வருகையாளர்களே! உங்கள் மீது படைத்தவனின் சாந்தி உண்டாகட்டும். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; நாம் அல்லாஹ்வைத்தவிர(அதாவது படைத்தவனை தவிர) வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” இதை நீங்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” நன்மக்களுக்காக வலைதளங்களில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைதளம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒருமையுடன் நினது திருமலரடி நினைகின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும். பெருநெறி பிடித்தொழுக வேண்டும். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....(வள்ளலார்)

மக்கள்தொகை கணக்கெடுப்பு



மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011


சரியான தகவல் கூறவும்


அலட்சியம் வேண்டாம்


இது நமது எதிர்காலம்


“கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தகவல் அளிக்க மறுப்பது குற்றம். அதற்கு தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது” என்று தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.


இந்தியாவின் எல்லைக்குள் இருக்கும் அனைவரது விவரமும் சேகரிக்கப்படும். இதில் இலங்கை, பர்மா அகதிகளும் இடம் பெறுவார்கள். எந்த கட்டிடமும், பகுதிகளும் விடுபடக் கூடாது என்பதற்தாக செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தின் வரை படங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணிக்காக ரூ.6 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வரும் பணியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளிக்க வேண்டியது பொதுமக்களின் கடமை மற்றும் கட்டாயமாகும். பொதுமக்கள் தகவல் அளிக்க மறுத்தால் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி குற்றமாகும். அவர்களுக்கு தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.


இந்த தகவல்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன், அவை அனைத்தும் கம்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, 2011ம் ஆண்டு முதல் ‘தேசிய அடையாள அட்டை’ வழங்கும் பணி நடைபெறும். எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை வெற்றிகரமாக செய்து முடிக்க, அனைவரும் கட்டாயம் ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 1800 3450 111 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

.

ஐ.டி. இல்லாவிட்டால் உள்ளே விடாதீர்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள், தங்களது அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருந்தால் மட்டுமே வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். வீடு பூட்டி இருந்தால் கணக்கெடுப்பு ஊழியர்கள் 45 நாட்களில் மீண்டும் ஏதாவது ஒரு நாள் வருவார்கள். ஊழியர்கள் வரும்போது வீட்டின் தலைவர் இல்லையென்றாலும், பொறுப்பான ஒருவர் பதில் கொடுத்தாலே போதுமானது. ஆண்டுக்கு 6 மாதத்துக்கு மேல் வசிக்கும் இடத்தைதான், தங்களது இருப்பிடமாக ஒருவர் தெரிவிக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட வீட்டில் அடையாள ஸ்டிக்கர் ஒட்டப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை சேகரித்த பின், அதற்கான ‘ஒப்புதல் சீட்டு’ (அக்னாலெஜ்மென்ட்) ஒன்றை ஊழியர்கள் கொடுப்பார்கள். அதை பொதுமக்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒப்புதல் சீட்டின் அடிப்படையில்தான் 2011ம் ஆண்டு 2ம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான புகைப்படம், கைரேகை உள்ளிட்ட தகவல் சேகரிக்கும் பணியும் நடைபெறும்

மனிதர்களே: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், கடவுளையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், கடவுள் அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - கடவுள் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!---குர்ஆன்9:24.
- ...

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா?

தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 1 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 2 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 3 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 4 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 5 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 6 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 7 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 8 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 9 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 10 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 11 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 12 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 13 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 14 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 15 தீவிரவாதம் முஸ்லீம்களின் தனி உடமையா? 16