையும், உயர்வான கொள்கைகளையும் உலகளாவிய சகோதரத்துவ பண்புகளையும் உள்ளடக்கிய கோட்டை தான் இஸ்லாம். இந்த நேரத்தல் ஒரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.கலாச்சார தாக்கம் என்பார்களே, அதுபோல, ஆரிய மாயையிலே தன்னுணர்வை இழந்த தமிழன் போல; வடவர்கள் ஆண்டதினால் தன்னுரிமை இழந்த தமிழகம் போல; பெரும்பான்மையான முஸ்லிம்கள் இஸ்லாமிய இலட்சியங்களையும், கொள்கைகளையும் அறியாமல், இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் போலவே வாழ்கிறார்கள்! அந்தோ பரிதாபம்!
23 வருட உலகளாவிய லட்சியப் போராட்டத்தில் உலக நாகரிகத்தையே மாற்றியதைத்த முஹம்மது நபி(ஸல்) அவர்களை முறையாக அறியாமல் உள்ளார்கள், முஸ்லிம்கள்! ஆகையால்,
1. சமாதி வழிபாடு எனும் சகதியில் சிக்கியிருக்கும் முஸ்லிம்களுக்கும், தனி மனிதர்களை உயர்த்திப் பிடித்து தலைவணங்கும் முஸ்லிம்களுக்கும் முதல் வேண்டுகோள்!
2. மனிதனுக்கு உயர்வு தாழ்வு கற்பித்து, ஆசிரமங்களில் வசிக்கின்றவர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் மாற்று மத சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
3. படைத்த ஒரே கடவுளை மட்டும் வணங்கு! மனிதனை வணங்காதே என்று ஏகத்துவப் புரட்சி செய்த ஏசு(ஈஸா)வையே வணங்கும் கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்!
4. மனிதர்களின் மடத்தனமான மதக் கொள்கைகளைப் பார்த்து, பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்காமல் இறை நிராகரிப்புச் செய்யும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இஸ்லாம் உங்கள் அனைவரையும் அழைக்கிறது!
ஆம்! இஸ்லாம் மதம் அல்ல! நேரிய வாழ்க்கை நெறி! ஓர் உலகளாவிய இயக்கமே இஸ்லாம்! இஸ்லாம் குறிப்பிட்ட மொழியினருக்கோ, பகுதியினருக்கோ, குலத்தினருக்கோ, நாட்டினருக்கோ உரிய மார்க்கம் அன்று! அது மனித குலம் முழுமைக்கும் சொந்தமான முழுமையான வாழ்க்கைத் திட்டம்! இஸ்லாத்தில் பிறப்பால் – நிறத்தால் – மொழியால் – குலத்தால் எவரும் உயர்ந்தவராகவோ, தாழ்ந்தவராகவோ முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை. புரோகிதர்களுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.

இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன் முன்னிலையிலும் எவரும் தன் சுய மரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது, சாஷ்டாங்கமான விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை! நடைமுறைப்படுத்த எளிமையானவை! கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் இஸ்லாமியச் சட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம் மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சிறப்பான வழிகாட்டுகிறது. மனிதனைத் தன்மானத்துடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே தூய இஸ்லாத்தின் உயர்போதனைகளை அறிந்து பின்பற்றுவீர்!

இஹ்திஸாப் சுயபரிசோதனை

த˜ஜ்கியா விற்கான முதல் நிலை அமைப்பு இஹ்திஸாப் ஆகும்.


இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்

அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.


வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜
'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)


'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
என்று கூறுவார்கள்.

அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'


இஹ்திஸாப் - ஒரு முஃமினுடைய தவிர்க்க இயலாத பண்பாகும்.

இஸ்லாமிய இயக்கம் தங்கள் உறுப்பினர்களிடையே இம்முறையை தீவிரமாகப் பின் பற்றியும் வலியுறுத்தியும் வருகின்றது.

அண்ணாரின் இயக்கந்தொட்டு இன்றுள்ள இயக்கங்கள் வரையிலும் இம்முறை பின்பற்றப்படுவதை நம்மால் காணமுடிகின்றது.


இஹ்திஸாப் இரண்டு வகைப்படும்.


1. தனி நபர் பரிசோதனை


2. கூட்டுப் பரிசோதனை


இவ்விரண்டையும் தனித்தனியாக அறிவோம்.


(1). தனிநபர் சுய பரிசோதனை

மனிதன் தன் அன்றாட வாழ்வில் காலை முதல் இரவு - வரை எத்தனையோ காரியங்களைச் செய்கின்றான்.

இறைவனுக்குப் பிடிக்காத இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்குகின்ற பலப்பல காரியங்களையும் அவன் செய்து விடுகின்றான்.

எப்படி அவற்றைக் களைவது? அவற்றிலிருந்து விலகி இருப்பது எப்படி?


தின்ந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை - காலை சுபஹ் தொழுகைக்கு முன்போ அல்லது இஷாவுக்குப் பின்பு படுக்கையில் அமர்ந்து தூங்கும் முன்போ - ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.


தூக்கத்தின் முந்தைய நேரம் சிறப்பானதாகும்.

தூங்கும் முன படுக்கையில் உட்கார்ந்த நிலையில் அன்றைக்கு காலையில் தூங்கி விடிந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் செய்த எல்லா செயல்களையும் மனதில் பட்டியலிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இன்றைக்கு காலையில் சுபுஹுக்கு சரியான நேரத்தில் எழுந்தோமா? சுபுஹ் தொழுகையை ஜமா அத்தோடு நிறைவேற்றினோமா? என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாக ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வரவேண்டும்.

நம்முடைய ஒரு நாளின் அனைத்து செயல்களும் நம் கண்முன்னே வந்தபின் அவற்றை முழுமையாக சீர்தூக்கிப் பார்த்தால் அவற்றில் உள்ள நிறைகுறைகள் நமக்குத் தென்படும்.

நம்முடைய சிறுசிறு தவறுகள் குறைகள் நம் பார்வையில் படும்.

நாம் நம்முடைய பெற்றோர்களின் பேச்சை மதியாது இருந்திருப்போம்!

அவர்களை உதாசீனப்படுத்தியிருப்போர்;

மனையாளை தேவையில்லாமல் கடிந்துரைத்திருப்போம்;

தேவையில்லாமல் பக்கத்துவீட்டுக் காரரிடம் சண்டை பிடித்திருப்போம்;

யாரையவாது தேவையில்லாமல் திட்டி இருப்போம்;

கோபப்பட்டிருப்போம்..............

அது போன்றே இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க யாரிடமாவது இஸ்லாமியக்கொள்கை கருத்துகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வாய்த்தும் அதனைத் தவற விட்டிருப்போம்...........

அல்லது யாராவது ஒருவர் நம்மிடம் இஸ்லாம் பற்றி சந்தேகங்கேட்கையில் தெளிவாக விளக்க இயலாது தடுமாறியிருப்போம்................


இப்படியாக இவை அனைத்தும நம்முடைய கவனத்துக்கு வரும் போது ஒரு நாள் வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் அமல்களில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்கள் யாவும் ஒரே பார்வையில் நேர்க்கோட்டில் வந்து நின்று விடும்.

எதை நாம் சீர்திருத்த வேண்டும்?

நம்மிடம் உள்ள எந்தெந்த தீய பண்புகளைக் குறைக்கவேண்டும்? என்பதையெல்லாம் நாம்அறிந்து கொள்ளலாம்;

நம்மிடம் முன்கோபம் உள்ளது;

நம்மிடம் அலட்சிய மனப்பான்மை உள்ளது;

அமல்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதைத் தடுக்கும் அசட்டைப் போக்கு உள்ளது;

பொறுப்பற்ற தன்மை உள்ளது எனப்பல சிறுசிறு குறைகள் தென்படும்.


இன்ஷா அல்லாஹ் இவற்றையெல்லாம் நான் எனது நாளைய வாழ்வில் தவிர்த்துக் கொள்வேன் என்று வைராக்கியம் பூண்டு கொள்கிறோம்

மறுநாளிலேயே இவை அனைத்தையும் நம்மால் களைய இயலாது;

ஆனால் ஆரோக்கியமான முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

இவ்வாறு சில நாட்களில் பெரும்பாலான தவறுகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணரலாம்.

அமல்கள் நாளுக்கு நாள் பொலிவடைவதையும் நம்மால் பார்க்க இயலும்.


(2) கூட்டு இஹ்திஸாப்

தனிநபர் இஹ்திஸாப் மூலமாக பெரும்பாலான நம்முடைய குற்றங்குறைகளை தப்புத் தவறுகளை களைய முடியும் என்றாலும் அது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயற்படும்.


அவ்வெல்லையைத் தாண்டி அதனால் செயற்பட இயலாது போகும்.

சில பல தவறுகளை சீர்படுத்துவதில் அது உதவிகரமாய் இராது.

உதாரணமாக நாம் சில செயல்களை 'தவறு என்றே கருத மாட்டோம்;

அவை நல்லவை என்று நினைத்தே செய்து வருவோம்.

நாமே அவற்றை நன்று என்று கருதுவதால் நம்முடைய 'தவறுகள் பட்டியலில் அவை இடம் பெறாது.


ஆனால் உண்மையில் அவை தவறான செயல்களாகவே இருக்கும்.

இப்பேற்பட்ட செயல்களைச் சீர்திருத்துவதில் தனிநபர் இஹ்திஸாப் பயனுள்ளதாக இராது.

அவ்வாறே சில தவறான செயல்களுக்கு நாம் சிறு வயதிலிருந்தே அடிமையாக ஆகி இருப்போம்


அதாவது தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக நம்மீதான அதன் தாக்கம் வீரியமுள்ளதாக மாறிப் போயிருக்கும்.

இவ்வகைத் தவறுகளை களையெடுப்பதிலும் சுய இஹ்திஸாப் பெரும்பங்கினை எதுவும் ஆற்ற இயலாது.


ஆக இத்தகைய தவறுகளை நீக்குவதில் நம்முடைய 'உள்ளிலிருந்து செயற்படும சக்தி' பயனற்றுப் போவதால் 'வெளியிலிருந்து செயல்படும் சக்தி' யொன்றை நாம் நாட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

அதுவே 'கூட்டு இஹ்திஸாப்'


இறைபாதையில் முன்னேறிச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பலர் ஒன்றுகூடி தங்களுடைய அஃமால்களை சீர்திருத்தி முறைப்படுத்திக் கொள்வதையே நாம் 'கூட்டு இஹ்திஸாப் என்றழைக்கின்றோம்.


கீழ்வரும் இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.


இறைநம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள்.
உற்ற தோழர்களாக இருப்பார்கள்;
உறுதுணையாகத் திகழ்வார்கள்;
நன்மையான செயல்களை (தங்களுக்கிடையிலும் பிறரிடத்திலும்) ஏவிக் கொள்வதிலும் தீமையான செயல்களை விட்டு (தங்களையும் பிறரையும்) காத்துத் தடுத்து நிறுத்துவதிலும் தொழுகையைநிலைநாட்டுவதிலும்இ ஜகாத்தை முறைப்படி கொடுத்து வருவதிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வதிலும் இவர்கள் தங்களுக்கிடையில் உதவியாளர்களாக விளங்கி வருவார்கள்.


தங்களுக்கிடையில் தவறுகளை சுட்டிக்காட்டி தவிர்த்துக்கொள்ளச் செய்வதிலும் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சிப் படிகளை மென்மேலும் அடைய இன்னும் என்னென்ன அமல்களை செய்ய வேண்டும்?

என்னென்ன அமல்களை அதிகரிக்க வேண்டும்?

என்னென்ன அமல்களை அழகாக்க வேண்டும்? என்பதனையெல்லாம் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கிறார்கள்.

இப்பண்பினைத் தான் கண்ணாடியின் பண்போடு உருவகப்படுத்திக் கூறியுள்ளார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.


'ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கண்ணாடியைப் போன்றவன் ஆவான்!' (புலூகுல் மராம்)


கண்ணாடி நம்மை - தன்முன் நிற்பவரை - அப்படியே பிரதிபலிக்கின்றது.

உங்களுடைய முகத்தில் அழுக்கோஇ அடுப்புக்கரியோ ஒட்டியிருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்தும்.

உங்கள் முகப்பூச்சு அதிகமாகிப் போனால் அதையும் சுட்டிக்காட்டும்.

கண்ணாடியில் தெரிவது நம்முடைய அச்சு அசலான பிம்பம்!

நாம் கண்ணாடியில் நம்முடைய குறைகளைக் கண்டு நம்மை அழகுபடுத்திக் கொள்கின்றோம்.


அவ்வாறே ஒரு முஃமினை இன்னொரு முஃமினை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அவனுடைய குறைகளைச் சுட்டிக்காட்டி மேலும் அவனை அழகுபடுத்துவதில் முனைகிறான்.

அவ்வாறே தன்னுடைய குற்றங்குறைகளை அவனிடமிருந்து அறிந்து கொண்டு தன்னையும் அழகாக்கி அழகானவான ஆக்கிக் கொள்கின்றான்.


கூட்டு இஹ்திஸாப் முறையில் இதைத்தான் நாம் கையாள்கிறோம்.

அங்கு அமர்ந்திருந்திருப்போரில் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தன்னைப்பற்றிய தன்னுடைய அமல்களைப் பற்றிய சுயவிமர்சனத்தை முன்வைப்பர்.

பிறகு அதன் மீதான ஆய்வும்இ சுட்டிக் காட்டலும்இ சீர்படுத்துதலும் நடைபெறுகின்றது.

கீழ்வரும் விஷயங்களின் கீழ் சுய விமர்சனம் செய்யபடுகின்றது.


(இங்கே முன்னேற்றபப பாதையில் உங்களுடைய நிலைக்குத் தக்கவாறு விமர்சனமும் மாறுபடும.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜமாஅத் தொழுகையை மட்டுமே குறிப்பிடுவர்.

அடுத்த நிலையில் உள்ளோர் சுனன் நவாஃபில் தொழுகைகளையும் குறிப்பிடுவர்.

அதனையடுத்து உள்ளோர் இரவுத் தொழுகையையும் குறிப்பிடுவர்.

இவ்வாறே ஒவ்வொரு இபாதா-விலும் அவரவர் நிலைக்கேற்றாற்போன்று விமர்சனம் மாறுபடும்)


அதனையடுதது தினசரி தொடர் குர்ஆன் ஓதுவது;

ஹதீஸ் ஆய்வு செய்வது மற்ற இஸ்லாமிய நூற்களை வாசிப்பது என்பன பற்றி கூறுவர்.


2. பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் மனைவி ஏனைய உறவினர்களோடு தன்னுடைய தொடர்பும்இ போக்குவரத்தும் எந்த அளவு உள்ளது?

அண்டை அயலார்கள்இ நண்பர்களோடு எந்த அளவு தொடர்பும் உறவும் உள்ளது? என்பதைப் பற்றிக் கூறுவர்.


இவ்விதம் ஒருவர் தன்னைப் பற்றிய முழுமையான சுய விமர்சனத்தை வைத்த பின்பு அதனைப் பற்றி யாருக்கும் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலோ தெளிவு பெற வேண்டிய இருந்தாரோ அதனை விரிவாக்க கேட்டுக் கொள்வர்.

அவருடைய நடத்தைகளில் ஏதேனும் குறைகள்முறைகேடுகள் தென்பட்டு சீர்திருத்த வேண்டி இருந்தால் அவற்றையும் சரிப்படுத்துவர்.


இதுவே கூட்டு இஹ்திஸாப்பின் நடைமுறை!


அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹி அலைஹி வசல்லிம் அவர்கள் கூறியுள்ளதாவது
'

ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவன் ஆவான். அதன் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்கு (முட்டுக்கொடுத்து) வலிமைப்படுத்துகின்றது' -

பிறகு அண்ணலார் தம்முடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.


குறைகளை மறைத்தும்இ குறைத்தும் நிறைகளை வளர்த்தும்இ உயர்த்தியும் ஒருவருக்கொருவர் செயல்பட்டால்தான் உறுதுணையாகஇ வலிமைப்படுத்துபவர்களாகத் திகழ முடியும்.

அதற்கு 'கூட்டு இஹ்திஸாப் முறை சிறப்பான முறையில் பயன்படுகிறது.
நாம் சாலிஹீன்களாக சான்றோர்களாக மாறவேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற நடைமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆகையால் தன்னைப் பற்றித் தானே விமர்சிக்கலாமா?

தன் அமல்களை தானே வெளிப்படுத்தலாமா?

பிறருடைய குறைகளை இது துருவிஆராய்வது போல் அமையாதா?...........

இன்னும் இவை போன்ற கேள்விகள் எழுவதெல்லாம் வாய்ப்பே இல்லை

சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை!


அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள்: (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)

இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.

இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.

சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!

தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.

இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.

"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)

irudithoodu.blogspot.com

மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை

மனிதன் குரங்கில் இருந்து பிறக்கவில்லை (டார்வின் கோட்பாடு தகர்க்கப்பட்டுள்ளது)




ஈகரை தமிழ் களஞ்சியம்


CHAD எனும் நாட்டில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட படிம மண்டை ஓடு பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மறுக்கிறது. டார்வின் கொள்கைகளை பின்பற்றும் விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையை இது ஆட்டங்கான வைத்துள்ளது என்று கூறுகின்றனர். ‘குரங்கிலிருந்து மனிதன் வந்தான்’ எனும் கட்டுக்கதை மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்துள்ளது.


மத்திய ஆபிரிக்க நாடான (CHAD) டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய படிம மண்டை ஓடு மனிதனின் பரிணாம வளர்ச்சி சம்பந்தமான கோட்பாட்டிற்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. உலக புகழ் பெற்ற விஞ்ஞான பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகளில் இதற்கு பெரும் பகுதி ஒதுக்கப்பட்டன. ‘மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து தான் பரிணாம வளர்ச்சியடைந்தான்’; என்ற கடந்த 150 வருடங்களாக டார்வினை பின்பற்றுபவர்களால் பிடிவாமாக கூறப்பட்டுவந்த வாதங்களை இந்த புதிய படிமம் வீழ்த்திவிட்டது. மைகேல் பிரண்ட், என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்கு Sahelanthropus tchadensis என்று பெயரிடப்பட்டுள்ளது.


இந்த படிமமானது டார்வினை பின்பற்றுபவர்களை பொருத்தவரையில் கிளி கூன்டிற்குள் பூனையை விட்ட கதையாகிவிட்டது. உலக புகழ்பெற்ற நேச்சர் என்ற சஞ்சிகை இவ்வாறு கூறுகிறது:
‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு மனிதன் சம்பந்தமான எமது கருத்துகளை அழித்து விட கூடும்’; (1)
ஹாவார்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த டேனியல் லிபர்மேன் இவ்வாறு கூறுகிறார்:
‘இந்த கண்டுபிடிப்பின் தாக்கமானது ஒரு சிறிய அணுகுண்டின் தாக்கத்தை போன்றதாகும்’. (2)


இவ்வாறு சொல்ல காரணம் இந்த மண்டை ஓடு சுமார் 7 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அது மேலும் மனிதனை போனற அமைப்பில் உள்ளது. (ஏனெனில் இது வரை பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் சுமார் 5 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த Australopithecus என்றழைக்கப்படும் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தை மனிதனின் மூதாதைகள் என்று அழைத்து வந்தனர்)


1920 ஆண்டிலிருந்து Australopithecus சில பண்புகள் மனிதனை போன்று இருப்பதால்,; இத்தகைய அழிந்த உயிரினம் மனிதனின் மிக பழமையான மூதாதையர் என்று பரிணாம வளர்ச்சி ஆதரிப்பவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த ஆய்வை மறுக்க கூடிய பல சான்றுகள் தோன்றியுள்ளன. உதாரணமாக, 1990ம் ஆண்டு நடைபெற்ற Australopithecus ஆராய்ச்சியில் அவர்கள் வாதிட்டதை போன்று அவை மேலாக நடக்கவில்லை என்றும், மாறாக அவை குரங்களை போன்று நடந்தன என்பது தெரியவந்தது.. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Sahelanthropus tchadensis படிமமானது சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குரங்கு போன்ற Australopithecus , உண்மையில் ‘மனிதனை போன்று’ உள்ளது வேறு வகையில் சொல்வதானால், அது பரிணாம கோட்பாட்டை தகர்கிறது


இதில் முக்கியமாக : முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரும் அளவில் மிகவும் வித்தியாசமான குரங்கினங்கள் வாழ்ந்து அழிந்துள்ளன. இதனுடைய மண்டை ஓடு அல்லது எழும்புகள் மனிதனுடையதை போன்று உள்ளது. இருப்பினும் இவ்வொற்றுமைகளை கொண்டு அவைகளை மனிதனுடன் தொடர்புபடுத்த முடியாது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இத்தகைய அழிந்து போன உயிரினங்களின் மண்டை ஓடுகளை அவர்களது கோட்பாட்டின் அடிப்படையில் அடுக்கி, ‘குரங்கிலிருந்து மனிதன்’ வரையுள்ள ஏணி என்று திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். இருப்பினும் இவைகளை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாக, அத்தகைய எந்த ஒரு ஏணியும் கிடையாது என்பதையும், முன்பு ஒரு காலத்தில் வெவ்வேறு வகையான குரங்கினங்கள் வாழ்ந்துள்ளன என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மனிதன் அவனுக்கு பின்னால் எத்தகைய பரிணாம வளர்ச்சியும் இன்றி திடீரென தோன்றினான். வேறு வகையில் சொல்வதானால், அவன் படைக்கப்பட்டான்.


நேச்சர் என்ற பத்திரிக்கையின், 11 ஜுலை 2002 இதழில், John Whitfield ஜோன் வில்ட்பீல்ட், ‘மிகவும் பழமை வாய்ந்த மனித குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்ற கட்டுரையில், வாஷிங்டன் நகரிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தின் மனிதவியல் ஆராய்சியாளர் பேர்னாட் வுட்டின் குறிப்புகளை மேற்கோள்காட்டுகிறார்:


நான் 1963ம் ஆண்டு மருத்துவ கல்லூரிக்கு சென்ற போது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஏணியை போன்று காட்சியளித்தது. அவர் (பேர்னாட் வுட்) கூறுகிறார் : குரங்கிலிருந்து மனிதன் வரையான மத்திய தரமானவைகளை கொண்டு வளர்ச்சியடைந்து செல்லும் ஏணி, இறுதியானதை தவிர ஏனையவைகள் ஒவ்வொன்றும் குரங்கு போன்றேயுள்ளது.


தற்போது மனிதனின் பரிணாமம் போன்றுள்ளது. நம்மிடம் பண்டைய படிமங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றயவைகளுடன் எவைகள், எவ்வாறு தொடர்புபட்டுள்ளன. அவ்வாறு ஒன்று இருந்தால், அத்தகைய மனிதனின் மூதாதையர்கள் இன்றும் விவாதிக்கப்படுகிறார்கள். (3)
நேச்சர் பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கை ஆசிரியரும் ஆராய்சியாளாருமான, ஹென்றி கீ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட படிமத்தை மிக முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார். த கார்டியன் என்ற பத்திரிக்கைகளில் வெளியான கட்டுரையில் படிமத்துடனான விவாதம் சம்பந்தமான எழுதுகிறார்:


முடிவு எவ்வாறிருந்த போதிலும், விடுபட்ட தொடர்பு என்ற பழைய சிந்தனை .முட்டாள்தமானது என்பதை மண்டை ஓடு காட்டுகிறது. விடுபட்ட தொடர்பானது, எப்பொழும் ஆட்டங்காணக்கூடியதாகவும், முழுமையாக பாதுகாக்ககூடியதல்ல என்பது இப்போது உணரப்பட்டுள்ளது. (4)


சுருங்க கூறுவதானால், நாம் அடிக்கடி பத்திரிக்கைகளிலும் சஞ்சிகைகளிலும் காணும் ‘குரங்கிலிருந்து மனிதன் வரை நீண்டு செல்லும் பரிணாம ஏணிக்கு’ விஞ்ஞான ரீதியில் எந்த மதிப்பும் கிடையாது. அவை கண்மூடித்தனமாக பரிணாம வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு சிறிய குழுவால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமாகும். இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட வேளை, பரிணாம வளர்ச்சிக்கு முரண்படும் ஆதாரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்காவை கலக்கிய (Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong) என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியரான அமெரிக்க உயிரியலாளர் ஜோனதன் வெல்ஸ் பிரச்சார வழிமுறைகளை இவ்வாறு கூறுகிறார்:


மனிதனின் தோற்றம் சம்பந்தமான ஆழமான சந்தேகங்களை பற்றி பொது மக்களுக்கு அரிதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு மாறாக, மனிதவியல் ஆராய்சியாளர்களாலேயே ஏற்று கொள்ள முடியாத வேறொவரது கோட்பாட்டின் நவீன வடிவத்தை ஏற்று கொள்ளும் படி நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம். அலங்காரமான குகை மனிதன் அல்லது நடிகர்களின் பெரும் அலங்காரங்களை கொண்டு இந்த கோட்பாடு காண்பிக்கப்படுகிறது. (5)


டார்வினின் கட்டுக்கதை தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. டார்வினின் பிழை, 19ம் நூற்றாண்டின் மூடநம்பிக்கை, விஞ்ஞானத்தின் முன்னேற்றம் காரணமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான உலகம் எல்லாவற்றையும் விட முக்கியமான உண்மையான நாம் வாழும் பிரபஞ்சம், அதிலுள்ளவைகள் அனைத்தையும் இறைவன் தான் படைத்தான் என்ற உண்மையின் பக்கம் விரைந்து வருகிறது.
ஆய்வில் உதவிய நூற்கள்


(1) John Whitfield, “Oldest member of human family found”, Nature, 11 July 2002
(2)D.L. Parsell, “Skull Fossil From Chad Forces Rethinking of Human Origins”, National Geographic News, July 10, 2002
(3) John Whitfield, “Oldest member of human family found”, Nature, 11 July 2002
(4) The Guardian, 11 July 2002
(5) Jonathan Wells, Icons of Evolution: Science or Myth, Why Much of What We Teach About Evolution is Wrong, Washington, DC, Regnery Publishing, 2000, p. 225




eegarai.net/-f17/---t32545.htm?theme_id=1351

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - கன்னியாஸ்திரி இரெனா ஹன்டோனோ

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன்என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்ததுஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த ''Liaision Maria'' என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிக்கும் 
இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ''Stray Sheeps'' என்று சொல்லப்படக் கூடிய''காணாமல் போன ஆடுகளை'' தேடுவதாகும். ''காணாமல் போன ஆடுகள்'' என்று அவர்கள் குறிப்பிடுவது,நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்லமாறாக ''காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, ''கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை''. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் ''காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள்நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான்இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன்பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளேநான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லைநான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது.கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்துஅல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய(Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன்இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன்ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்லஇஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.
''இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்'' என்று எங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,
ஏழைகளாக இருக்கிறார்களேஅவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
முட்டாள்களாக இருக்கிறார்களேஅவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களேஅவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களேஅவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
தீவிரவாதிகளாக இருக்கிறார்களேஅவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் ''இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்'' என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள்ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன்நான் அவர்களிடம், ''நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாதுமற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்'' என்று கூறினேன்.
உதாரணமாக,
பிலிப்பைன்ஸ் நாட்டில்ஏழைகளாகவும்படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களேஅவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
மெக்ஸிகோ ஒரு ஏழை நாடுஅந்நாட்டில்குற்றவாளிகளாகவும்திருடர்களாகவும்குடிகாரர்களாகவும்,கற்பழிப்பு செய்பவர்களாகவும்சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களேஅவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!
அயர்லாந்து குடியரசு நாடுஇந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில்சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடுஇந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லைஇந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான்அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள்ஐரோப்பிய சமூகம் அவர்களை ''அயர்லாந்தின் தீவிரவாதிகள்'' என்று கருதுகிறதுஅவர்கள் ''ஐரோப்பிய தீவிரவாதிகள்''என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்தாலியைப் பாருங்கள்போதைப் பொருள் கடத்துபவர்கள்சூதாட்டக்காரர்கள் இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், ''இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே'' கூறினேன்அப்போது நான்இஸ்லாத்தைஇஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன்அதற்கு, ''நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்'' என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.
நான் குர்ஆனைப் படித்த போதுஅது குறிப்பாக ''இறைவன் ஒருவனேஒரே ஒருவன் தான்'' என்று வலியுறுத்தியதுஅது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ''திரித்துவக் கடவுள் கொள்கைக்கு'' (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்ததுஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனேஎன்றிருக்கிறதுஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவபாதிரியார் அவர்கள் போதித்த போது ''கடவுள் ஒருவரேஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார்அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியதுஎன் ஆழமான உள் மனது ''இறைவன் ஒருவனேஎன்றும் மேலும் இது (குர்ஆன்உண்மையானது தான்'' என்றும் கூறிற்று.
மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம்விவாதித்தேன்.
''கடவுளின் திரித்துவக் கொள்கை'' (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார்பின்னர் அவர்ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போலஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.
அதற்கு நான்உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம்எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவாஇது சாத்தியம் தானேஎன்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறினார்அதற்கு நான்இது சாத்தியமானதேகூறி முன்னாள் வந்துஒரு சதுரத்தை வரைந்தேன்முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ''முடியாது'' என்று கூறினார்முன்பு ''இதற்கு சாத்தியமே இல்லை'' என்று கூறிய அவர்தற்போது ''முடியாது'' என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ''ஏன்?''
அதற்கு பாதியார், ''இது நம்பிக்கை''. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள்,அப்படியே இதை விழுங்கிவிடுஇதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதேகடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதேஇதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டதுஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''இந்த மேசைகளை உருவாக்கியது யார்?'' என்று கேட்டேன்.அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ''இந்த மேசைகளை உருவாக்கியது 'தச்சர்கள்' (Carpenters)'' என்றேன்.
''ஏன்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள்இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றனஇந்த மேசைகள் எப்போதும் ''தச்சார்களாக'' (Carpenters) மாறமுடியாதுமேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter)மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
''நீ என்ன சொல்ல வருகிறாய்?'' பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான்இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார்ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான்உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான்ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது!மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.
அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன்ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் ''ஜெனரலாக'' தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும்ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!
''நீ என்ன சொல்ல வருகியாய்?'' பாதிரியார்
அதற்கு நான், ''மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார்மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது'' என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன்ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், ''என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும்மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்'' என்று கூறினேன்.
இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.
இக்கட்டுரை முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து சுவனத்தென்றல் நிர்வாகியால்எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.)
''Jazaakallaahu khairan''



இது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம். )
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16