வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

வீடும் வாசலும் வாகனமும்...!



அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: மறுமை நாளில் செயல்களை எடை போடும் மீஜான் எனும் எடைத் தட்டில் வைக்கப்படும் பொருள்கள் அனைத்திலும் மிகவும் கனம் வாய்ந்தது நற்குணமே!
அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி)
நூல் : அபூதாவூத், திர்மிதி

விளக்கம்

நற்குணங்களும் நன்னடத்தையும் தான் மனித வாழ்வின் உண்மையான அழகு ஆகும். உண்மையான மனித நடத்தையோடு இயைந்து போவது நற்குணமும் நன்னடத்தையும்தான். எனவே மீஜான் எனும் எடைத்தட்டில் எல்லா செயல்களை விடவும் மிக அதிகமான கனம் வாய்ந்ததாக நற்குணமும் நன்னடத்தையும் இருப்பது இயல்பான ஒன்றே.

மனிதனிடம் என்னென்ன வாழ்க்கை வசதிகள் உள்ளன? எத்தனை மகிழுந்துகள் உள்ளன? மாட மாளிகைகள் எத்தனை? போன்ற விவரங்களைக் கொண்டு எவரும் மனிதனை அடையாளம் காண்பதில்லை. ஆள் எப்படி? குணம் எத்தகையது? நடத்தை எப்படி என்பதைக் கொண்டே ஒரு மனிதன் உண்மையாக அடையாளம் காணப்படுகிறான்.

உலகில் என்ன சம்பாதித்தாய்? எத்தனை மகிழுந்துகளை வைத்திருந்தாய்? வங்கி இருப்பு எவ்வளவு சேமித்திருந்தாய்? எந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தாய் என்றெல்லாம் இறைவன் கேட்க மாட்டான். எத்தகைய ஆளுமையுடன் எத்தகைய குணங்களுடன் வந்துள்ளாய் என்பதுதான் அசல் கேள்வியாக இருக்கும்.

ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? ஒருவரின் சிந்தனைகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் நற்குணம், நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டே அவருடைய ஆளுமை அமையும்.

ஒருவர் என்னதான் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தராக, செல்வாக்கு மிக்கவராக, அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரிடம் நற்குணமும், நன்னடத்தையும் உயர் பண்புகளும் இல்லாமல் போனால் உண்மையில் அவர் பஞ்சப் பராரியான, இழிவான பிறவியே ஆவார்.
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16