வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

ஹிஜாப் அணிந்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கம்! எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி!



முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான்.


இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பி, கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றின் பிரின்ஸிபலாகப் பணிபுரியும் மேரி ஜெஸிண்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேரி ஜெஸிண்டா எதிர்வரும் ஜுலை 31 ந்தேதிக்குள் நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதன்மை நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிபதியான முஹம்மத் வஸீன், இது தொடர்பான அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், நபலா என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் முஸ்லிம் மாணவி, தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்தால் டி.ஸி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு "பள்ளியின் சீருடைக்கு இது முரணாக உள்ளது" என்ற காரணம் காட்டப்பட்டது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலாவது தனது மகளைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பள்ளி நிர்வாகம் கறாராக மறுத்து விட்டது என்கிறார் மாணவி நபலாவின் தந்தை நஜீர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி நபலாவின் தந்தை நஜீர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை அடுத்து நடைபெற்ற தொடர் விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இ.பி.கோ 504 (அமைதியைக் குலைக்கும்படியான அவமதிப்பைச் செய்தல்) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் பிரின்ஸிபலை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இவ்விஷயம் அதிக சர்ச்சைக்கு உள்ளானதால், தீர்வு காணும் பொருட்டு மாவட்ட ஆட்சியாளர் பி. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் கடந்த மாதம், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்தபிறகு, மாணவி நபலாவை மீண்டும் தமது பள்ளியில் இணைந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை நிராகரித்துள்ள மாணவி நபலா தற்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறார்.
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16