வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

கோள்களின் இயக்க விதி:

அளவற்ற அருளாளனின் திருநாமம் போற்றி.
03: கோள்களின் இயக்க விதி:
1571 ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த Johannes Kepler என்ற விஞ்ஞானியே "The Laws of Planetary" எனும் வான்கோள்களின் இயக்க விதிகளை 1609 ல் கண்டுபிடித்தார். இதை தனது 'நோமியா நோவியா" எனும் புத்தகத்தில் விவரிக்கின்றார்.

இது இவரது மாபெரும் சாதனை என்பதில் சந்தேகம் கிடையாது. இவர் இச்சாதனையை உலகின் கண்னெதிரே கொண்டு வருவதற்கு எவ்வளவோ உழைத்திருக்க வேண்டும். எத்தனையோ நவீன தொலை நோக்கு சாதனங்களை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கிட்டத்தட்ட 1400 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகில் உதயமான அல்-குர்ஆனில் 'கோள்களின் இயக்க விதி" பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது சிந்தித்து சத்தியத்தைத் தேடும் உள்ளங்களுக்கு ஒரு விருந்தாகும்.

அல்-குர்ஆன் இறைவாக்காகும் என்பதனை நிரூபிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்:

قال الله تعالى:[وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون]- 21:33
'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40) போன்ற வசனங்களிலும் காணலாம்.

அரேபியர்களின் வானவியல் தேர்ச்சியை வைத்து, இது போன்ற வசனங்கள் அரபுகளால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு போதிக்கப்பட்டு பின் அல்-குர்ஆனில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு வாதத்தை வைக்கலாம். ஆனால் அல்-குர்ஆன் இறங்கி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் தான் அரபுகள் வானவியலில் தேர்ச்சி பெற்றார்கள் என்பதனை கவணத்தில் கொண்டால், அல்-குர்ஆன்தான் அரபுகளுக்கு பாடம் நடத்தியிருக்க வேண்டும் என்பதனை இலகுவில் புறிந்து கொள்ள முடியும்!

04 – அனைத்துக் கோள்களும் ஒரு தவணை வரைதான் ஓடுகின்றன.
பூமி, சூரியன், சந்திரம் மற்றும் பிற கிரகங்கள், நட்சத்திரங்களை உள்ளடக்கிய (Milkyway Galaxy) பால் வீதி மண்டலத்தில் இது போன்ற இன்னும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளதாக விஞ்ஞான ஆய்வகம் கூறுகின்றது. இந்த பால் வீதி காலக்ஸியானது வினாடிக்கு 500 கி.மீ வேகத்தில் பயணமாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொரு காலக்ஸிகளும் தான் சுழழும் திசைக்கு எதிர்த் திசையில் 27 டிகிரி நிலையில் சென்று கொண்டிருக்கின்றன.

அவையனைத்தும் 'Great Attracter' என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக 1986 ல் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியிலிருந்து 200 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். (ஒளி, ஒரு வினாடிக்கு 186282 மைல்கள் வேகத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஒளியாண்டு தூரமாகும்.)
-(ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA.)

எல்லாக் கோள்களும் குறிப்பிட்ட ஒரு தவணை வரை ஓடுகின்றன என்ற செய்தியை அல்-குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
قال الله تعالى:[وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى] – 13:2
 
'அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)

சூரியன் மட்டுமல்ல அனைத்து கோள்களும் ஒரு தவணை வரைதான் ஓடுகின்றன என்பதனை 31:29, 35:13, 39:5 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறி அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதனை தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
 
அடுத்த தொடரில்.  இன்ஷா அல்லாஹ் ..




ஆக்கம், தொகுப்பு: அபூ அரீஜ்

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16