வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

சதாம் - நியாயமற்ற விசாரணையில் அநீதியான தீர்ப்பு - அ.மார்க்ஸ்

அமார்க்ஸ்அமார்க்ஸ்தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கியவர். சதாம் தூக்கிலிடப்பட்டதையொட்டிய அவரது பேட்டி ஒன்று வாசகர்கள் பார்வைக்காக:



சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


உலகமயமாக்கல் காலத்தில் அறங்களின் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஈராக் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா மூன்று காரணங்களைச் சொன்னது.


1. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன.


2. செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் ஈராக்கிற்கும் தொடர்பு இருக்கிறது.


3. அல்கொய்தா அமைப்பிற்கும் சதாமுக்கும் தொடர்பு இருக்கிறது.


ஆனால் மேற்சொன மூன்று குற்றச்சாட்டுகளையும் அமெரிக்காவால் நிரூபிக்க முடியவில்லை.மேலும் சதாம் தூக்கிலிடப்படுவதற்கு பல உலக நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியது. ஐ.நா.சபையும் ஒப்புதல் வழங்கவில்லை. நியாயமாகப் பார்த்தால் சதாம் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். சதாமிற்காக வாதாடிய இரண்டு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நியாயமற்று நடந்த விசாரணையின் முடிவில் அநீதியான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 148 பேரைக் கொன்றதற்காக சதாமுக்குத் தூக்கு என்றால் 60000 சிவிலியன்களை, ராணுவ வீரர்களை அல்ல, சிவிலியன்களைக் கொன்ற புஷ்ஷிற்கு என்ன தண்டனை?






இப்போது நாம் சதாமுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது கூட நம் குற்ற உணர்வைத் தணித்துக் கொள்ளும் வழியோ என்று தோன்றுகிறது. நாம் கையாலாகாதவர்களாய் நின்று கொண்டிருக்கிறோம்.


சதாமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை ஷியா முஸ்லீம்கள் வரவேற்றுள்ளனரே, எனவே இதை ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு என்று கூறமுடியுமா?


முஸ்லீம்களுக்குள் சன்னி, ஷியா பிரிவுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இதை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது உலக முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்கள் சன்னி, ஷியா பிரிவை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் தியாகத் திருநாளில் சதாம் கொல்லப்பட்டிருபதைக் கண்டிக்கின்றன. இப்போது 'அரசியல் இஸ்லாம்' என்கிற கருத்தாக்கம் உருவாகியுள்ளது.


1992க்கு முன்பு இந்திய முஸ்லீம்கள் பெரிதும் மார்க்க விஷயங்களையே விவாதித்தனர். ஆனால் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்பு முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கினர். அப்படிப்பட்ட சூழல் இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.


இந்தப் பிரசினையில் இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


இந்தியா சதாம் தூக்கிலிடப்பட்டது 'துரதிர்ஷ்டவசமானது' என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இது போதாது. இந்தியா அமெரிக்காவுடன் செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சதாம் தன் ஆட்சியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவின் ஆதரவாளராகத்தான் இருந்தார். தான் முஸ்லீமாக இருந்தபோதும் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்தியாவிற்கு ஆதரவாக நின்றவர் சதாம். அத்தகைய மாபெரும் மனிதரின் மரணத்திற்கு வெறுமனே கண்டனங்கள் மட்டுமே போதாது. ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமை கொள்ள அதிகநேரம் ஆகாது என்பதை இந்தியா உணரவேண்டும்.


இந்த பிரச்சினையை உலகம் முழுக்க இடதுசாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?


வழக்கம்போல இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் இடதுசாரிகள் எதிர்ப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஈரானில் ஷா ஆட்சி லிபரலாகத்தான் இருந்தது. ஆனால் மோசமான அமெரிக்க ஆதரவு நிலையை ஷா ஆட்சி கடைப்பிடித்தது. ஆனால் கொமேனியின் ஆட்சிக்காலத்தில் முழுக்க முழுக்க அமெரிக்க எதிர்ப்பு இருந்தது. ஆனால் அது அடிப்படைவாதப் பண்புகளுடனே இயங்கியது. கொமேனியின் ஆட்சிக்காலத்தில்தான் சல்மான் ருஷ்டிக்கு 'பத்வா'விதிக்கபட்டது உங்களுக்குத் தெரியும். இப்போது சதாமை எடுத்துக்கொண்டாலும் அவர் பல சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரியாகச் செயல்படார் என்பது உண்மைதான். பாத் கட்சி இடதுசாரி பண்புகளைக் கொண்டிருந்தாலும் சதாம் காலத்தில் அது மாறியது. சதாம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதரவோடும் பின்னணியோடும்தான் செய்யப்பட்டன. அதேபோலதான் ஒசேமாவும். ஆனல் சதாம் குற்றம் செய்தவர் என்றால் அதைத் தண்டிக்கும் அதிகாரமும் உரிமையும் ஈராக் மக்களுக்கு இருக்கிறதே தவிர அமெரிக்காவிற்கு அல்ல. ஆனால் இப்போது காலம் மாறியிருக்கிறது. இனியும் உலக முஸ்லீம் மக்கள் அமெரிக்காவை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அவர்கள் 'ஒன்றுபடட் இஸ்லாம்' என்னும் கருத்தாக்கத்தோடு அமெரிக்காவிற்கு எதிராக போராடத் தயாராகிவருகிறார்கள்.


இந்தியாவில் முஸ்லீம் ஆதரவுச் சக்திகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?


சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு எதிராக சென்னையில் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் போராடியிருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. த.மு.மு.க நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகளின் அமைப்பாளர் தோழர்.தொல்.திருமாவளவன் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டார் என்று அந்த அமைப்பினரே தெரிவிப்பது ஆறுதலாக இருக்கிறது. ஆனால் முஸ்லீம் ஆதரவுச் சக்திகள் ஏதோ முஸ்லீம்கள் நடத்தும் கூட்டத்திற்குச் சென்று வாழ்த்துரை வழங்குவது என்றில்லாமல் அவர்களது பிரச்சினைகளைத் தங்கள் பிரச்சினையாக உணர்ந்து அந்தப் பணியைத் தாங்களே மேற்போட்டுக்கொண்டு செயல்பட முன்வரவேண்டும்.


கருணையாளனிடம் கேட்போம்


அன்பு சகோதர சகோதரிகளே!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்."துஆ" நம் வணக்கத்தில் ஒன்றாகும்.அந்த வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ் (ஜல்) தவிர வேறு யாருமில்லை. இவ்வுலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதனே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு மனக்கவலைகள், தேவைகள் நிறைவேறவேண்டுமென்ற ஏக்கங்கள் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. அல்லாஹ் மிக இரக்கமுடையவன். நாம் அவனிடம் கையேந்துவதை விரும்புபவன்.

அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).

பாவங்கள் செய்வது மனிதனின் இயல்பு. அதை திருத்திக்கொள்வதும் அத்துடன் அதற்காக தவ்பா செய்வது தான் அதற்கான சரியான தீர்வு. நான் பாவங்கள் செய்தவன் என்பதால் என் துஆ இறைவனிடன் அங்கீகரிக்கப்படாது என்று கருதுவது, தனக்குதானே ஒருவன் தப்பிக்க தேடும் ஒரு தவறான வழியாகும். மீண்டும் அந்தப் பாவமான செயல்களின் பால் திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் செய்வது தான் தவ்பா. அப்படி செய்துவிட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே பாவத்தை செய்து விட்டால் அல்லாஹ்விடம் சத்தியத்தை மீறிய குற்றத்துக்கு ஆளாகிவிடுவோமே என்று நினைக்கிறான் மனிதன். வரம்பு மீறி தீங்கிழைத்த பாவிகளையும் அல்லாஹ் மன்னிக்கிறான். அப்படியிருந்தும் "நாங்கள் கேட்டால் கிடைக்காது அதனால் இறைவனின் நெருக்கத்தை பெற்றவர்களிடன் முறையிட்டு பெறுகிறோம் என்று சொல்வது" அல்லாஹ்வின் கருணை மீது அவர் கொண்டுள்ள சந்தேகம் இல்லையா? யார் மற்றவருக்காக துஆச்செய்தாலும், தேவை உள்ளவர் அல்லாஹ்விடன் கொண்டுள்ள நெருக்கத்தை பொருத்துத்தான் கொடுப்பதும் மறுப்பதும் அமையும் . அதனால் அல்லாஹ்வின் அளவற்ற கருணைமீது நம்பிக்கை வைத்து கிடைக்கும் என்ற மன உறுதியுடன் அவனிடமே அனைத்தையும் கேட்போமாக.

ஐவேளை தொழுகைக்குப்பிறகும் நாம் துஆக்கேட்கிறோம். ஆனால் மனதை ஒருங்கினைத்து கேட்கிறோமா என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. வழக்கமாக நாம் ஒரேமாதிரியான துஆக்களை கேட்பதால் நம் சிந்தனை இங்கே இல்லாவிட்டாலும் நம் நாவு அதை அடுக்காக கேட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை, அது சரியான முறையாகாது. மறதியில் கேட்பதை இறைவன் விரும்புவதில்லை. மனதை ஒன்றி, அவன் நம்மை கவனிக்கிறான் என்பதை மனதால் நினைத்து, நாம் என்ன கேட்கிறோமோ அந்த சூழ்நிலையை கண்முன் நிறுத்தி பனிவுடன் கேட்கவேண்டும். அவன் கண்டிப்பாக நம் துயரத்தை நீக்குவான் என்ற உறுதியோடு கேட்கவேண்டும்.

இறைவன் நம்மை படைத்ததன் நோக்கம் அவனை நாம் வணங்கவே!. அதற்க்காக சன்னியாசத்தையும் அவன் விரும்பவில்லை. நாம் இப்போது வாழும் வாழ்க்கையே அவனின் இபாதத்தில் கழிக்கமுடியும். எப்படியென்றால், நாம் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை செய்யும் ஒவ்வொரு செயலையும் இறைவன் அனுமதித்த வகையில் செய்வதாகும். இஸ்லாத்தின் கடமைகளை சரியான நேரத்தில் நிறைவேற்றியும், பொய் சொல்லாமலும், பொறாமை கொள்ளாமலும், புறம் பேசாமலும், மற்றவருக்கு நாவினாலும், உடல் உறுப்பினாலும் தீங்கிழைக்காமலும், முடிந்தவரை மற்றவருக்கு உதவியாகவும், ஹலாலான வழியில் பொருளீட்டியும், நம்பிக்கை மோசடி செய்யாமலும், தர்மங்கள் செய்தும், முடியும்போது நபிலான வணக்கங்களை செய்தும், பயன் தராத காரியங்களில் நேரத்தை வீணாக்காமலும், முக்கியமாக நாம் ஒவ்வொரு நொடியும் இறைவனால் கண்கானிக்கப்படுகிறோம் என்பதை புரிந்தும், அவனுக்கு பயந்தும் வாழ்ந்தாலே நாம் ஒவ்வொரு நாளையும் அல்லாஹ்வின் பொருத்தத்துடன் கழித்த நல்லவர்களாகிவிடுகிறோம். சுருக்கமாக நம் வாழ்க்கையில் இறைவன் விரும்பாதவைகளை தவிர்த்தல் ஆகும். இவ்வாறு வாழ்ந்தால் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்காமல் அவனின் பொருத்தத்தை பெறலாம், அவனிடம் தயங்காமல் நம் தேவைகளையும் கேட்கலாம்.

சில குறிப்பிட்ட நேரங்களில் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன என்ற நமது கண்மணி நபி(ஸல்) அவர்களின் அறிவிப்பை இப்போது பார்ப்போம்.

(கீழே தரப்பட்டுள்ளவைகள் சத்திய மார்க்கம்.காம்-லிருந்து எடுக்கப்பட்டவைகள்)

துஆ (பிரார்த்தனை) செய்ய சிறந்த நேரங்கள்!

"என்னிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்." (அல்குர்ஆன் 040:060)

என்று இறைவன் தனது திருமறையில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினைக் குறித்து கூறுகின்றான்.

நபி (ஸல்) அவர்களும் கூட, "பிரார்த்தனையே வணக்கமாகும்" எனக் கூறியுள்ளார்கள்.

இறைவனை வணங்கும் வணக்கத்திற்கு நிகராகக் கருதப்படும் "பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட குறிப்பிட்ட சில நேரங்கள் உள்ளன" என்று நபி(ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சில கீழே:

இரவின் மூன்றாவது பகுதி.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒவ்வோர் இரவின் இறுதியில் மூன்றாம் பகுதியில் நமது இரட்சகனும் ரப்புமாகிய அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருகிறான். மேலும், 'என்னை அழைப்பவர் உண்டா?, நான் அவருக்கு பதிலளிப்பேன். என்னிடம் தமது தேவைகளை கேட்பவர் உண்டா? நான் அவருக்கு வழங்கக் கூடும். என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் உண்டா? நான் அவர்களை மன்னிக்கக்கூடும்' என்று கூறுகின்றான்" (ஸஹீஹ் புகாரி : ஹதீஸ் குத்ஸி)

அம்ரு இப்னு அபஷ் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தமது வணக்கத்தின் போது இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்க வாய்ப்புள்ள நேரம் இரவின் இறுதி பகுதி நேரம் ஆகும். ஆகையால் உங்களால் அந்நேரத்தில் இறைவனை நினைவுகூர்ந்து வணங்குபவர்களில் ஒருவராக இருக்க இயன்றால் அதை செய்யுங்கள். (அத் திர்மிதி, அந் நஸாயீ, அல் ஹாக்கீம் ஸஹீ)

மக்கள் உறக்கத்திலும் உலக இன்பங்களிலும் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறான் அல்லது ஒரு பதிலளிக்கும் நேரம் ஏற்படுத்தி தூக்கத்தை வென்று அவனிடம் தமது எல்லாவித தேவைகளை கேட்பவர்களுக்கு அருளுகின்றான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவின் பகுதியில் ஒரு நேரம் இருக்கிறது அந்நேரத்தில் எந்த முஸ்லிமும் இந்த உலகத்தின் விஷயத்தில் அல்லது மறுமையின் விஷயத்தில் கேட்டு அது அளிக்கப்படாமல் இருப்பது இல்லை; இது ஒவ்வொரு இரவிலும் இருக்கிறது." (முஸ்லிம் : 757)

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், "பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் துவாக்கள் நிராகரிக்கப்படுவது இல்லை." (அஹ்மத், அபு தாவூத் # 521, அத்திர்மிதி # 212, ஸஹீஹ் அல் ஜாமி # 3408, அந்நஸாயி மேலும் இப்னு ஹிப்பான் ஸஹீஹ்)

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம்.

அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி பேசும் போது கூறினார்கள், "வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உள்ளது; அதை ஒரு முஸ்லிம் தனது பிராத்தனையில் பெற்றுக்கொண்டு ஏதேனும் அல்லாஹ்விடம் கேட்டால், அல்லாஹ் அந்த பிராத்தனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வான். மேலும் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளினால் அதன் சிறிய அளவு நேரத்தை சைகை மூலம் காட்டினார்கள்." (ஸஹீஹுல் புகாரி)

ஜம் ஜம் நீர் குடிக்கும் போது.

ஜாபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஜம் ஜம் நீர் எதற்காக குடிக்கப்படுகிறதோ அதற்கே உரியது." (அஹ்மத்:357, இப்னு மாஜா:3062)

இதன் பொருள் ஜம் ஜம் நீர் குடிக்கும் போது ஒருவர் மனதில் என்ன எண்ணத்தோடு அதனை குடிக்கின்றாரோ அதனை அல்லாஹ்விடமிருந்து பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

ஸஜ்தாவில் இருக்கும் போது.

அபு ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிலை ஸஜ்தாவில் இருக்கும் போதே ஆகும். ஆகையால் அந்நிலையில் அல்லாஹ்விடம் அதிகமாக துவா செய்து தமது தேவைகளை கேளுங்கள். (முஸ்லிம், அபு தாவுத், அந்நஸாயி மற்றும் ஸஹீஹ் அல் ஜமீ # 1175).

இரவில் விழித்தெழும் போது.

உபைதா பின் அஸ் ஸமித்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் ஒருவர் இரவில் விழித்து எழுந்து லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷைய்யின் கதிர். அல்ஹம்துலில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(இதன் பொருள்: வணக்கத்திற்குரிய தகுதி எவருக்கும் இல்லை அல்லாஹ்வைத்தவிர. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணைகள் எவரும் இல்லை. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் அவனுக்கே எல்லாப்புகழும். எல்லா கண்ணியமும் அவனுக்கே . மேலும் அவனைத் தவிர எவரும் வணக்கத்திற்குரிய தகுதியுடையவர்கள் இல்லை. மேலும் அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் எவ்வித வல்லமையும் சக்தியும் அல்லாஹ்வையன்றி இல்லை)

இதைக் கூறிய பிறகு அல்லாஹும்மக்பிர்லி (எனது இறைவனாகிய அல்லாஹ்வே என்னை மன்னிப்பாயாக) என்று கூறி அல்லாஹ்வை அழைத்துப் பிராத்தித்தால் அல்லாஹ் பதிலளிப்பான். அவன் உளுச் செய்து தொழுதால் அவனது தொழுகையும் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். (ஸஹீஹுல் புகாரி)

நோன்பாளியின் துவா அவன் நோன்பை விடும் வரை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மூவரின் துவா அல்லாஹ்வினால் நிராகரிக்கப் படாது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு செய்யும் துவா; நோன்பாளியின் துவா; பிரயாணத்தில் இருக்கும் பயணியின் துவா." (அல் பைஹகி, அத் திர்மிதி – ஸஹீஹ்)

நோன்பாளி நோன்பு துறக்கும் வேளை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கூறினார்கள், "மூவரின் துவாக்கள் எப்போதும் (அல்லாஹ்வினால்) நிராகரிக்கப்படுவதில்லை. அவர்கள்: ஒருவர் தமது நோன்பு துறக்கும்போது கேட்கும் துஆ; நீதியான ஆட்சியாளர்; (அநியாயமாக)பாதிக்கப்பட்டவர்." (அஹமத், அத்திர்மிதி)

அல்லாஹ்வையன்றி நம் மீது இரக்கம் கொள்பவர் யாருமில்லை. அவனையன்றி உதவி செய்பவர் யாருமில்லை. அவன் கொடுப்பதை தடுப்பவர் யாருக்குமில்லை அவனின் தீர்ப்புகளை மாற்றும் சக்தி எவருக்குமில்லை.

முக்கியமாக நமதூரில் நோயால் சிரமப்படும் சில சகோதர சகோதரிகளையும் உங்களது துஆவில் தயவு செய்து மறந்துவிடாதீர்கள் சகோதர சகோதரிகளே.

-சுப்ஹானகல்லாஹும்ம அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லா அன்த்த அஸ்தஃபிருக்க வ அதூபு இலைக்.

அல்லாஹ் நம் அனைவரின் வேண்டுதல்களை நிறைவேற்றித்தருவானாக ஆமீன்.

போலி என்கவுண்டர்கள் இளைஞர்கள் படுகொலை

என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்! தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!


காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.

ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.

போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர்.

அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.

இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.

இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.

அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.

1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.

1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.

2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.

3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.

5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.

6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.

7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.

8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.

9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.

இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.

டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.

போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.

16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.

போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது.

குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?)

அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.

மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.

காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.

இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.

கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில





1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,

2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும





3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும





4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும





4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும





5. பீகாரில் 14 முஸ்லிம்களும







5. டெல்லியில் 11 முஸ்லிம்களும





6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.

குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.

அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.

51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.

-அபூஸாலிஹ

சின்னத்திரையும் வண்ணத்திரையும்


இன்று உலகம் அறிவியலில் முன்னேறிவிட்டது. தொலைத் தொடர்பு சாதனங்களின் முன்னேற்றம், தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் இன்னும் அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதன உலகில் (Media Age)-ல் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எவ்வளவுதான் விஞ்ஞானம், தகவல் தொடர்புகள் முன்னேறினாலும் அதில் ஷைத்தானிய தாக்கமும், ஊடுறுவலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உதாரணத்திற்கு தகவல் தொழில் நுட்பத் துறையை எடுத்துக் கொண்டால், நாம் வீட்டிலிருந்தபடியே அமெரிக்காவில் வாழும் சகோதரருக்கு இறைமார்க்கத்தை எத்திவைக்கலாம் அதே போன்று முறையற்ற பெண்கள் தொடர்புக்கும் பயன்படுத்தலாம். இதனால்தான் சுருங்கிவிட்ட உலகத்தை விஞ்ஞானம் ஒரு கிராமம் (Global Village) ஆக மாற்றிவிட்டது.
ஒவ்வொரு விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திலும் எவ்வளவு நன்மை இருந்தாலும் அதைவிடத் தீமைகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்துதான் அது நன்மையானதா? அல்லது தீமையானதா? என அறிய முடிகிறது. இதில் மின்னணு ஊடகங்கள் (Electronic Media) என்று சொல்லப்படும். வானொலி (Radio), ஒலிப்பதிவு (Recording), திரைப்படம் (Film), தொலைக்காட்சி (Television), போன்றவை குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்மீகம் போன்ற நன்மைகளை இதன் மூலம் நாம் பெற முடியும். ஆனால் இந்த நன்மையான காரியங்களில் இத்துறை பயன்படுவதைவிட ஆபாசம், விரசம், கொலை, கொள்ளை போன்ற தீய செயல்களில்தான் இத்துறை முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக் காட்சிகளில் நாம் பெறும் நன்மையை விட தீமைகள்தான் ஏராளம். இதன் பாதிப்புக்கள் குக்கிராமம் முதல் முன்னேறிவிட்ட பெரு நகரங்கள் வரை வியாபித்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கட்டுரையின் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலைப்பு சிண்ணத்திரையும் வண்ணத்திரையும்.

பெண்கள் அதிகாலை எழுந்து சுப்ஹுத் தொழுது, வீடு சுத்தம் செய்து, பாத்திரங்கள் விளக்கி, சமையல் செய்து லுஹர் (தொழுகை) நேரம் வந்து விட்டது என்று தொழச் சென்ற காலம் கடந்து, ஏழு மணிக்கு எழுந்து அவசர அவசரமாய் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி "இன்றைக்கு கொஞ்சம் லேட் கடையில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கணவனை அனுப்பிவிட்டு அடுப்பில் சோற்றையும், குழம்பையும் ஏற்றி வைத்து விட்டு அப்பாடா! என்று தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து குக்கரின் ஒலி வரும் வரை சின்னத்திரையில் புதைந்து போகும் தாய்மார்களைப் பார்க்கிறோம். குழந்தைகளின் நிலைமையும் அதுதான்.

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் ஆன்மீகமும், நல்லொழுக்கங்களும் கற்பிக்கப்பட்டு பக்திமானாகத் திகழவேண்டியவர்கள் சின்னத் திரைத் தொடர்களில் சிக்கி சக்திமானாக உருமாறுகிறார்கள். கல்வி பயிலச் செல்லும் சிறார்கள் புத்தகப் பையிலும், நோட்டுகளின் அட்டைகளிலும் நடிகர், நடிகைகளின் கவர்ச்சி படங்களை காண முடிகிறது. சிறு குழந்தைகளுக்கு "ஸலாம்" கூறுதல் போன்ற நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டிய பெற்றோர்கள் கூட வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம்" குழந்தைகளிடம் ஏதாவது சினிமாப் பாடலை பாடச் சொல்லி வேடிக்கை பார்த்து மகிழும் அவநிலைக்கு காரணம் நிச்சயமாக டி.வி மற்றும் திரைப்படங்களின் தாக்கம்தான். அவர்கள் பார்க்கும் போலிக்காட்சிகளை அவர்களது நடைமுறையிலும் செயல்படுத்துவதை பார்க்கிறோம்.

இந்த கட்டத்தில் "குமுதம்" வாசகி விஜயலட்சுமி என்பவரின் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் கூறுகிறார், "சன் டி.வியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட "இந்திரா" என்ற தொடரில் வரும் ஒரு கொலைக் காட்சியை நாங்கள் குடும்பத்துடன் பார்த்தோம். அப்போது எனது 5 வயது மகளும், ஒன்றரை வயது மகனும் உடன் இருந்தனர். மறுநாள் காய்கறி நறுக்கும் சமையலறைக்கு நான் சென்ற போது எனது ஒன்றரை வயது மகன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஊ.. ஆ.. என்று டி.வியில் வந்ததைப் போன்று தன் அக்காவை மிரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். தொலைக்காட்சியின் விளைவு! கடவுளே!.." என்று தொலைக்காட்சியின் விபரீதத்தை வர்ணிக்கிறார்.

(நன்றி : குமுதம்)

இது படிப்பதற்கு சாதாரண செய்தியாக இருந்தாலும் எந்த அளவுக்கு இந்த தொலைக்காட்சித் தொடர்கள் பச்சிளங் குழந்தைகளின் நெஞ்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது ஓர் சாட்சி!

சமீப காலமாக சிறுவர்கள் ஓடிப்போகும் காட்சிகள் நடந்தேறுகின்றதே இதற்குக் காரணம் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் பாதிப்புகள். பள்ளியில் பயின்று கல்லூரி கடந்து மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக வேண்டிய பாலகர்கள் சினிமா மாயையில் சிக்கி நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி திக்கற்றவர்களாக திரியும் காட்சிகள் எதைக் காட்டுகிறது? இதிலிருந்து இந்த ஷைத்தானிய ஊடகங்கள் நம் குழந்தைகளை வழிகேட்டிற்கு அழைத்துச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

"தினமணி" நாளிதழின் வாசகர் கடிதம் ஒன்றினை இங்கு மேற்கோள் காட்டினால் பொருத்தமானதாக இருக்கும். "வளர் இளம் பருவத்திடம் ஓடிப்போகும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வண்ணத்திரைகளும் தான் காரணம். பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில்தான் இந்த ஓடிப்போகும் நிகழ்வு நடைபெறுகிறது. வறுமையும், பண்பாட்டுச் சீரழிவும் காணாமல் போனால்தான் இந்த சமுதாயத்தில் ஓடிப்போகும் கலாச்சாரம் இல்லாத நிலை உருவாகும்.

"சோம நடராசன் (கரூர்) " நன்றி : தினமணி (28-05-2004)

சினிமாவில் வருவதைப் போன்று உயர்மட்ட வாழ்க்கை வேண்டும் என்ற போலி ஆசையில் தனது வாழ்வையே சூனியமாகும் அவல நிலை உருவாகுவதற்கு சின்னத் திரைத் தொடர்களும், வெள்ளித்திரைகளும் அதிக அளவிற்கு காரணமாக இருக்கின்றன.

குழந்தைப் பருவம் பாழ்பட இந்த தொலைக்காட்சி தொடர்களின் வியாபகம் எந்த அளவிற்கு வேரூன்றியிருக்கிறது என்பதை இன்னும் விரிவாக நோக்க "ஒற்றுமை" இதழில் வெளிவந்த "தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் எதிர்கால சமுதாயம்" என்ற ஆய்வுக் கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் வீணடிக்கிறான். இப்படி அவன் பார்த்த தொலைக்காட்சியில் 20 இலட்சம் விளம்பரங்கள் வருகின்றன. இதனால்தான் தம் தேவைகளைவிட அதிகமாக பொருட்களை தாங்கள் வாங்குவதாக 82% அமெரிக்கர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் ஒரு குழந்தை தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன் பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களை குறித்துப் பேச 38.5 நிமிடங்கள் மட்டுமே ஒரு குழந்தை பயன்படுத்துகிறது. என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வயதுக் குழந்தை தொலைக்காட்சி முன் தினமும் 6 மணி நேரத்தைக் கழிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிக் கூடங்களில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் தொலைக்காட்சியைப் பார்க்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1023 மணி நேரங்கள். உயர்நிலைப பள்ளியை முடிக்கும் மாணவன் ஒருவன் 19,000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்த்த அனுபவம் உடையவனாய் அப்பருவத்தை அடைகிறான். இதனால்தான் நாம் தொலைக்காட்சியை நேரத்தை கொல்லும் இரத்தக் காட்டேறி என வர்ணிக்கிறோம்.

18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் இன்னும் 10,000 வன்முறைகளையும் ஒரு சராசரி குழந்தை பார்த்து விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வன்முறையை தொலைகக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சியை சிறுவர்கள் எவ்வித உணர்வும் இல்லாமல் பார்ப்பதில்லை என்றும் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்து கொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சி போதைப் பொருள்களை விட கொடூரமானது. அது மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ள வைத்து தனி மனிதரையும், நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. தொலைக்காட்சி வளர்ந்து வரும் தலைமுறையின் மனநிலை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவுகூட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட முடியவில்லை.

தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பதும் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பெரியவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளெல்லாம் சிறுவர்களுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சமூக துரோகிகளாகவும் தொலைக்காட்சி விளங்குகிறது. பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவுகள் கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். பெரியவர்களின் அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்படுவதினால் குழந்தைகள் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர்.

பசுமரத்து ஆணி போல தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக்க பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் இவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அபாயத்தை உணராமல் செயற்கைக் கோள் அலைவரிசைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி மனித வாழ்வின் நிலையை பெரும் அபாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. (நன்றி : ஒற்றுமை, ஜுன்-2001)

தொலைக்காட்சி வீட்டின் எஜமானாகி பலரின் வழிகாட்டியாகவும் மாறியுள்ளது. ஆக்கிரமிப்பால் சமூக ஒழுக்க மாண்புகள் உலகெங்கும் வெகுவாகச் சீரழிந்து வருகின்றது. முஸ்லிம்களைப் பொருத்தவரை இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு ஓழுக்கக் கேடகளிலும் மூழ்குவது இந்த கேடுகெட்ட தொலைக்காட்சி மூலமாகத்தான் நமது இளைஞர்களை சிந்தனை அடிமைத்துவத்திற்கும், ஒழுக்கச் சீரழிவிக்கும் அழைத்துச் செல்லும் இந்தத் தொலைக்காட்சி மற்றும் சினிமாக்களின் கோரப் பிடியிலிருந்து நாம் பாதுகாப்புப் பெற வேண்டும்.

இன்று சமுதாயம் எந்த அளவிற்குச் சீர் கேடுகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளது! நடிகர், நடிகைகள் அணிந்த உடைகளைப் போன்று உடுத்துவதிலும், அவர்களைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொள்வதிலும் இன்னும் Girl friend & Boy friend கலாச்சாரம், ராக்கிங், ஈவ்-டீசிங், டேட்டிங் (Dating) என்ற பெயரில் ஹோட்டல்களில் இளம் ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்ளுதல் போன்ற மானக்கேடான செயல்பாடுகளை மேற்கத்திய கலாச்சாரம் என்ற போர்வையில் நமது இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்பட்டு திணித்து சமூகச் சீர் கேடுகளுக்கு காரணமாக இருப்பது இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறை அல்லவா? கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் அரைகுறை ஆடைகள் அணிவதற்கு அடிகோலியவை இந்த சின்னத் திரையில் வரும் MTV – V Channel போன்ற மட்ட ரக சானல்கள் அல்லவா? மேற்கத்திய மட்டமான நாகரீகத்தை(?) கற்றுக் கொடுக்கும் இந்த கேடுகெட்ட ஊடகங்களினால் எத்தனையோ பள்ளி மாணவிகள் கருத்தரிப்புக்கும், கருக்கலைப்புக்கும் உள்ளாகின்றனறே!

டி.வி மற்றும் சினிமா போன்ற இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் சிக்கிச் சீர்கெட்டுக் கிடக்கும் இளைய சமுதாயத்தைப் பார்த்து அதே சினிமாத்துறையில் அங்கமாக வகிக்கும் வைரமுத்து என்ற கவிஞர் தன் உள்ளக் குமறலை பின்வருமாறு கூறுகிறார்.

"எங்கே போகின்றோம் என்று தெரியாமல் அலைகளின் முதுகுகளில் சவாரி செய்யும் நீர்க் குமிழிகளைப் போன்று நீயும் குறிக்கோளின்றி சென்று கொண்டிருக்கிறாயே!

உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம், முதுகுக்கு முன்னால் இருட்டு கண்பார்வை உனக்கு இருக்கின்றதா? இல்லையா? என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை!

ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் சாவி கொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்த தலைமுறை நகராத கூடமாய் நசிந்து போகும்.

இளைஞனே! உன்னைப் பற்றி எனக்கு வரும் தகவல்கள் என் குதூகூலத்தையே குழிதோண்டிப் புதைக்கின்றன! எங்கே போகின்றோம் இளைஞர்களே?

ஒரு கல்லூரி விடுதிக்கு விலைமாதர் வருவதாக என் செவிக்கு எட்டுகிறது! பாவிகளே! இது கல்விச் சாலையா? அல்லது கலவிச் சாலையா?

வேறொரு விடுதியில் ஒரு மாணவியின் கைப் பையில் போதை மாத்திரையும், கருத்தடை மாத்திரையும் சம விகிதத்தில் சாட்சிகள் எட்டுகின்றன!

அடிப் பாவிப் பெண்னே! நீ மனத்தை நிரப்ப வந்தாயா? அல்லது மடியை நிரப்ப வந்தாயா?

- இந்த இளைய தலைமுறை தடுமாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு?

- இவர்கள் இப்படி கனாக் காரர்களாய் அலைவதற்கு யார் காரணம்?

- இவர்களுக்கு இந்த ஆடை கட்டாத ஆசைகளை ஆட்டிவிட்டது எது?

- வாழ்க்கையின் யதார்த்தம் பார்த்து அஞ்சும் மனோபாவம் எப்படி வந்தது?

- இவர்கள் இப்படி உள்ளீடற்றவர்களாய் உருமாற்றியது எது?

(நன்றி : "வைரமுத்து"வின் சிற்பியே உன்னைச் செதுக்குகின்றேன்)

இப்படி கவிஞன் பல கேள்விகளை எழுப்புகின்றான். அத்தனை கேள்விக்கும் ஏகோபித்த பதில் சின்னத்திரையும், சினிமாத் திரையும்தான். ஃபேஷன் என்ற பெயரில் கவர்ச்சி ஆடைகள், இரட்டை அர்த்தமுள்ள விரசல் நடை பாடல்கள் கூடவே செவியை பதம் பார்க்கும் இசை இன்னும் குடும்பத்துடன் பார்க்க முடியாத விரசக் காட்சிகள் என்று அத்தனை சீர்கேடுகளையும் ஒருங்கே பெற்ற ஷைத்தானிய ஊடகம்தான் இந்த சினிமாவும், தொலைக்காட்சியும்.

இதனால்தான் சினிமாவின் கோரப்பிடியை சுவாசித்த ஆஸ்கார் விருது பெற்ற நடிகன் ஆண்டெனி குயின் (Antony Queen) "சினிமா என்பது வன்முறையின் ஆடுகளம் (Cinema is the area of the vulgarity)" என்று கூறினான். இன்னும் நடிப்பைப் பற்றியும் தான் நடித்து வந்த சினிமாத் துறையைப் பற்றியும் மனம் வருந்தி சினிமாவினால் என் வாழ்நாட்கள் நஷ்டமடைந்துவிட்டன, என்று கூறி சினிமாத் துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டான்.

மேலும் இந்தச் சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வரும் இசை மனிதனை செவிடனாக்கி மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இஸ்லாம் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உமையா கோத்திரமே! இசையை அஞ்சிக் கொள்ளுங்கள். அது வெட்கத்தை அழித்து உடல் உணர்வை தூண்டுகின்றது. மனிதாப மானத்தை மாய்த்துவிடுகின்றது. மதுவைப் போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண்களை அதில் அறவே பங்கேற்கச் செய்யாதீர்கள்.

(அறிவிப்பாளர் : யஸீது பின் வலீது(ரலி), ஆதாரம் : பைஹகீ)

நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறியிருக்க, பொழுது போகவில்லை என்று சினிமாப் பாடல்களையும் இசையையும் நேசித்து காதுகளில் "வாக்மேன்" பொருத்தி உல்லாசத்தில் உலாவரும் முஸ்லிம் சகோதர, சகோதரிகளை என்ன செய்வது?

தொழுகைக்கு அழைத்தால் "நேரமில்லை" என்று கூறும் நம் சகோதரர்கள் சினிமாவும், டி.வியும் பார்ப்பதற்கு தன்னையே அறியாமல் நேரம் ஒதுக்கிக் கொள்வதைப் பார்க்கின்றோம்.

மொத்தத்தில் இந்த சினிமா, தொலைக்காட்சி மீடியாக்களினால் மனிதன் பெரு நஷ்டத்திற்கு ஆளாகின்றான். மானக்கேடான காரியங்கள் செய்யவும் முனைகின்றான





















அல்லாஹ் தன் திருமறையில்...

நிச்சயமாக, அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவமான காரியங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றை விட்டும் உங்களை விலக்குகின்றான். நீங்கள் நினைவுகூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கின்றான். (16:90)

எனவே அல்லாஹ் மானக்கேடான காரியத்தை விலக்குகின்றான். இந்த மானக்கேடான அத்தனை ஒழுக்கக் கேடுகளையும் பொதிந்து தரக்கூடிய இந்த தரங்கெட்ட மீடியாக்கள் இவ்வுலக வாழ்க்கையை அலங்கரித்துக் காட்டுகின்றன. இன்பத்தை ஊட்டுவது போன்ற போலியை ஏற்படுத்துகின்றன. மறுமையை மறுக்கச் செய்கின்றன.

வல்லோன் வான்மறையில் "நிச்சயமாக செவிப்புலனும், பார்வையும், இதயமும் அவற்றின் செயல்கள் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும்"

எனவே பொழுது போகவில்லை என்று போலியான இந்த தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் நேரத்தை வீணடிப்போரை அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கை செய்கின்றான். மறுமையில் அவர்கள் கண்களையும், செவிகளையும், இதயத்தையும் இறைவன் விசாரிப்பான். இந்த உலகத்தின் மயக்கும் இன்பத்திற்கு நாம் பலியாகிவிடக்கூடாது. மறுமைதான் நிலையானது, என்று உணாந்து போலியான இன்பம் தரக்கூடிய தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறையை உடனே புறக்கணித்து நிரந்தர இன்பத்தை நோக்கி நம் கால்கள் நடைபோடட்டும். மறுமையில் நரக நெருப்பை விட்டு நம்மை வல்ல இறைவன் பாதுகாக்கட்டும். ஆமீன்.

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்!

இஸ்லாத்திற்கு எதிராக பனிப்போர் நடந்துக்கொண்டிருக்கிறது. மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிராக நடத்தும் எழுத்து மற்றும் கருத்துப்போரை பார்க்கும்போது அந்த பனிப்போர் உச்சத்தை அடைந்துவிட்டதோ என்று எண்ண தோன்றுகி


அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். அதைப்போல நாலொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிருப்பதால் தொலைகாட்சி கேட்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் விழ வைத்திருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் அல்லாதவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நமக்கு பல சான்றுகள் தருகின்றன.

ராவுத்தர்கள் எடுக்கும் படத்தில்கூட முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். அதே போல முஸ்லிம் அல்லாதவர்கள் நடத்தும் இணையதளத்தில் ஒரு முஸ்லிம் இந்துமதத்தைப் பற்றி எழுதினால் வரவேற்கிறார்கள், பதிவு செய்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப்பற்றி எந்த செய்தியும் பதிவு செய்வதில்லை. (அப்படியே பதிவு செய்தாலும் அது தர்கா புராணமாகத்தான் இருக்கும்).

காந்தியை கொன்ற கோட்சே 'அவர்' என்று மரியாதையாகவும் சந்தேக கேஸில் மாட்டிக்கொண்ட முஸ்லிம்களை 'அவன்' என்று மரியாதை குறைவாகவும் செய்திகள் வெளியிடுவை பார்க்கலாம்.

இதற்கு தூபம் போடத்தான் அன்றே, பாட நூல்களில் மொகலாயர்களின் படையெடுப்பு, ஆரியர்களின் வருகை என்று ஆக்கிவிட்டார்கள் போலும்.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற மீடியா, இன்னொரு பக்கம் தீவிர வாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று செய்திப்பத்திரிக்கைகளை புரட்டினால் பி.ஜே.பி அல்லது ஆர்.எஸ்.எஸ் செய்திதான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குக்கிராமத்தில் இவர்களின் கூட்டம் நடந்தால் கூட அது வெளிச்சப் படுத்தப்படுகிறது.

அவர்களுக்கு முஸ்லிம்களை தன் வலையினுள் கொண்டுவருவது மிகச்சுலபம். ஆட்டோ ஓட்டுகிறாயா? வா! எங்களின் ஆட்டோ சங்கத்தில் இணைந்துக்கொள். கார் ஓட்டுகிறாயா? வா எங்கள் கார் சங்கத்தில் இணைந்துக்கொள். எங்கள் தலைவர் பி.ஜே.பி என பேத்தலாம். எங்கள் தலைவரின் தலைவர் ஆர்.எஸ்.எஸ். -ல் அங்கம் வகிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு உதவும் நல்மனம் கொண்டவர். அவரின் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கலாம். அவர் முஸ்லிம்களுக்கு எதிரி அல்ல என்று முஸ்லிம்களை மூலைச்சலவை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வகுப்பு சண்டைகள் நடந்த இடத்தின் வரலாற்றைப் புரட்டி பார்ப்போமேயானால் ஒன்றை மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.

இவர்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர்தானே, நண்பரின் சகோதரி தானே, குழுந்தைதானே என்றெல்லாம் எந்த எண்ணமும் வருவதில்லை. முஸ்லிம் என்றால் பரவாயில்லை கற்பழிக்கலாம், கொல்லலாம், கண்டந்துண்டுகளாக வெட்டலாம், உயிருடன் எரிக்கலாம் என்றுதான் இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள், இல்லையில்லை புரிய வைக்கப்பட்டிருக்கிறார்கள். குஜராத்தின் சம்பவம்தான் இதற்கு வெட்ட வெளிச்சம். குஜராத் மோடியின் மனிதப் படுகொலைக்காக குரல் கொடுத்த கவிஞர்களின் சில வரிகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான்:

முன்பு இந்துத்துவா என்றால





பாரதப் பண்பாட





இப்போத





கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த





சிசுக் கருவ





எடுத்துத் தீயில் வீசுதல













கவிஞர் இன்குலாப





எரியும் கொழுந்துகளில





ஆண்கள





பெண்கள





வகிர்ந்த வயிற்றிலிருந்த





குருதி சொட்டும





கொப்புள் கொடியோட





கண் விழிக்கா





கருவறைச் சிசுக்கள













கவிஞர் பொன்னீலன





குறிகளுடனும் குண்டாந





தடிகளுடனும





வாள்களுடனும்,

சூலாயுதங்களுடனும





மறுபடியும





குகை விட்டுக் கிளம்பின - அந்தக





கற்கால மிருகங்கள





....

நிறைச் சூலி வயிறுகீற





கண் திறவா பசும் குருத்த





கோரைப் பற்கள் துருத்தும





கடைவாயில் சிவப்பொழு





கிழித்துக் கிழித்த





விழுங்கி ஆனந்தித்தன.

கவிஞர் சுகுணா திவாகர





சுன்னத் குறியினரை தேடியலையும





வாளின் பசி முன





கையறு நிலையன்றி யாதுமில்ல





மறைப்பதற்கோ, காட்டிக்கொடுப்பதற்கே





வென்றாயின அடையாளங்கள

இப்படிப்பட்டவர்களிடம் கட்டைப் பஞ்சாயத்து நீதிக்கென கதவைத் தட்டுகிறார்கள். வாடகை வீட்டை காலி செய்யனுமா? வா நம் அண்ணனிடம் போகலாம் என்று முஸ்லிம்களை அழித்தொழிப்பவர்களிடமே தஞ்சம் போகிறார்கள். வரப்பு யாருக்குச் சொந்தம் என்ற சண்டை வக்கீலிடம் போனால் வயல் வக்கீலுக்கு சொந்தமாகிவிட்டது என்பார்கள். அதுபோலத்தான். அண்ணன் தம்பி பிரச்சினைக்கு தாதாக்களிடம் கட்டைப்பஞ்சாயத்துக்கு போக, சொத்து அண்ணனுக்கும் அல்ல தம்பிக்கும் அல்ல அவர்களுக்கு ஆகிவிடுகிறது. குரங்கு அப்பத்தை பங்கு போட்ட கதைதான்.

சரி இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் எப்பொழுது சமூகத்திற்கு சுட்டிக்காட்ட போகிறீர்கள்?. இத்தகைய அநியாயங்களை தோலுரித்துக் காட்டுவது நம் அனைவரின் பணியல்லவா?

எழுதப்பழகுங்கள்! உங்களுக்கென்று பல மக்கள் மன்றங்கள், விவாத அரங்குகள், வலைப்பூக்கள் இணையத்தில் இருக்கின்றது.

படியுங்கள், கண்ணியமாக கருத்துச் சொல்ல பழகுங்கள் பல இணையதளங்கள் இருக்கின்றது. உங்கள் எழுத்தினால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன்கிடைக்குமா என்று பார்த்து எழுதுங்கள் (புகழுக்காக அல்ல.

அதிகமாக எழுதுபவர்களை, அவர்களுக்கு ஃப்ரீ நேரம் இருக்கிறது என்று விமர்ச்சிக்கிறார்கள். அதிகமான எழுத்தாளர்கள் அவர்களின் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, நண்பர்களிடம் பிரச்சினைகளை பகிர்வதை விட்டுவிட்டு, மனைவி குழந்தைகளிடம சந்தோசமாக பேசிமகிழும் நேரத்தை குறைத்துக்கொண்டு, வெளியில் ஜாலியாக போய் சுற்றுவதை நிறுத்திக் கொண்டு எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை.

தயக்கம் ஏன் தோழர்களே! எழுதப் பழகுங்கள்! புதிய சரித்திரம் படைத்திடுங்கள்!

நன்றி:

இஸ்லாமிய போர்கள்

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்! அவனே தனது திருத்தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான், அகிலங்களிலுள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் அதனை மேலோங்கச் செய்தான், அல்லாஹ்வின் அன்பும் அருளும் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றிய உத்தம நபித் தோழர்கள் மற்றும் அவர்களை அழகிய முறையில் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக. அல்லாஹ் தஆலா கூறுகின்றான், இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (22:78) அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபச்சாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். (25:68) நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழுது கொண்டிருந்தபோது அவர்களை எதிரிகள் கடுமையாகத் தாக்கினார்கள், பார்த்துக் கொண்டு வந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் கேட்டார்கள், எனது இறைவன் அல்லாஹ் என்று கூறியதற்காகவா இந்த மனிதரைக் கொலை செய்ய முற்படுகின்றீர்கள்? அன்றைய மக்காவின் நிலை இது. இஸ்லாம் என்ற உன்னதக் கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். தங்கள் வீடுகளை விட்டும் நியாயமின்றி துரத்தப்பட்டனர். இது நமது முன்னோர்களாகிய ஆரம்ப கால முஸ்லிம்களின் வரலாறு. இறுதியில் வேறு வழியின்றி நாடு துறந்தனர். மதீனாவில் அவர்களது வளர்ச்சியையைத் தடுக்க எதிரிகள் திட்டம் தீட்டினர். அவர்களை அங்கும் வாழ அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்தனர். இனியும் எதிர்த்துப் போராடாமல் இருப்பது தற்கொலைக்குச் சமமானதாகும். தங்களது மார்க்கத்தை நிலை நிறுத்த, அவர்களது வாழ்வுரிமைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க யுத்தம் செய்ய அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கினான். போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை) (22:39,40) யார் யுத்தம் செய்ய வேண்டும்? அக்கிரமத்தை தடுத்து நிறுத்த எடுத்த எடுப்பிலேயே யுத்தத்தில் ஈடுபட நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்படவில்லை. மதீனாவில் அவர்களது தலைமையில் இஸ்லாமிய அரசு ஏற்பட்டபோது அந்த அரசுக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் எதிரிகளின் செயல்பாடுகள் அமைந்தபோது அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. மக்காவில் முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை சந்தித்த போதும் பொறுமையை மேற்கொள்ளச் சொன்னார்கள். அன்று ஒரு யுத்தத்திற்கான சூழ்நிலை உருவாகியிருக்கவில்லை. தார்மீக அடிப்படையில் யுத்தம் செய்ய சரியான வழிகாட்டுதல்களுடன் கூடிய ஒரு தலைமை அவசியம் ஆகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வரம்பு மீறினால்? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கக் கூடிய விஷயத்தைக் கண்டால் பொறுமையுடன் இருங்கள், எவரேனும் ஒரு சாண் அளவேனும் ஆட்சியாளனுக்கு மாறு செய்வாராயின் அவர் அஞ்ஞான காலத்து மரணத்தையே தழுவ நேரிடும். (புகாரி) பிற்காலத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தவறான போக்கைக் கையாண்டாலும் அவர்களுக் கெதிராக கலகத்தில் ஈடுபடுதல் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அவரவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டால் ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து அக்கிரமமும் அநீதியுமே மிஞ்சி நிற்கும். இதனாலேயே இஸ்லாம் இது விஷயத்தில் சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. திருக்குர்ஆனும் நபி வழியும் நமக்கு வழிகாட்டுவது, அநியாயமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்படாதவரை, மதச் சுதந்திரம் பறிக்கப்படாதவரை யுத்தம் செய்யக்கூடாது. மேற்கண்ட கொடுமைகளை ஓர் அரசு செய்யாத வரை அரசாங்கத்தை எதிர்த்து கலகம் செய்யும் வகையில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் உரிமை கிடையாது. யுத்தத்தின் ஒழுங்கு முறைகள் தற்காப்புக்காகவும் சத்தியத்தின் மீது நிலை கொள்வதற்காகவும் நடைபெற்ற இஸ்லாமிய யுத்தங்கள் முற்றிலும் நீதியும் நேர்மை மிக்கதாகவும் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் நேரில் கலந்து கொண்ட யுத்தங்கள் அவர்கள் படைகளை நியமித்து யுத்தங்கள் ஆக அனைத்துமே குழப்பத்தைத் தடுத்து நிறுத்தி அமைதியை நிலை நாட்டும் நோக்குடன் அமைந்திருந்தது. அக்கிரமக்காரர்கள் மூட்டிய நெருப்பை அணைக்கவும் பலதெய்வக் கொள்கைக்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் எதிரிகளின் முனைகளை மழுங்கச் செய்யவும் அவ்வாறே அவர்களை சமாதானத்தின் பால் வழி நடத்தவும் அதன் மூலம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை எளிதாக நடத்திச் செல்லவும். வஞ்சனைகளும் சதித்திட்டங்களும் மனதில் சுமந்து கொண்டிருந்த நயவஞ்சகர்களை இஸ்லாமிய அமைப்பிலிருந்து பிரித்துக்காட்டவும் யுத்தங்களால் சாத்தியமானது. அறியாமைக்கால யுத்த முறைகளையும், யுத்த நோக்கங்களையும் போராட்ட வழிமுறைகளையும் இஸ்லாம் அடியோடு மாற்றியது. கொள்ளை, வழிப்பறி, கொலை, அக்கிரமம், வக்கிரம் தீர்த்தல், பலகீனனை அடக்கி நிறுத்தல், பெண்களை மானபங்கப் படுத்துதல், விவசாயங்களுக்கு நாசம் விளைவித்தல், பூமியில் கலகம் விளைவித்தல் போன்றவையே அஞ்ஞான காலத்து யுத்த முறைகளாகும். இன்று உலகில் அராஜகத்துவத்தை விளைவிக்கும் நாடுகளின் யுத்த முறையும் இதுவே. இஸ்லாம் இவற்றுக்கெல்லாம் மாறாக உன்னதமும் நேர்மையும் வாய்ந்த இலட்சியங்களை முன்னிறுத்தி மட்டுமே யுத்தங்களை நடத்தியது. அடக்குமுறையிலிருந்தும், அட்டூழியத்திலிருந்தும், பரஸ்பர விரோதத்திலிருந்தும் மனிதனை ஈடேற்றவும் அமைதியை நிலை நாட்டவுமே யுத்தங்கள் நடைபெற்றன. யுத்தம் நடத்துவது இஸ்லாத்தின் நோக்கமல்ல. மாறாக நீதியை நிலை நாட்ட யுத்தங்கள் அவசியமாயின. பலமானவன் பலகீனமானவன் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதிலிருந்து மாறி நீதி மற்றும் தர்மத்தின் அடிப்படையில் யுத்தங்கள் நடை பெற்றன. வஞ்சனைக்கும் சதிக்கும் அடக்குமுறைக்கும் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் ஆளாகி துன்புறும் சமூகத்தைக் காத்து அமைதியான சூழலில் வழிநடத்தவுமே அவை அவசியமாயின. முஸ்லிம் படைகளுக்கு மிகவும் கட்டுக்கோப்பான ஒழுங்கு முறைகளை நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஒரு பொழுதேனும் அந்த ஒழுங்கு முறைகளில் சிறிதளவேனும் மாறுதல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொரு படைகளிலும் படைத் தளபதிக்கு மிகவும் கண்டிப்பான ஒழுங்கு முறைகளை வகுத்தார்கள், அவை பல ஹதீஸ்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்கள் ஒரு படைத்தளபதியை நியமித்து விட்டு அவரிடம் முதலில் உபதேசிப்பது அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இறையச்சத்தை மேற்கொண்டு களமிறங்கும் ஒருவரால் எவ்வாறு அநீதியைக் கையாள முடியும்? வரம்பு மீறி அப்பாவிகளைக் கொலை செய்ய முடியும்? மேலும் புனித மஸ்ஜிதை (கஃபத்துல்லாஹ்வை) விட்டும் உங்களைத் தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள வெறுப்பானது, நீங்கள் வரம்பு மீறுமாறு உங்களைத் தூண்டி விட வேண்டாம். (5:2) முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். கஃபதுல்லாஹ்-வை விட்டும் தடுத்தவர்களிடம் கூட வெறுப்புக் காட்டக்கூடாது என்னும் உன்னதமான இஸ்லாமிய ஒழுங்கு முறைக்கு முன்னர் அப்பாவிகள் நியாயமின்றி கொலை செய்ப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? மேலும் படைத்தளபதிகளுக்கு நபி (ஸல்) அவர்களின் உபதேசங்கள், நிராகரிப்பாளர்களை எதிர்த்து அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள், அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். வரம்பு மீறதாதீர்கள், வஞ்சனை செய்யாதீர்கள், (பிணத்தின்) உறுப்புகளை சேதப்படுத்தாதீர்கள், பெண்களையும் குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். மேலும் கொள்ளை நடத்தாதீர்கள், கொள்ளையடித்த பொருள் செத்த பிணத்திற்குச் சமமானதாகும். விளைச்சல்களை நாசமாக்காதீர்கள், நிர்பந்த சூழ்நிலையிலன்றி மரங்களை முறிக்காதீர்கள். தூதுவர்களைக் கொலை செய்யக் கூடாது, இரவில் தாக்குதல் நடத்தக் கூடாது. ஓரிடத்தில் இரவில் சென்றடைந்தால் தாக்குதல் நடத்த நபி (ஸல்) அவர்கள் விடியும் வரை காத்திருக்கக் கூடியவர்களாக இருந்தனர். மக்கா வெற்றிக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், காயப்பட்டவனைத் தாக்காதீர்கள், புறமுதுகிட்டு ஓடுபவனைப் பின் தொடராதீர்கள், சிறை பிடிக்கப்பட்டவனைக் கொலை செய்யாதீர்கள். முஸ்லிமல்லாதோரிடம் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (60:8) முஸ்லிம்களோடு பகிரங்கமாக யுத்தம் செய்யாத முஸ்லிமல்லாத சகோதரர்களிடம் நீதியுடன் நடக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்லாம் மனிதர்கள் அனைவரின் மார்க்கமாகும். அதனை எடுத்துச் சொல்வது அதனை ஏற்றுக் கொண்டவர்கள் மீது கடமையாகும். அதனை ஏற்றுக் கொள்ளுமாறு யாரையும் நிர்பந்திப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. மன ரீதியான மாற்றத்தையே இஸ்லாம் கொள்கையாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்தின் மீது பகிரங்கமாக யுத்தம் தொடுத்தவர்கள் கூட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அபயம் தேடி வந்தால் அபயமளிக்கவும் அவர்கள் சத்தியத்தை செவியேற்றார்களா என்பதை உறுதிப்படுத்த இஸ்லாம் முக்கியத்துவம் அளிக்கின்றது. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள். (9:6) இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதோரின் உரிமைகள். இஸ்லாமிய நாட்டில் வசிக்கும் முஸ்லிமல்லாதோர் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உடன்படிக்கை மேற் கொண்டவர்கள். நியாயமின்றி அவர்கள் மீது அக்கிரமம் செய்வது பாவமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! ஒப்பந்தத்தில் ஏற்பட்டிருக்கும் முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது யாரேனும் அடக்கு முறையைக் கையாளவோ, அவர்கள் மீது சக்திக்கு அதிகமாக வரியை விதிக்கவோ, அவர்களிடம் கடுமையாக நடக்கவோ அவர்களுடைய உரிமையில் குறைவைக்கவோ செய்தால் அவருக்கு எதிராக நான் மறுமையில் (அல்லாஹ்விடத்தில்) புகார் எழுப்புவேன் (அபூ தாவூது) ஒப்பந்த்ததிற்குள்ளான (முஸ்லிமல்லாத)வரை எவரேனும் கொலை செய்தால் அவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது. அதன் நறுமணமோ நாற்பது ஆண்டுகள் தூரத்திற்கு கடந்து செல்வதாகும்! (புகாரி) அல்லாஹ்வே மிக அறிந்தவன். தொகுப்பு: தேங்கை முனீப், பஹ்ரைன்

மேற்குலகுதான் முன்னோடியா?

(சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை)



'எவர் ஒரு கூட்டத்தாரைப் போன்று ஒப்பாகிறாரோ அவர் அந்த கூட்டத்தினரையே சாருவார்' – நபிமொழி


மேற்குலகம், மேற்குலகம், மேற்குலகம் எங்கு பார்த்தாலும் மேற்குலகிற்கு பொன்னாடைப் போர்த்தும் காலமாக இன்றைய 21ஆம் நூற்றாண்டு மேற்குலகெனும் வான் கோலத்தில் மோகங்கொண்டு மிதந்து செல்கிறது. உண்மையாதெனில் இன்றைய சரித்திரத்திற்கு தரித்திரம் பிடித்துவிட்டது. அதனால்தான் மேற்குலகெனும் சிறைக்குள் சிக்கி சின்னாபின்னப் படுத்தப்பட்டு சித்தரிக்கப்படுகிறது. அப்படி அது எதற்கு போற்றப்படுகிறது என்றால் பண்பாட்டு செழிப்பு, கலை அனுபவம், விஞ்ஞானம், கலாச்சாரம், நாகரிகம், பொருளாதாரம் இவற்றின் முன்னேற்றம் அந்நாடுகளின் அடிமையாம். அதனால்தான் பொன் கம்பங்களில் மேற்குலம் வெற்றிக் கொடியாய் கட்டி பறக்க விடப்பட்டுள்ளது.


இன்று உலக டயரிகளில் ஆயிரம் பக்கம் கடந்து சென்றாலும் மேற்குலகின் புகழாரம் இல்லாமலில்லை உலக வானொலியில் எல்லா அலைவரிசைகளிலும் மேற்குலகின் புரட்சிகரமான வித்தைகள் ஜனரஞ்சகப் படுத்தப்படுகின்றன. தொலைகாட்சியா? கணினியா? அவற்றிலும் தம் கை வண்ணம் காட்டாமலில்லை. அந்தளவு மேற்குலகின் மோகன வித்தைகள், விளையாட்டுகள் மக்களை வியக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. எல்லோரும் மேற்குலகை கட்டாயத் திருமணம் செய்துள்ளார்கள், அதனால்தான் இத்தனை மதிப்பு.

ஆனால், இவற்றையெல்லாம் மீறி இவற்றிற்கும் மேலாக "இஸ்லாம்" சிறந்த முன்மாதிரியை, சிறந்த முன்னோடிகளை நமக்களித்துள்ளது. அது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாகவும், தன்னிகரில்லா தன்மை கொண்டு விளங்கும் அல்-குர்ஆன் மூலமாகவும் என்றால் மிகையல்ல. ஊசி முனைக் காது வழியே ஒரு யானை நுழைய முடியுமா? அப்படி ஓர் அதிசயம் எப்படி நிகழும்! அப்படித்தான் அல்-குர்ஆன் என்ற இறைவேதம் மோசடி செய்யும் மேற்குலகிற்கு ஒரு முன்னோடியாக உள்ளது.

இதைவிடுத்து எதற்கெடுத்தாலும் மேற்கத்தியர்கள் இப்படி செய்கிறார்கள், அப்படி செய்கிறார்கள், இன்று இது தான் நாகரிகம் (Fashion) என்று சொல்லும் சில மேற்குல பித்து பிடித்தவர்கள் இன்றளவும் இல்லாமலில்லை. இருப்பினும் இஸ்லாம் நல்ல முன்னோடிகளை என்றோ விதைத்துவிட்டது. அது இன்று மரமாகி, வேர் விட்டு, கிளைவிட்டு, விருட்சமாகி எல்லாத் திக்கு திசைகளிலும் பரவிவிட்டது. மேற்குலகின் பொருளாதாரமானாலும் நாகரிகமானாலும், பண்பாடானாலும் எல்லாமே வெறும் வெங்காயம் மாதிரிதான். அப்படியிருக்க எப்படி இஸ்லாத்தின் முன்மாதிரிகளை ஏற்று நடக்க, எதிர்க்க முற்படுகின்றனர் என்பதுதான் புரியாத புதிர்.

மேற்குலக நாகரிகம் என்று அவர்களின் நடை, உடை, பாவனைகளை பின்பற்றுகின்றனர் மெல்லிய ஆடைகள், நிர்வாண உடைகள், தம் அமைப்பு தெரியும் அளவிற்கு இறுகிய ஆடைகள் இவை தாம் இவர்கள் கூறும் நாகரிகம். ஆனால் இஸ்லாம் அழகாக, தெளிவாக ஆடை அணிவதின் நோக்கம், அதன் பிரயோசனம் போன்றவற்றை சொல்லித்தந்து இருக்கிறது, நம்மிடமே முன்னோடி இருக்கையில் மேற்குலகில் போய் தேட அவசியமே இல்லை. "இக்கரை மாட்டுக்கு அக்கரைதான் பச்சையாம்". வெட்கம், நாணம், ஒழுக்கம் மற்றும் உடலைப் பேணல் போன்ற தேவைகளை நிறைவேற்றவும் நாகரிகத்தையும், அழகையும் கொடுக்கத்தான் இந்த ஆடை என இஸ்லாம் ஆடையின் யதார்த்த நிலையை எமக்கு விளக்கி முன்னோடியாய் அளித்துள்ளது.

'ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக' (அல்-குர்ஆன் 7: 26)

தக்வா எனும் ஆடையே மிக சிறந்த ஆடை என குர்ஆன் கூறுகிறது, ஆனால் மேற்குலகை முன்னோடியாக் கொண்டால், தக்வா என்ற இறையச்சம் கடுகளவேனும் நம்மை நெருங்காது என்பதில் ஐயமில்லை, மற்றும் பெண்கள் ஆண்களைப் போன்றும் அதற்கு மாறாகவும் அணிவது தான் நாகரிகம் என்கிறார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள், பெண்களைப் போல் ஆடை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போல் ஆடை அணியும் பெண்களையும் இறைவன் சபிக்கின்றான் எனக் கூறினார்கள் (புகாரி)

இன்னும் எம்மவர்கள் மேற்குலகின் அலங்கார முறைகளை முன்னோடியாக எடுத்துள்ளனர். அதாவது உதட்டுக்குச் சாயம், முகத்திற்கு பவுடர், நகத்திற்கு பாலிஷ், இதுதான் மேற்குலகு கூறும் அலங்காரமும், சுகாதாரமும். இவற்றிற்கு பெயரா சுத்தம்? இல்லவே இல்லை. இஸ்லாம் அழகான முறையில் ஒழு, குளிப்பு போன்றவற்றின் மூலமாக எமக்கு கற்றுத்தருகின்றது.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், மக்களே கண்ணுக்கு (அஞ்சனம்) சுர்மா இட்டுக் கொள்ளுங்கள், ஏனெனில் அது கண்களை தூய்மையாக வைக்கிறது இன்னும் இமை முடிகளை வளர்க்கிறது. இதுதான் இஸ்லாம் கூறும் சுத்தம் மற்றும் சுகாதாரம்.

நிச்சயமாக அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் (தடுத்துள்ளான்) (குர்ஆன் 2: 275)

பொருளாதாரத் துறையின் வளர்ச்சிக்கு காரணம் வட்டி, இலஞ்சம் இவைகள்தான் என்று அவற்றிற்கு மதிப்பளித்து மேற்குலகுத்தார் தம் பொருளாதாரத்தை வளப்படுத்துகிறார்கள். இதை எம்மவர்கள் முன்னோடியாக ஏற்றதினால்தான் இன்னும் வாழ்வில் பின்னோடியாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். பொருளாதாரத்தின் வளர்ச்சி வட்டியில் இல்லையென இஸ்லாம் என்றோ முத்திரைக் குத்தி விட்டது. மாறாக ஜக்காத் எனும் தான-தர்மங்களையும், சிறந்த வியாபார முறைகளான பங்கீட்டு வியாபாரம், கூட்டு வியாபாரம் போன்றவற்றைக் கற்றுத் தந்து முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறான இந்த முறையினால் ஒரு நாடே வளர்ச்சியடைகிறது. ஆனால் மேற்குலகின் வட்டி முறையினால் ஒரு நாடே வறுமையடைகிறது.

அதே போன்றுதான் விஞ்ஞான மோகம். இவர்களை அளப்பறிய விசித்திரங்களை ஆற்ற வைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய விசித்திரங்களை வானிலும், மண்ணிலும் நிகழ்த்தி வருகிறது, நீரிலும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மத்தியத்தரைக் கடல் பகுதியில் 'கப்தான் ளாக் குஸ்ஸோ' என்ற ஆழ்கடல் ஆய்வாளர் ஆய்வுக்கு சென்றபோது, அவரின் முகமூடி சற்று விலகி கடல்நீர் வாய்க்குள் புக அது, உப்பு கரிக்காது மதுரமாய் இருக்கவே வியப்போடு கரை சேர்ந்தார். பின் அது பற்றி தகவல் தெரிய முற்பட்டார் டாக்டர் மாரிஸ் புகைல் என்ற மருத்துவ ஆய்வாளரிடம் சென்று கேட்டபோது உங்களுக்கு இப்போது தானே தெரியும் ஆனால் அல்-குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே இது பற்றி தெளிவு படுத்தியுள்ளது என்று கூறி பின்வருகின்ற வசனங்கள் மூலம் விளக்கினார்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான். ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (அல்-குல்ஆன் 25: 53)

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. (அல்-குல்ஆன் 35: 12)

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. (குல்ஆன் 55: 19)

தன் புலனுக்கு புலப்படுவதையும் தெளிவாக தெரிவதைத்தான் விந்தையாய் அவர்களின் அறிவுக்கு சான்றாய் காட்டுகின்றனர். ஆனால் மண்ணிலும், விண்ணிலும் ஏராளமான அற்புதங்கள் அவர்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை. மேற்குலகத்தார் குர்ஆன் தான் முன்னோடி என்பதை விளங்கி அதை வெளிப்படுத்த மறுக்கின்றனர். அப்படியானால் நாம் ஏன் மேற்குலகை முன்னோடியாக எடுக்க வேண்டும்? இவர்களின் கண்கட்டி வித்தையை கண்டு எத்தனையோ பேர் தம் கண்களையே தொலைத்து விட்டு வழி தெரியாமல் திண்டாடுகிறார்கள். இதுதான் மேற்குலகு முன்னோடி என்று நம்பியவர்களுக்கு கூலியாக கிடைத்தவை.


இவ்வாறே மேற்குலக பண்பாடுதான் எம் முன்னோடி என்று பறைசாட்டும் கூட்டமும் இல்லாமல் இல்லை. இவர்கள் இன்னும் விளங்கவில்லை. இன்னும் சில பெற்றோர் அதனடிப்படையில் தம் பிள்ளைகளை வளர்க்க முற்பட்டுள்ளனர். மேற்குலகங்களில் 18 வயதிற்குப் பின் பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஒரு மனிதன் தன்னை ஒரு பூரணமான ஒழுக்கம் நிறைந்தவனாக அமைய வேண்டிய வயதே பதினெட்டு. ஆனால் அதுவே அவர்களுக்கு சுதந்திரமாக அமைந்து விட்டது. இவைகளை கண்மூடித்தனத்தில் முன்னோடியாய் கொள்வதினால் தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் சீரழிந்து கெட்டு குட்டிச் சுவராகி நிற்பதை தவிர வேறில்லை. அவற்றை விடுத்து இஸ்லாம் பிள்ளை வளர்ப்பில் தனக்கென ஒரு பாகத்தை எடுத்துரைத்து முன்னோடியாக விளங்குகிறது. சமூக ஒழுக்கம், சிறந்த பயிற்சி பண்பாட்டு விருத்தி, உளவிருத்தி, நாகரிக வளர்ச்சி, சிறந்த கல்வி இவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாம் எமக்கு முன்னோடியை என்றோ வழங்கிவிட்டது.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தந்தை தனது பிள்ளைகளுக்கு வழங்குபவற்றில் மிகவும் சிறந்த அன்பளிப்பு, அவர்களுக்களிக்கும் நல்ல கல்வியும் பயிற்சியுமேயாகும். ஆதாரம் - மிஷ்காத்

மனிதனுக்கு கவலை, துக்கம், துன்பம், துயரம் ஏற்படுவது இறை நியதியே. அதே மேற்குலகத்தாருக்கு ஏற்பட்டால் மது, மாது, சூது போன்றவற்றில் ஈடுபட்டு தம் கவலைகளை போக்கி கொள்ளலாம் என்ற மனப்பாங்கில் அதை சுவைக்கின்றனர். இன்னும் சிலர் தற்கொலையே செய்து கொள்கிறார்கள். இந்த நிலையை எப்படி நாங்கள் முன்னோடியாக எடுப்பது? அதற்காக இஸ்லாத்தில் இவ்வாறான விடயங்களுக்கு வழிகாட்டி இல்லாமல் இல்லை. எத்தனை துஆக்களை நம் பெருமானார்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

விசுவாசிகளே! பொறுமையை கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். (அல்-குர்ஆன் 2: 153)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளரின் விவகாரம் எத்தனை அழகானது! எந்த ஒரு நிலையிலும் அவன் நன்மைகளை ஈட்டிக் கொண்டே இருக்கிறானே! அவனுக்கு துக்கம், நோய், வறுமை ஏற்பட்டால் அவன் அமைதியுடன் அவற்றை பொறுக்கிறான். ஆதாரம் - முஸ்லிம்

இவற்றையெல்லாம் தெரிந்த பின்னும் மேற்குலகு தான் முன்னோடி என்பது வியப்பே! அத்தோடு இவர்களின் தோழமையும் ஒரு பிற்போக்கான நிலையே! அதில் எத்தனை அட்டகாசம், அப்பப்பா! எண்ணிலடங்கா!!! இதனால் உலகெங்கும் ஒரு கொடூர நோய் (எய்ட்ஸ்) எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு பெயர் தான் நாகரிகமா?

இத்தனை சமூக சீர்கேடுகளும், மோசமான பண்பாட்டு விஷயங்களும் நாகரிகம் என்ற பெயரில் நல்லவர்களை கொல்லும் தீய சில செயற்பாடுகளும் பண்பாடு என்ற பெயரில் பாமரர்களை பரிதவிக்கச் செய்யும் நிலைகள் கொண்ட உலகம் தான் முன்னோடி என்று பின்னால் வால் பிடிக்கப் போனால் அழிவு நிச்சயம்.

எனவே இவற்றை உணர்ந்து செயற்பட வல்ல நாயன் நமக்கு அருள் புரியும் நாள் வரட்டும். அன்றாவது எம் சமூகம் மேற்குலகு, மேற்குலகு என்று அலையும் அவசியம் ஒழியட்டும்.

நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.


அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.




மும்பைத் தாக்குதல் வழக்கில், கசாபுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. “தானே முன்வந்து முஜாகிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, அப்பாவிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், தூக்கு தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது.



அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80-களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமியத் தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞர்களை இசுலாமியத் தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்த அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் – அஜ்மல் கசாப். அவன் இசுலாமியத் தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.



எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.



கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?



ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.



எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.



பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.



இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.



பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.



1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சும் குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.



தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.



சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு இசுலாமியத் தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.



வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.



இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்

அந்த நூலின் சில பக்கங்கள் என்னை அதிரிச்சிக்குள்ளாக்கியது! மதுரை காமராசர் மற்றும் மனோன்மனியம் சுந்தரனார் பல்ககலைக்கலகங்களில் இளங்கலை வரலாறு பயிலும் மாணவர்கள் "இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு" பற்றி பயில, அவர்களுக்கு வழிகாட்டி நூலாக அதிகம் பயன்படுவது பேராசிரியர் G. வெங்கடேசன் எழுதிய History of Freedom Struggle in India நூலாகும். இந்நூலின் 251-253 பக்கங்களில் மாப்பிள்ளைப்புரட்சி பற்றிப்பேசிவரும் ஆசிரியர்: மாப்பிள்ளை கிளர்ச்சி ஒரு சுதந்திரப்போராட்டக்கிளர்ச்சியே அல்ல, அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக மலபார் முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம். மேலும் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தை கேரளாவில் பின்னடையச்செய்தது இக்கிளர்ச்சியே. அதுமட்டுமல்ல மலபார் முஸ்லிம்போராளிகளும், மதவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் இந்துக்களைக் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்தனர் - மதமாற்றம் செய்தனர் - இந்துப்பெண்களைக் கற்பழிதிதனர் - இந்துக்களின் உடமைகளைக் கொள்ளையிட்டனர் - வீடுகளைத் தீயிட்டனர்!* *G.Venkatesan, History of Freedom Struggle in India, p.p251-253. -என்று மாப்பிள்ளைக்கிளர்ச்சியை மதிப்பீடு செய்கிறார். மிகப்பெரும் தியாகம் புரிந்த பரம்பரையை - அதன் வரலாற்றை இளம் நெஞ்சங்களுக்குத் துவேச எண்ணத்துடன் அறிமுகம் செய்யும் வகையில் எழுதியுள்ளார். இந்திய மண்ணின் விடுதலைக்காக - பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தென்னகத்தில் நிகழ்ந்த ரத்தப்புரட்சி... மாப்பிள்ளைப்புரட்சி. கேரளாவின் மலபார் மாப்பிள்ளை முஸ்லிம்ககள் ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராகவும் - அவர்களுக்கு விசுவாச ஊழியர்களான மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த இப்புரட்சியை ஒடுக்க மாப்பிள்ளை அவுட்ரேச் சட்டம், மாப்பிள்ளைக் கத்திச் சட்டம் போன்றவற்றை மலபார் முஸ்லிம்கள் மீது அரசு தினித்தது. கிலாபத் இயக்கத்தின் எழுச்சியில் நிகழ்ந்த இக்கிளர்ச்சியின் போது பொக்காத்தூரில் உயிரிழந்த மாப்பிள்ளை முஸ்லிம்களின் எண்ணிக்கை 600. பட்டாம்பியில் உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 500. கைது செய்யப்பட்டு திரூரிலிருந்து கோயம்பத்தூருக்கு சரக்கு ரயிலின் காற்றுப்புகாத பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டு வரும்போது, மூச்சுத்திணறி இறந்த மாப்பிள்ளைகளின் எண்ணிக்கை 55 என்று 1921 செப்டம்பர் 1 - இல் வெளியான "தி இண்டிபென்டன்ட்" பத்திரிக்கை கூறியது.* *B.M.Tank, Non-Co.operation Movement in India.1921, A Historical Study, P.106. இதுவெல்லாம் மாப்பிள்ளை முஸ்லிம்களின் தியாகத்தைப் பற்றி நான் படித்து கண்கள் பனித்த வரலாறு. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதிய பல வரலாற்று அறிஞர்களது நூல்களின் பக்கங்களுக்குள் சோகங்களின் கனத்தோடு அடைபட்டுக்கிடக்கும் இந்தப்புரட்சி வரலாறு பேராசிரியர் வெங்கடேசன் அவர்களுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சரியமே. 1985- இல் வெளிவந்த இவரது நூலின் ஆங்கில மற்றும் தமிழ்ப் பதிப்புகளையே இளங்களை மாணவர்கள் அதிகமாகப்படிக்கின்றனர். எத்தனையோ நேர்மையான ஆய்வு மனம் கொண்ட பேராசிரியர்கள் - வரலாற்று அறிஞர்கள் தமிழகத்தில இருந்தும், இவரது வரிகளுக்குள் முகம் காட்டும் வகுப்புணர்வுக்கு ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்காதது வருந்துதற்குறியது. ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள பாராளுமன்ற உறுப்பினரும் வரலாற்று அறிஞருமான B. N. பாண்டே அவர்கள் எழுதிய "இஸ்லாமும் இந்தியக் கலாச் சாரமும்" என்ற நூலைப்படித்தபோது, B.N. பாண்டே போன்ற அறிஞர்களுக்கு இருந்த தார்மீக உணர்வு கூட இஸ்லாமிய கல்வியாளர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று ஆதங்கப்பட்டேன். என்னை ஆதங்கப்பட வைத்த அக்கட்டுரைச்செய்தி இது தான்: B.N. பாண்டே அவர்கள் 1928 - இல் அலகாபாத்தில் மாவீரர் திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது, ஆங்கிலோ -பெங்காலி கல்லூரி மாணவர் மன்றத்தின் வரலாற்றுக்கழகத்தை தொடங்கிவைத்து உரையாற்ற அழைக்கப் பட்டிருந்தார். அவ்வுரைக்காக ஆயத்தம் செய்யும் போது, அன்று ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஒரிசா, பீஹார், பெங்கால் மாநிலங்களின் உயர்நிலைக் கல்விப் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலைப்படித்து அதிர்ந்திருக்கிறார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறைத் தலைவர் டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய அவ்வரலாற்று நு}லில், B.N. பாண்டே அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி இதுதான்: திப்புசுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் பலாத்காரம் செய்த போது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்! - இத்தகவலைப் படித்தவுடன் B.N. பாண்டே உடனடியாக, "எந்த ஆதாரத்தைக்கொண்டு இதை எழுதினீர்கள்" -என்று டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். பல கடிதங்களுக்குப் பிறகு டாக்டர். ஹரிபிரசாத் சாஸ்திரியிடம் இருந்து வந்த கடிதத்தில், "மைசூர் கெஸட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது" - என்று பதில் வருகிறது. உடனடியாக மைசூர் பல்கலைக்ககைத்தின் துணைவேந்தர் சர்.பிஜேந்திரநாத் ஸீல் அவர்களுக்கு, "டாக்டர்.ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெஸட்டிலிருந்து எடுத்தாக கூறப்படும் செய்தி உண்மைதானா" - என்று விசாரித்து எழுதுகிறார். துணைவேந்தர் அக்கடிதத்தை, அன்று மைசூர் கெஸட்டின் புதுப்பதிப்பினைத் தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீஹண்டையா அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அவர் மைசூர் கெஸட்டினை ஆராய்ந்து அலசிவிட்டு, "இது மாதிரி சம்பவம் எதுவும் மைசூர் கெஸட்டில் இடம் பெறவில்லை" - என்று பதில் தருகிறார். அத்தோடு திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்ற பிராமணர் என்பதையும், சேனைத்தலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்தார். மேலும் திப்புசுல்தான் 156 இந்துக் கோவில்களுக்கு வருடாந்திர செலவுக்காக மாண்யம் வழங்கிய பட்டியலையும்: சிருங்கேரி மடம் ஜகத் குரு சங்கராச்சாரியாருக்கும் திப்புசுல்தானுக்கும் இருந்த நேச உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களாகத் திப்புசுல்தான் சிருங்கேரி மடத்திற்கு எழுதிய 30 கடிதங்களின் புகைப்பட நகல்களையும் B.N. பாண்டே அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்.* (*மராத்தியைச் சேர்ந்த பிண்டாரிகள் எனச்சொல்லப்பட்ட முரட்டுப்படையினர் ரகுநாதப் பட்டவர்த்தனின் தலைமையில் சிருங்கேரி மடத்தையும் சாரதா ஆலயத்தையும் (1791-இல்) கொள்ளையிட்டனர். சாரதா பீடம் உட்பட 60 லடசம் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையிட்டதோடு, பிராமண அர்ச்சகர்கள் பலரையும் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிருங்கேரி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் துங்கபத்திரா நதிக்கரையில் உண்ணாவிரதம் இருந்தார். அவர் தனது உண்ணா விரதத்தை கை விடும் படியும், இழப்புகளை ஈடு செய்வதாகவும் பீடாதிபதிக்கு திப்புசுல்தான் எழுதிய மடல்களுள் ஒன்று. பார்க்க பின்னிணைப்பு.1 - Page 35) பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களைக் கொண்டு, அன்று பாடத் திட்டத்திற்கான நூல்களைத் தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு, "பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்" - என்று B.N. பாண்டே எழுதுகிறார். அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அஸ்டோஸ் முகர்ஜி, இதன் மேல் நடவடிக்கை எடுத்து டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலைப்பாடத்திட்டத்தில் இருந்து தடை செய்கிறார்.** (** B.N. Pande, "Distortion of medival Indian History", Islam and Indian Culture Pa37-39) அறிஞர் B.N. பாண்டேயின் இம்முயற்சியினை ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால், திப்புசுல்தான் பற்றி ஒரு வரலாற்று நூலில் வெளியான தவறான தகவலை அப்புறப் படுத்துவதற்காகவும் வரலாறு நேர்மையாகச் சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் முஸ்லிம் அல்லாத ஒரு வரலாற்று அறிஞர் மேற்கொண்ட முயற்சிகளில், முஸ்லிம் அறிஞர்கள் இறங்காத காரணத்தினால்தான் ஆங்கிலேயர் காலம் தொட்டு இன்று வரை இந்திய இஸ்லாமியரின் வரலாறுகள் திரிக்கப்பட்ட வரலாறாகவே வெளிவந்துள்ளன. இந்தியாவின் வரலாறு அதிலும் குறிப்பாக இந்திய இஸ்லாமியரின் வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயத்தேவை. முஸ்லிம்களைத் தேச விரோதிகள், தேசப்பற்று இல்லாதவர்கள், வன்முறையாளர்கள், இந்த மண்ணின் மரபுகளுடனும் இந்திய தேசத்தின் பண்பாட்டு பாரம்பரியங்களுடனும் ஒத்துப் போகாதவர்கள் என்றெல்லாம் கட்டுக்கதைகள் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் இந்திய தேசத்தின் விடுதலைப்போரில் பச்சை ரத்தங்களாய் பரிமாரப்பட்ட இஸ்லாமியர்களின் தியாகங்களும் வரலாறுகளும் மீண்டும் மீண்டும் பேசப்படவேண்டும். இந்த தார்மீக பொறுப்புணர்வின் அடிப்படையில் தான் தியாகத்தின் நிறம் பச்சை - என்ற இந்நூலை, நான் அறிந்த வரலாற்று ஆதாரங்களைக்கொண்டு படைத்துள்ளேன். இந்திய விடுதலைக்கு இஸலாமியர் ஆற்றிய தொண்டுகளை முழுமையாகப் பேசுவதோ, பல்வேறு தளங்களில் நின்று தியாகம் புரிந்தோர் பெயர்களைப் பட்டியலிட்டுக் காட்டுவதோ என் நோக்கமல்ல. என் மனதைப் பாதித்த விசயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தை மட்டுமே இந்நூலின் பக்கங்களுக்குள் நான் பத்திரப்படுத்தியுள்ளேன். இந்நூலாக்கத்திற்கு துணைநின்ற நெஞ்சங்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். வரலாற்று ஆதாரங்களைத்திரட்ட துணை நின்ற முனைவர் S. வர்க்கீஸ் ஜெயராஜ் மற்றும் நண்பர்களுக்கும்: தேவையான நூல்களைத் தந்து உதவிய .. இன்று தமிழகத்திலேயே அதிகமான இஸ்லாமிய ஆன்மிக - இலக்கிய நூற்களைச் சேகரித்து வைத்துள்ள "இஸ்லாமிய நூற்காவலர்" கம்பம் S. முகம்மது அலி அவர்களுக்கும்: எனது எழுத்தாக்கம் நூல் வடிவம் பெற முழு ஒத்துழைப்பு நல்கிய தக்கலை ஹாமிம் முஸ்தபா அவர்களுக்கும் என் நன்றிகள். என் எண்ணங்களை - எதிர்பார்ப்புகளைக் கம்ப்யூட்டர் மூலம் வடிவமைத்து தந்த நாகர்கோவில் "இமேஜ்"|ஆப்செட் பிரிண்டர்ஸ்-க்கும்: நூலை மிகச்கிறப்பாக பதிப்பித்து வெளியிட்ட.. சமுதாயத்தின் விடியல் வெள்ளியாத் திகழும் இலக்கியச்சோலை பதிப்பகத்தாருக்கும் என் நன்றிகள். இந்திய விடுதலைக்காகப் பல்வேறு நிலைகளில் நின்று இஸ்லாமியர் ஆற்றிய பணிகளை - தியாகங்களை இங்கு வாசகர்களுக்குள் வசப்படுத்த முயற்சித்துள்ளேன். வாசியுங்கள்... விமர்சனங்களை எனக்கு எழுதுங்கள். அவை மேலும் என்னையும் என படைப்புகளையும் செம்மைப்படுத்த உதவும். அன்புடன் மு. அப்துல் சமது தேர்வுநிலை விரிவுரையாளர் தமிழ்த்துறை - ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம் - 625533. வெளியீட்டாளர் முன்னுரை நன்றி கொல்வதை வாழ்க்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள். தேசப் பிரிவினைக்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள். இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறு தான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு. இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள். அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள். இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது. இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலைப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு. இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!! ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும். இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும். இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் History Of Freedom Struggle in Indiaை ஓர் எடுத்துக்காட்டு. இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை - இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் "தேசியம்" என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் "தேசியம்" என்ற கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போராடினார்கள். ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 9). அங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான். இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள் ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான். இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த நூலை "இலக்கியச்சோலை"யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா.அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். "இலக்கிச்சோலை"யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ். வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம். இவண், மு. குலாம் முஹம்மது காப்பாளர், இலக்கியச்சோல
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16