வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

யார் இந்த மல்கம் எக்ஸ்?

யார் இந்த மல்கம் எக்ஸ்?

I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation’



-Malcolm X-



யார் இந்த மல்கம் எக்ஸ்?





அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், இவர் பிறந்த காலத்தில் இறந்தவர், அவர்தான் Malcolm X.


An African-American Muslim minister, public speaker, and human rights activist. To his admirers, he was a courageous advocate for the rights of African Americans, a man who indicted white America in the harshest terms for its crimes against black Americans.





 மல்கம் எக்ஸ் (மே 19, 1925 – பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று உண்மையான முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார். He has been described as one of the greatest and most influential African Americans in history.






மார்ட்டின் லூதர் கிங்கும், மல்கம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். 1992 இல் “Malcolm X” என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.


அன்றைய நேரம் அத்திரைப்படத்தை என்நண்பர்கள் மூவருடன் Lawrence & Markham த்தில் இருந்த Famous players இல் பார்த்ததை நினவு கூருகிறேன்.






மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும் அத்திரைப்படம் மூலம் நேரில் பார்த்து மாதிரி அறியக்கூடிதாக இருந்தது. இன்றும் அவரின் சிரார்த்த தினம் அன்று அவரின் திரைப்படத்தை கனடிய தொலைக்காட்சியில் போட்டவிடத்து அவரை, அவரின் போராட்ட குணாம்சங்களை நினைவு கூறுமிடத்து தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் “மால்கம் எக்ஸ்” எனும் நூலைத் தொகுத்துள்ளார். அதில் அவரின் தொகுப்பிலிருந்தும் எனது இணையங்களின் தேடல்க்களுமிருந்தும் எனது “மல்கம் எக்ஸ்” பற்றிய சிறு புரட்டல்களை காலத்தின் தேவை கருதி இத்தருணத்தில் வாசகர்களுடன் பகிர்கிறேன்……….


யார் இந்த மல்கம் எக்ஸ்?




இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பராக் உசேன் ஒபாமாவிற்கு முன் அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் அமெரிக்க கறுப்பினத்தவரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர், இவர் பிறந்த காலத்தில் இறந்தவர், அவர்தான் Malcolm X.



மால்கம் மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். அவருடைய ஆழ்ந்த அறிவு, விரிந்துக் காணப்பட்டு இருக்கும் அறிவு கேட்போரை பிரமிக்க செய்தது. அவருடைய பேச்சுகளை கெட்டு கறுப்பினர் மட்டும் அல்ல வெள்ளையர்களும் எப்படி ஓர் தனிமனிதனாக இப்படி பட்ட ஏராளமான மக்களை கவர முடிந்தது என்று வியந்தனர். மால்கமின் ஓர் சொல்லிற்கு

எண்ணற்று கறுப்பர்கள் பின்னால் நின்றார்கள்.

அவரின் ஆரம்ப காலத்தை எடுத்துக்கொண்டால், மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள்.

Malcolm X was born in Omaha, Nebraska. By the time he was thirteen, his father had died and his mother had been committed to a mental hospital. His childhood, including his father’s lessons concerning black pride and self-reliance and his own experiences concerning race, played a significant role in Malcolm X’s adult life.



இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். After living in a series of foster homes, Malcolm X became involved in hustling and other criminal activities in Boston and New York. In 1946, Malcolm X was sentenced to eight to ten years in prison. அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். While in prison, Malcolm X became a member of the Nation of Islam. After his parole in 1952, he became one of the Nation’s leaders and chief spokesmen. For nearly a dozen years, he was the public face of the Nation of Islam. Tension between Malcolm X and Elijah Muhammad, head of the Nation of Islam, led to Malcolm X’s departure from the organization in March 1964.



இவற்றைத் தொடர்ந்து வெள்ளை இனத்துவேசவாதிகள் மட்டுமில்லை, அமெரிக்க அரசின் உளவுநிறுவனமும் மல்கமை கண்காணிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பொழுதுகளில் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளை பேசி கருப்பின மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த, மலக்ம் எக்ஸ் அமெரிக்காவின் வடக்குப் பகுதியான நியூயோர்க்கில் கறுப்பின் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார்.



இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது.

இதன் இரகசியம் என்னவென்றால், உலகில் மற்ற இனத்தில் தங்களுடைய பெயர்களுடன் தங்கள் குடும்பப் பெயர் இணைந்திருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கோ தங்களை அடிமையாக வைத்திருப்பவர்களின் பெயரை இணைக்க வேண்டும். ஒவ்வொரு கறுப்பின மனிதனுக்கும் விதிக்கப்பட்ட இக்கொடுமையை என்னவென்று விவரிப்பது?



மல்கம் எக்ஸ் [Malcolm X] கேட்கிறார். “நான் யாருக்கும் அடிமையில்லை

என் பெயருக்குப் பக்கத்தில் என்னை அடிமைப்படுத்தியவனின் பெயரை இணைக்க விரும்பவில்லை.”



அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் (Little) என்ற பெயரை எக்ஸ் (X) ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் (X) என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் (X) என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர்.



இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது. Malcolm X said he was going to organize a black nationalist organization that would try to “heighten the political consciousness” of African Americans. He also expressed his desire to work with other civil rights leaders and said that Elijah Muhammad had prevented him from doing so in the past. One reason for the separation was growing tension between Malcolm X and Elijah Muhammad because of Malcolm X’s dismay about rumors of Muhammad’s extramarital affairs with young secretaries.

அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, ‘வினை விதைதவன் வினை அறுப்பான்’ என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.


On December 1, 1963, when he was asked for a comment about the assassination of President Kennedy, Malcolm X said that it was a case of “chickens coming home to roost”. He added that “chickens coming home to roost never did make me sad; they’ve always made me glad.”[102] The New York Times wrote, “in further criticism of Mr. Kennedy, the Muslim leader cited the murders of Patrice Lumumba, Congo leader, of Medgar Evers, civil rights leader, and of the Negro girls bombed earlier this year in a Birmingham church. These, he said, were instances of other ‘chickens coming home to roost’.”



The remarks prompted a widespread public outcry. The Nation of Islam, which had issued a message of condolence to the Kennedy family and ordered its ministers not to comment on the assassination, publicly censured their former shining star. Although Malcolm X retained his post and rank as minister, he was prohibited from public speaking for 90 days.



இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கருப்பின் மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.



Meeting Fidel Castro and other world leaders

In September 1960, Fidel Castro arrived in New York to attend the meeting of the United Nations General Assembly. He and his entourage stayed at the Hotel Theresa in Harlem. Malcolm X was a prominent member of a Harlem-based welcoming committee made up of community leaders who met with Castro. Castro was so impressed by Malcolm X that he requested a private meeting with him. At the end of their two-hour meeting, Castro invited Malcolm X to visit him in Cuba. During the General Assembly meeting, Malcolm X was also invited to many official embassy functions sponsored by African nations, where he met heads of state and other leaders, including Gamal Abdel Nasser of Egypt, Ahmed Sékou Touré of Guinea, and Kenneth Kaunda of the Zambian African National காங்கிரஸ்.



திருமணம் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாத மல்கம் பிறகு பெற்றியை (Betty) திருமணம் செய்கின்றார். எனினும் மல்கம் பெண்கள் மீதான முற்போக்கான கருத்துகள் எதையும் கொண்டிராது -ஒரு அடிப்படை மதவாதியைப் போல இருந்தது- மல்கமின் ஆளுமையில் முக்கிய குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். எனினும் கறுப்பின் மக்களின் தலைமைக்கான தகுதியை மல்கம் கொண்டிருந்தார் என்பதை -இதைவைத்து- மறுக்கவும் முடியாது.



Nation of Islam மை பிரிந்த பின்னும் மல்கமின் வளர்ச்சியை எலிஜாவினால் தடுக்கமுடியாது போகின்றது. அதேசமயத்தில் சட்டத்தின் அப்பாற்பட்ட தனது முறையற்ற மனைவியர் பற்றிய செய்தியை மூடிமறைப்பதற்கான ஒத்துழைப்பை எலிஜா கேட்டபோதும் மல்கம் மறுத்துவிடுகின்றார் என்பது இன்னும் எலிஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. 1965ம் ஆண்டு ஒரு அரங்கில் மல்கம் பேசிக்கொண்டிருக்கும்போது எலிஜாவின் ஆதரவாளர்களால் மல்கம் கொல்லப்படுகின்றார். எலிஜாவின் ஆதரவாளர்களால் இக்கொலை செய்யப்படாலும் இதன் பின்னணியில் அமெரிக்கா உளவுநிறுவனங்களின் ‘சுத்தமான’ கைகளும் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. மல்கமை உளவு பார்த்துப் பார்த்தே ஏழாயிரம் பக்கங்களுக்கு மேலான பக்கங்கள் உளவுத் துறையில் சேகரிக்கப்படது கவனத்தில் கொள்ளக்கூடியது.



On February 21, 1965, in Manhattan’s Audubon Ballroom, Malcolm X began to speak to a meeting of the Organization of Afro-American Unity when a disturbance broke out in the crowd of 400. A man yelled, “Nigger! Get your hand outta my pocket!” As Malcolm X and his bodyguards moved to quiet the disturbance, a man rushed forward and shot him in the chest with a sawed-off shotgun.

Two other men charged the stage and fired handguns, hitting him 16 times. Angry onlookers caught and beat one of the assassins as the others fled the ballroom. Malcolm X was pronounced dead at 3:30 p.m., shortly after he arrived at Columbia Presbyterian Hospital.

Talmadge Hayer, a Black Muslim also known as Thomas Hagan, was arrested on the scene. Eyewitnesses identified two more suspects, Norman 3X Butler and Thomas 15X Johnson, also members of the Nation of Islam. All three were charged in the case. At first Hayer denied involvement, but during the trial he confessed to having fired shots at Malcolm X. He testified that Butler and Johnson were not present and were not involved in the assassination, but he declined to name the men who had joined him in the shooting. All three men were convicted.

Butler, now known as Muhammad Abdul Aziz, was paroled in 1985. He became the head of the Nation of Islam’s Harlem mosque in New York in 1998. He continues to maintain his innocence. Johnson, now known as Khalil Islam, was released from prison in 1987. During his time in prison, he rejected the teachings of the Nation of Islam and converted to Sunni Islam. He, too, maintains his innocence. Hayer, now known as Mujahid Halim, was paroled in 1993.



மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மல்கம் தப்பியுமிருக்கின்றார். கலகக்காரனாய் இருந்த மல்கமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.



மல்கம் எக்ஸ் (1965), மார்ட்டின் லூதர் கிங் (1968) இரண்டு முக்கிய கறுப்பின் தலைவர்களையும் அடுத்தடுத்து மூன்றாண்டுகளுக்குள் கறுப்பின் மக்கள் இழக்கின்றனர். இவர்கள் இருவரின் மிக்ப்பெரும் எழுச்சியானது, இனி மனிதவுரிமைகள் பேசும் எந்தத் தலைவரையும் பிரமாண்டமாய் வளர்ந்துவிடச்செய்யக்கூடாது என்பதில் 2009 வரை அமெரிக்க அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருந்தது.

ரவிக்குமாரின் ‘மால்கம் எக்ஸ்’ நூலை எழுதும்போது,

“அதனாலேயே இற்றைய மிகு நெருக்கடி காலத்திலும் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போலவோ, மல்கம் எக்ஸ் போலவே ஒருவர் உருவாக முடியாது உள்ளது. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு (கறுப்பின, ஸ்பானிய, பூர்வீககுடிகளுக்கு, 9/11 ற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு) தங்கள் உரிமைகளுக்காய் போராட வேண்டியபயணமோ மிகவும் நீண்டதாய் இருக்கின்றது”, என்று குறிப்பிடுள்ளார்.

ஆனால் இன்றோ ஓர் கறுப்பின இஸ்லாமிய தகப்பனிற்கு பிறந்தவர் அதே அமெரிக்காவின் ஜனதிபதியாகியுளார்.



மால்கமின் பேச்சைப் பார்த்து விடுதலைக்கு போராடிய ஆப்ரிக்க நேஷனல் காங்கிரஸ் மற்றும் பாலுஸ்தீன விடுதலை இயக்கம் அவரை தம் தம் நாடுகளில் பேச அழைத்து அவரை அங்கீரித்த காரணத்தால் அவர் உலகத் தலைவர் வரிசையில் இடம் பிடித்தார்.



மால்கம் வாழ்க்கை முழுவதுமே புரட்சிதான்.

“புரட்சி என்பது ரத்தம் சிந்துவது,

புரட்சி என்பது சமரசமற்றது,

புரட்சி என்பது தனது பாதையில் எதிர்படும் அனைத்தும் தலைகீழாக புரட்டி போடுவது…”

அப்படிதான் மால்கமும் வாழ்ந்து வந்தார்.



மால்கம் ஓர் கறுப்பின போராளி மட்டும் அல்ல,

பணிய மறுத்து நிமிரும் தலைகளில், மால்கமின் தலை இருக்கிறது,

அடங்க மறுத்து வெளிபடும் குரல்களில், மால்கமின் குரல் இருக்கிறது,

தாழ மறுத்து உயரும் கரங்களில், மால்கமின் கரங்கள் இருக்கிறது…..



அமெரிக்க கறுப்பின மக்களுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் (Martin luther King) காலத்தில் வாழ்ந்த சமகாலத்தவர் தான் மல்கம் எக்ஸ். இருவரின் பாதையும் வெவ்வேறு திசை நோக்கியதாக இருந்தது. இருவரும் மார்ச் 26.1964-இல் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்திருக்கின்றனர். அதுவும் சில நொடிகள் மட்டுமே. மல்கம் எக்ஸ் வன்முறையை தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. மார்ட்டின் லூதர் கிங் அணுகுமுறை மாறுபட்டிருந்தாலும் இவரும் சுட்டுக் கொல்லப்பட்டார் மல்கம் எக்ஸ் போலவே…

நம்முடைய கேள்வி, ´மல்கம் எக்ஸ் வன்முறையை தூண்டினாரா?´ என்பதற்கான தேடல்…


அமெரிக்கா முழுவதும் வெள்ளை இனவெறியைச் சேர்ந்த அமைப்புக்கள் பல இருந்தன. ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கொல்வது, அவர்களிடம் கொள்ளையடிப்பது, உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்துவது, பெண்களை வல்லுறவு செய்வது என வன்முறைகளில் ஈடுபட்ட காலங்கள் அவை.

´ஒமஹா´ [Omaha] மாநகரத்தைச் சேர்ந்த மல்கம் எக்ஸ் அந்தப் பகுதியைச் சேர்ந்த ´பிளாக் லெஜியிஓன்´ [Black legion] இனவெறி குழுவால் அதிகம் பாதிப்பிற்குள்ளானவர். இவர் அப்பாவின் 3-தம்பிகள் இக்குழுக்களால் இனவெறி காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

´ஒமஹா´வில் [Omaha] ´நெப்ராஸ்கா´ [Nebraska] என்னும் ஊரில் ´மல்கம் எக்ஸ்´ இன் அப்பா 1931-இல் இனவெறிக்காரணமாக காரில் மோதவிட்டு கொலை செய்தார்கள். அப்போது ´மல்கம் எக்ஸ்´ வயது 6.

ஆனால், காரில் மோதி இறந்தது ஆக்ஸிடென்ட் என்று அவ்வூர் போலீசார் மரண சான்றிதழ் கொடுத்ததால் இன்சூரன்ஸ் கூட ´மல்கம் எக்ஸ்´ குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. இவருடைய குடும்பத்தில் மட்டும் இப்படிப்பட்ட கொடுமைகள் இல்லை. ஒவ்வொரு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடும்பங்களிலும் பல சோக நிகழ்வுகள் இருந்தன.

எந்த வருமானமும் இல்லாமல் ´மல்கம் எக்ஸ்´ அம்மா குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார். தன் கணவனின் மரணம் திட்டமிட்ட படுகொலை என்று எவ்வளவு வாதாடியும் பலனில்லாமல் போய்விட்டது. அதுவே அவருக்குள் மனபாதிப்பை ஏற்படுththukirathu.

I think in April, 1964 Malcolm X made a speech titled “The Ballot or the Bullet” in which he advised African Americans to exercise their right to vote wisely. In this time I remind his speech to our loving Eelam Tamils.

ஒருமுறை Malcolm தனது உரையில் பேசியிருந்தார், “ஒவ்வொரு வாக்குகளும் ஒவ்வொரு துப்பாக்கி இரவைகளுக்கு சமம்” என்று, இதை இன்று எம் நாட்டில் நடக்கப்போகும் தேர்தல் தருணத்தில் எமது ஈழம் வாழ் மக்களிற்கும் நினைவூட்டுகிறேன்!


நன்றி: அலெக்ஸ் இரவி


Official Web Site of Malcolm X

http://www.malcolmx.com/

Videos of Malcolm X

http://video.google.ca/videosearch?hl=en&source=hp&q=malcolm+x&rlz=1W1SKPB_en&oq=malcom&um=1&ie=UTF-8&ei=IAmCS6rlEI60tgeLnODVBg&sa=X&oi=video_result_group&ct=title&resnum=8&ved=0CDIQqwQwBw#

Malcolm X (film)

http://en.wikipedia.org/wiki/Malcolm_X_(film)

http://en.wikipedia.org/wiki/The_Autobiography_of_Malcolm_X

http://en.wikipedia.org/wiki/Malcolm_X
மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16